Wednesday, January 5, 2011

தடிகொண்டு தாக்கினாலும், ஏகடியம் பேசினாலும்...


பிரச்சனைகளுக்கு பெயர் பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் மட்டுமே நாம் காணமுடிகிற விசித்திரம் நந்திக்கும், சந்நதிக்கும் நடுவே சுவர் இருக்கும். அதுவும் பின்னர் தனியாக கட்டப்பட்ட சுவர். கதவைக் கூட அகற்றாமல் அத்தனை அவசரமாக கட்டப்பட்ட சுவர். இந்தச் சுவர் எதற்காக “நந்தன் நுழைந்த தென்புறவாசல் இது. ஆகவே தீட்டுப் பட்டுவிட்டதென அடைத்துவிட்டார்கள்” என சட்டென பதில் வருகிறது. ஆனால் அவர்களிடம் கேட்டால், சும்மா என்கிறார்கள். சுவர்கள் சும்மா கட்டப்படுவதில்லை, உத்தப்புரம், பெரியார்நகர், எடமலைப்பட்டிபுதூர், சுல்தான் பேட்டை, நாகராஜபுரம் மக்களிடம் கேட்டால், சுவர்களின் கதைகள் புலப்படும். யார் இந்த நந்தன். தீண்டாமைக்கும், சமூக ஒடுக்குமுறைக்கும் எதிரான குரலாக, அடையாளமாக நந்தன் இருக்கிறார். நந்தன், நந்தனாராகி அறுபத்தி மூன்று நாயன்மார்களில் ஒருவராவதற்கு கொடுத்த விலை சாதாரணமானதன்று, உயிர்! இந்த நந்தனின் வாழ்க்கை நாம் சொல்கிற கதையல்ல, சேக்கிழார் சிதம்பரத்திலேயே அரங்கேற்றிய பெரிய புராணம் தரும் செய்திகளே.

ஆதனூர் கிராமத்தின் சேரி புலைப்பாடி. அதுவே நந்தனின் குடியிருப்பு. புலையர் என்னும் இழிசாதி பிறப்பு. இறந்த மாடுகளில் இருந்து என்னென்ன தேவையோ அவற்றை எடுத்துத் தருவதும், ஆண்டைகளின் நிலத்தில் உழைப்பதும் புலையர்களின் கடமை. இந்த புலைப்பாடி நந்தனுக்கு மேல்சாதி தெய்வமான நடராஜர் மீது பக்தி பிறக்கிறது. தீராத பக்தி. நாளை சிதம்பரம் செல்வேன் என வருடக்கணக்கில் கூறி வந்ததால் “திரு நாளைப்போவார்” எனவும் அழைக்கப்பட்டவர். நந்தனின் சிதம்பரப் பயணத்திற்கு தடைவிதிக்கும் நோக்கில் ஆண்டை “மாடு தின்னும் புலையா உனக்கு மார்கழி தரிசனம் ஒரு கேடா” என்றவாறே கொடுத்த மிகக் கடுமையான வேலைகள் அனைத்தையும் முடித்து ஒருநாள் சிதம்பரத்திற்கு பயணப்பட்டார்.

நடந்தே சிதம்பரம் சென்றவர் “ இன்னல் தரு இழிபிறவி இது தடை” என்று சிதம்பரம் ஊருக்குள் செல்ல தயங்கி எல்லையிலேயே சுற்றித் திரிந்தார். நந்தனின் பக்தியால் பரவசப்பட்ட நடராஜர், அவர் கனவில் தோன்றி “இப்பிறவி போய் நீங்க எரியினிடை நீ மூழ்கி முப்பிரிநூல் மார்பருடன் முன் அணைவாய்” என்றாராம். கையோடு தில்லைவாழ் மூவாயிரவர் கனவிலும் ஒருசேர தோன்றி நந்தனுக்காக எரி அமைக்க உத்தரவிட்டாராம். அம்பலத்தானவனே உத்தரவிட்டதால் அந்தணர்கள் எரி அமைத்தார்களாம். நந்தன் தீக்குள் இறங்கி பூணூல் அணிந்த முனிவராய் வெளிப்பட்டு, தென்புற வாசல் வழியாக நுழைய, உடனே நடராஜர் நந்தனை ஆட்கொண்டு விட்டாராம். இவ்வாறு நந்தன் கதையை முடிக்கிறது சேக்கிழாரின் பெரியபுராணம்.

கொஞ்சமும் தயக்கமின்றி இழிபிறப்பாளன், புலையன், பூணூல் அணிந்து மேல்நிலையானான், தீயில் இறங்கி ஜோதியானான் என அடுக்குகிறது பெரிய புராணம். பூணூல் ஒருபோதும் விடுதலைக்கான சின்னம் அல்ல. மரபு வழிப்பட்ட ஒடுக்குமுறைகளின் சின்னம் என்பதே உண்மை. ஆகவே சேக்கிழாரின் கூற்றை பகுத்தறிவின் துணை கொண்டு மறுவாசிப்பு செய்தால், இழி சாதியினர் என ஒதுக்கப்பட்டவர்களின் ஆலய வழிபாட்டு உரிமைக்காக போராடிய பெரும் கிளர்ச்சிக்காரரே நந்தன் என்பதையும், அவர் ஆலயத்திற்குள் பிரவேசித்ததால் தீயில் இறக்கப்பட்டார் என்பதையும் கோவிலின் தென்புறவாசல் பயன்பாட்டில் இருந்ததையும், அது சுவர் எழுப்பி மறைக்கப்பட்டதற்கு நந்தன் பிரவேசமே காரணம் என்பதையும் உணர முடிகிறது.

“ஆவுரித்து தின்னும் புலையரேனும் சிவநெறியில்
நிற்பாராயின் அவரே யான் வணங்கும் கடவுளென்று”
நந்தனாரை அறுபத்திமூன்று நாயன் மார்களில் ஒருவராக்கிவிட்டோம் என்று அவர்கள் பெருமிதப்படுவதற்கு ஒன்றுமில்லை. இது சிவநெறியின் பெருமையன்று, சாதிக் கொடுமையின் சிறுமை. அதன் சின்னமாகத்தான் இன்றும் நந்தன் சுவர் நிற்கிறது. ஆகவேதான் இந்தச் தீண்டாமைச்சுவர் அப்புறப்படுத்தப்பட வேண்டும் என போர்க்கோலம் தரிக்கிறோம்.

நாம் மட்டுமல்ல, நந்தனை மீட்டுருவாக்கம் செய்திடும் பணி மிக முன்னதாகவே துவங்கிவிட்டது. இந்த வரிசையில் பலரைக் குறிப்பிட்டாலும் இவர்களில் சாமி சகஜாநந்தர் மிக முக்கியமானவர். சிதம்பரத்திலேயே நந்தனுக்கு மடம் அமைத்து, நந்தன் பெயரால் கல்வி நிலையங்கள் நடத்தியவர்.

11.9.1927 ல் சிதம்பரத்திற்கு வருகை தந்த காந்தியை அழைத்து நந்தன் கோவிலுக்கு அடிக்கல் நாட்டினார். நந்தனின் வழிவந்தவர்கள் நடராஜர் கோவிலுக்குள் செல்ல முடியாது என்பதால் நந்தன் மடத்திலேயே சிவாலயம் கட்டினார். தலித் மக்கள் சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குள் வரக் கூடாது என்கிற தடையை தகர்க்க 1932 ல் மார்கழித் திருவிழாவின் போது ஏராளமான தலித் மக்களையும், மாணவர்களையும் அழைத்துக் கொண்டு ஆலய நுழைவிற்கு ஊர்வலமாக வந்தார். தேர் முட்டியருகே எதிர்ப்பாளர்கள் திரண்டு கல்வீசித்தாக்கி ஊர்வலத்தை தடுத்து விட்டனர். 1934 ல் சிதம்பரத்திற்கு மீண்டும் காந்தி வருகையின் போது தலித் மக்களோடு கோவிலுக்குள் வந்துவிடுவார் என்ற அச்சத்தில் கோவிலை மூடிவிட்டனர்.

ஊர் ஊராய் பணம் பறிக்கும் காந்தியே நீர் போம்!” என எழுதி ஒட்டியிருந்தனர். இப்போது இங்கு எந்தத் தீண்டாமையும் இல்லை, எவரும் உள்ளே வரலாம் என மார்தட்டுகிறவர்களே ஒரு நிமிடம், 1947 ஜனவரி 2ம் தேதியன்றுதான் சிதம்பரம் கோவில் தலித்துகளுக்காக திறக்கப்பட்டது. அதுவும் ஆன்மீக உணர்வில் அல்ல. 1947ல் உருவாக்கப்பட்ட ஆலயநுழைவுச் சட்டமே காரணம். அன்றைய தினத்தில் சிதம்பரம் கோவில் மட்டுமல்ல, திருப்பதி, திருவில்லிபுத்தூர், திருவரங்கம், திருவாரூர், காஞ்சி உள்ளிட்ட 140 பெரிய கோவில்களும் 8 சிறிய கோவில்களும் தலித் மக்களுக்காக திறந்து விடப்பட்டது, ஆகவே ஆலய நுழைவு என்பது எளிதாக நடந்து விடவில்லை, அது இரத்தம் தோய்ந்த வரலாறு.

இன்று நடைபெறும் ஆலய நுழைவு போராட்டங்களுக்கு முன்னோடி நந்தன். ஒடுக்கு முறைகளுக்கு எதிரான மாபெரும் பண்பாட்டு அடையாளமாக நிலைபெற்றுவிட்ட நந்தன் புதினமாக, நாடகமாக, கவிதையாக, ஆய்வுக்கட்டுரையாக, வில்லுப்பாட்டாக, கூத்துப்பாட்டாக மக்களிடம் வாழ்ந்து கொண்டிருக்கிறார். இன்னமும் அவன் பிறந்தானா? வாழ்ந்தானா? கோவிலுக்குள் நுழைந்தானா? என கேள்வி எழுப்புகிறவர்களே, நீங்கள் இதே கேள்வியை இதர நாயன்மார்களைப் பார்த்து எழுப்ப முடியுமா? என்பது எங்களது நியாயமான கேள்வி.

ஆலயத்தில் வழிபாட்டு உரிமை கோருவது ஆத்திகப் பிரச்சனை அல்ல, பண்பாட்டுப் பிரச்சனை. எனவேதான் நந்தன் தொடங்கிய போராட்டம் இன்று வரை தொடர்கிறது. நான் தலித் மக்களை ஆலயத்திற்குள் அழைத்துச் சென்றது கடவுள் மீதான நம்பிக்கையில் அன்று, அது சமூகத்தின் பொது நிறுவனம், ஆகவே அதில் எங்களுக்கு உரிமை வேண்டும் என நாசிக் காளாராம் கோவில் நுழைவுப்போராட்டத்திற்கு பிறகு அம்பேத்கர் அறிவித்தார். இதன்படியே இன்று தமிழ்நாட்டில் தலித்துகளுக்கு தடை விதிக்கப்பட்டிருக்கிற கோவில்களை நோக்கி நகர்கிறோம்.

இத்தருணத்தில் ஆலயத்தில் தலித் மக்களுக்கான உரிமைப் போராட்டத்தை முதலில் துவக்கிய நந்தனை இழிவுபடுத்தும் விதத்தில் சுவர் இருப்பது எவ்வகையிலும் நியாயமானதன்று. தலித் உள்ளங்களையும் ஜனநாயக உள்ளங்களையும் ரணப்படுத்தும் இந்த சுவர் உடனடியாக அப்புறப்படுத்தப்பட வேண்டும். அரசின் கையில் ஆலயம் வந்தபிறகும் நீதிமன்ற நிழலில் பதுங்குவது சமூக நீதியாகாது. அரூபமான சாதியத்தின் காட்சி வடிவமாக எழுப்பப்பட்டுள்ள தீண்டாமைச் சுவரை தகர்த்திட தில்லையில் நெடுங்காலமாகவே போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. 2010 ஜூலை 14 அன்று தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி 2000 தோழர்களுடன் கோவில் முன்பு கூடி சுவரை அகற்றக்கோரியது. அடுத்தகட்ட போராட்டத்திற்கு களம் அமைத்திட 6.1.11 அன்று சிதம்பரத்தை சுற்றியுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில், மக்களைத் திரட்டுவதற்காக பிரச்சாரப் பயணம் மேற்கொள்கிறது. அநீதியான சுவரை அகற்ற ஆயிரக்கணக்கான மக்களுடன் மீண்டும் வருவோம். தடிகொண்டு தாக்கினாலும், ஏகடியம் பேசினாலும் வரலாற்றின் பயணம் முன்னோக்கியே சுழலும். எரிதழலில் நின்றழைக்கும் நந்தனின் குரலை திசையெங்கும் சேர்ப்போம்! தீண்டாமைப் பெருஞ்சுவரை தகர்த்து சமூக நீதி காப்போம்.!!

-கே.சாமுவேல் ராஜ், பொதுச்செயலாளர் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி

0 comments:

Post a Comment

Labels

Coca Cola (1) Peak Oil (1) Permaculture (1) Power of Community (1) Renewable energy (1) Solar energy (1) SOPA (1) sustainable agriculture (1) அ.குமரேசன் (6) அங்காடிதெரு (1) அணு ஆற்றல் (2) அணுமின் (1) அண்ணா (4) அண்ணா நூலகம் (1) அதிர்ச்சி (1) அத்வானி (2) அந்நிய முதலீடு (2) அபிநயா (1) அப்துல் கலாம் (1) அப்பணசாமி (2) அமெரிக்கா (20) அம்பானி (1) அம்பேத்கர் (9) அரசியல் (177) அரசியல்.நிகழ்வுகள் (6) அரசு (14) அரசு மருத்துவமனை (1) அரசு விடுதி மாணவர்கள் (1) அரவான் (1) அருந்ததியர் (1) அர்ஜெண்டினா (1) அலசல் (1) அவலம் (19) அழகு (1) அறிமுகம் (1) அனுபவம் (28) அன்னா ஹசாரே (1) அஜயன் பாலா (1) ஆ.ராசா (1) ஆணையம் (2) ஆதவன் தீட்சண்யா (3) ஆப்கானிஸ்தான் (1) ஆப்பிரிக்கா (2) ஆர்.மீனா (1) ஆர்எஸ்எஸ் (2) ஆவணப்படம் (3) ஆனந்தன் (2) இ.எம்.ஜோசப் (1) இ.பா.சிந்தன் (22) இட ஓதுக்கீடு (3) இடஒதுக்கீடு (1) இடதுசாரிகள் (4) இணையம் (2) இதழ்கள் (6) இந்தியா (69) இந்துத்துவா (8) இந்துஜா (1) இமு (2) இமு டிச11 (5) இமு நவமபர் 2011 (6) இயக்கம் (7) இயக்குனர் ஷங்கர் (1) இரா.சிந்தன் (5) இரா.செழியன் (2) இரா.நடராஜன் (3) இராம.கோபாலன் (1) இல.சண்முகசுந்தரம் (2) இலக்கியம் (38) இலங்கை (6) இலங்கைத் தமிழர் (4) இலவசக் கல்வி (1) இலவசங்கள் (1) இளவரசன் கொலை (1) இளைஞர் முழக்கம் (11) இஷ்ரத் (2) இஸ்ரேல் ஆக்கிரமிப்பு (1) இஸ்லாம் (3) ஈராக் (1) ஈரான் (2) உ.வாசுகி (1) உச்ச நீதிமன்றம் (1) உணவு நெருக்கடி (2) உதயசங்கர் (1) உத்தப்புரம் (1) உயர்கல்வி (2) உரையாடல்கள் (2) உலக சினிமா (4) உலகமயம் (5) உலகம் (46) உளவியல் (1) உள்ளாட்சி (1) உள்ளாட்சித் தேர்தல் (1) ஊடகங்கள் (14) ஊடகம் (8) ஊழல் (30) எடியூரப்பா (1) எம்.எப்.ஹூசேன் (1) எம்.சிவக்குமார் (2) எரிசக்தி (1) எல்.கே.ஜி (1) என்.ஜி.ஓ (1) என்கவுண்டர் (1) எஸ். பாலா (1) எஸ்.கண்ணன் (1) எஸ்.கருணா (3) எஸ்.பி.ராஜேந்திரன் (3) எஸ்.வி.வேணுகோபாலன் (2) ஏகாதிபத்தியம் (13) ஏமன் (1) ஒபாமா (4) ஓம்பிரகாஷ் வால்மீகி (1) ஓளிப்பதிவு (1) ஃபாக்ஸ்கான் (1) கச்சத் தீவு (1) கட்டுரை (51) கட்டுரைகள் (2) கணிணி (2) கணினி தொழில் நுட்பம் (1) கமல்ஹாசன் (1) கம்யூனிசம் (12) கருணாநிதி (11) கருத்து சுதந்திரம் (1) கருத்துரிமை (3) கலைஞர் (6) கல்வி (14) கவிதை (21) கவிதைகள் (1) கறுப்புப்பணம் (3) கனிமொழி (2) காங்கிரஸ் (10) காதல் (2) கால்பந்து (1) காவல்துறை (4) காஷ்மீர் (1) கி.பார்த்திபராஜா (1) கிங்பிஷர் (1) கியூபா (4) கிரீஸ் (1) குடும்பம் (1) குட்டி ரேவதி (1) குப்பன் சுப்பன் (1) குலாத்தி (1) குழந்தைகள் (9) குழந்தைகள் கடத்தல் (1) குஜராத் கலவரம் (1) குஜராத் படுகொலைகள் (1) கூகிள் அந்தரங்கம் (1) கூடங்குளம் (2) கே.சாமுவேல்ராஜ் (1) கே.பாலமுருகன் (1) கேள்விகள் (1) கைப்பற்றுவோம் போராட்டம் (1) கோவில் (1) ச.தமிழ்ச்செல்வன் (1) ச.மாடசாமி (1) சக்திஜோதி (1) சங்கமம் (1) சசிகலா (1) சச்சின் (1) சட்டசபை (2) சட்டம் (4) சத்யஜித் ரே (1) சந்திரகாந்தன் (1) சமச்சீர் கல்வி (4) சமவூதியம் (1) சமூக நீதி (2) சமூக வலைத்தளம் (1) சமூகப் பாதுகாப்பு (2) சமூகம் (177) சம்பு (1) சரத் பவார் (1) சர்வதேச பெண்கள் தினம் (1) சல்மான் ருஷ்டி (1) சா.கந்தசாமி (2) சா.செயக்குமார் (1) சாகித்திய அகாதமி விருது (1) சாக்லேட் (1) சாதீயம் (4) சாரா விஜி (2) சாலிம் அலி (1) சி.பி.எம் (9) சிக்கிம் (1) சிந்தனை (5) சிபி (1) சிராஜுதீன் (1) சில்லரை வர்த்தகம் (4) சிறப்பு பொருளாதார மண்டலங்கள் (1) சிறுகதை (12) சினிமா (52) சினிமா செய்திகள் (4) சினிமாச் செய்திகள் (4) சீத்தாராம் யெச்சூரி (2) சு.பொ.அகத்தியலிங்கம் (2) சு.வெங்கடேசன் (1) சுகாதாரம் (1) சுதிர் ரா (1) சுயமரியாதைத் திருமணம் (1) சுவாரசியம் (1) சுற்றுப்புறச் சூழல் (3) சூர்யா (1) செம்மலர் (4) செம்மலர் அக் 2011 (4) செய்திகள் (112) சென்னை (1) சோவியத் (1) சோஷலிசம் (1) டெல்லி (2) டேம் 999 (1) த.தமிழரசி (1) தகவல் உரிமை (1) தகவல் திருட்டு (2) தண்ணீர் (3) தமிழக மீனவர்கள் (1) தமிழகம் (66) தமிழர் (1) தமிழ்ச் சினிமா (1) தமிழ்நதி (1) தமுஎகச (4) தலித் (21) தற்கொலை (1) தனியார்மயம் (4) தனுஷ் (1) தி.க (2) திமுக (1) திரிணாமுல் (1) திருப்பூர் (2) திருமணம் (2) திரைக்குப் பின்னால் (2) திரைத்துறை (1) திரைப்பட விழா (1) திரைப்படம் (4) தினகரன் (1) தினமணி (3) தீக்கதிர் (9) தீண்டாமை (22) தீண்டாமையின் அடையாளங்கள் (1) தீபாவளி (1) தேசியச் செய்திகள் (4) தேர்தல் (4) தொண்டு நிறுவனங்கள் (1) தொலைக்காட்சி (2) தொழிலாளர் (6) ந.பெரியசாமி (1) நகர்ப்புற விவசாயம் (1) நகைச்சுவை (1) நக்கீரன் (1) நதிம் சயித் (1) நந்தலாலா (1) நந்தன் (1) நரேந்திர மோடி (6) நலத்திட்டங்கள் (2) நவம்பர் புரட்சி (1) நாடகம் (1) நாடாளுமன்றத் தேர்தல் 2014 (2) நாணய மதிப்பு (1) நாறும்பூநாதன் (1) நிகழ்வுகள் (154) நிலப்பிரபுத்துவம் (1) நிலமோசடி (1) நீதித்துறை (2) நீலவேந்தன் (2) நுகர்வுக் கலாச்சாரம் (2) நூல் அறிமுகம் (12) நூல் வெளியீடுகள் (1) நெல்சன் மண்டேலா (1) நேட்டோ (2) நையாண்டி (26) நையாண்டி் (14) ப.சிதம்பரம் (3) பசுபதி (1) படுகொலை (3) படைப்புகள் (2) பட்ஜெட் (1) பணவீக்கம் (2) பதிவர் வட்டம் (3) பதிவர்வட்டம் (1) பதிவுலகம் (1) பரிந்துரைகள் (5) பழங்குடி (1) பள்ளிக்கூடம் (1) பறவைகள் (1) பன்னாட்டுக் கம்பெனிகள் (3) பா.ஜ.க (3) பாகிஸ்தான் (2) பாடல் (5) பாதல் சர்க்கார் (1) பாதுகாப்பு (1) பாரதி (2) பாலபாரதி (1) பாலஸ்தீனம் (1) பாலியல் வன்முறை (6) பாலு மகேந்திரா (1) பால் சமத்துவம் (1) பாஜக (1) பி.சுகந்தி (1) பி.ராமமூர்த்தி (1) பிடல் காஸ்ட்ரோ (3) பிரணாப் முகர்ஜி (1) பிரபாத் பட்நாயக் (3) பிரளயன் (2) பிரிட்டன் (1) பிர்தவ்ஸ் ராஜகுமாரன் (1) பிளின் (1) பு.பெ.நவமபர் 2011 (1) புகைப்படங்கள் (1) புதிய பரிதி (2) புது விசை (12) புதுமை (1) புத்தக அறிமுகம் (2) புத்தகக் கண்காட்சிகள் (2) புத்தகம் (18) புத்தகம் பேசுது (17) புத்தகம் பேசுது நவம்பர் 2011 (8) புத்தகாலயம் (2) புத்தாண்டு (1) புபே (2) புபே டிச11 (8) புரட்சி (2) புவி (1) புவி டிச11 (5) புவி நவ 2011 (7) புனைவு (1) புஷ் (1) பெட்ரோல் (7) பெண் (11) பெண் விடுதலை (1) பெண்குழந்தை (1) பெண்ணியம் (9) பெண்ணெழுத்து (1) பெரியார் (2) பெருமுதலாளிகள் (7) பேட்டி (2) பேரா.சிவசுப்பிரமணியன் (2) பேஸ்புக் (1) பொருளாதார நெருக்கடி (2) பொருளாதாரம் (24) போக்குவரத்து (1) போராட்டம் (15) போலீஸ் தாக்குதல் (3) ப்ரிசம் (4) ப்ரிசம் - தகவல் திருட்டு (7) ப்ரியா தம்பி (1) மக்களுக்கான மருத்துவம் (1) மக்கள் நலப்பணியாளர்கள் (2) மக்கானா (1) மத அடிப்படை வாதம் (1) மதவெறி (3) மதுசூதனன் (1) மம்தா (3) மம்முட்டி (1) மரபணு (1) மலாலாய் சோயா (1) மவோயிஸ்டுகள் (1) மன்மதன் அம்பு (1) மன்மோகன்சிங் (10) மா ற்று (1) மாட்டுக்கறி (1) மாதர் சங்கம் (1) மாதவராஜ் (2) மாவோ (1) மாற்ற (1) மாற்று (223) மின்கட்டணம் (1) மின்சாரம் (1) மீள்பார்வை (2) முதலாளி (1) முதலாளித்துவம் (11) முத்தமாக மாறேன் (1) முத்துக்கண்ணன் (1) முல்லைப் பெரியாறு (7) முறைகேடுகள் (5) மெகாசீரியல் (1) மே.வங்க அரசு (1) மே.வங்கம் (1) மேதினம் (1) மேற்கு வங்கம் (1) மொக்கை (1) மொழி (2) மொழிபெயர்ப்பு (1) மோசடி (1) மோடி (3) மோனிகா (1) யுத்தம் (2) ரத யாத்திரை (1) ரமேஷ் பாபு (2) ராகுல் காந்தி (2) ராடியா (2) ராஜ பக்‌ஷே (1) ரிலையன்ஸ் (1) ருமேனியா (1) லட்சுமணப்பெருமாள் (2) லெனின் (2) லோக்பால் (5) வசந்த பாலன் (1) வண்ணக்கதிர் (1) வரலாறு (19) வலைப்பூக்கள் (1) வழக்கு விசாரணை (1) வாசிப்பு (5) வாச்சாத்தி (1) வால் ஸ்டிரிட் (3) வால்மார்ட் (1) வால்ஸ்டிரிட் போராட்டம் (2) வாழ்க்கை (4) வானியல் (2) விக்கிபீடியா (1) விக்கிலீகஸ் (1) விக்கிலீக்ஸ் (7) விஞ்ஞானம் (2) விமர்சனம் (10) விலையேற்றம் (2) விலைவாசி (11) விலைவாசி உயர்வு (2) விவாதங்கள் (1) விவாதம் (9) விளம்பரம் (1) விளையாட்டு (4) வினவு (1) விஜய் (2) விஜய் மல்லையா (1) வீட்டுவசதி வாரியம் (1) வீரமணி (2) வெண்மணி (2) வெள்ளம் (2) வெனிசுவெல்லா (1) வேலையின்மை (2) வோடாபோன் (1) ஜப்பான் நெருக்கடி (2) ஜாக்கிசான் (1) ஜாதி (1) ஜாபர் பனாகி (1) ஜூலியன் அசாங்க (1) ஜெயலலிதா (9) ஜோதிடம் (1) ஸ்டீவ் ஜாப்ஸ் (1) ஸ்பீல்பர்க் (2) ஸ்பெக்ட்ரம் (6)