Tuesday, January 4, 2011

பர்மியப் போராளிகள்: உலுக்கும் கேள்விகள்


ஜார்ஜ் பெர்னாண்டஸ் பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்த பொழுது வட கிழக்கு மாநிலங்களில் ஆயுதம் கடத்துவோருடன் அவருக்கு தொடர்பு உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. சில மாதங்கள் இச்செய்தி பரபரப் பாக பேசப்பட்டது. அப்புறம் வழக்கம் போல் இதனை இந்திய சமூகம் மறந்துவிட்டது.

உண்மையில் அவர்கள் ஆயுதக்கடத்தல் காரர்கள் இல்லை. பர்மாவின் ராணுவ சர்வாதிகாரத்திற்கு எதிராக போராடும் போராளிகள். அவர்களை நம்ப வைத்து வஞ்சித்த வர் இந்தியாவின் உயர் ராணுவ அதிகாரி லெப்டினன்ட் கர்னல் கிரேவால் என்பதை எத்தனை பேர் அறிவர்?

கண்ணால் காண்பதும் பொய்; காதால் கேட்பதும் பொய்; பத்திரிகைகளில் வந்த செய்திகளும் பொய்; தீர விசாரித்து அறிவதே மெய். ஆம். இந்த விவகாரம் நமக்கு உணர்த்துவது இதைத்தான்.

இன்னும் இந்தியச் சிறைகளில் வாடும் அந்த 36 பர்மியப் போராளிகள் கதையைத் துருவிப் பார்த்தால், திகி லூட்டும் திருப்பங்கள் நிறைந்த துப்பறியும் புனை கதை களை விஞ்சும் மர்ம முடிச்சுகள் நிரம்பக்கிடக்கின்றன.

வஞ்சகம் என்பதின் முழுப் பொருளாய் அந்த ராணுவ அதிகாரி இருந்தார் என்பது மட்டுமல்ல; இந்திய ராணுவத்தில் பணியாற்றிக்கொண்டே பர்மிய ராணுவ ஆட்சிக்கு உளவு பார்த்தார், சேவகம் செய்தார் என்பதை படிக்கிறபோது அதிர்ச்சியும் பல ஆழமான கேள்விகளும் நம்முள் எழும்.

நந்திதா ஹச்சர் எழுதிய ‘வஞ்சக உளவாளிகள்’ என்ற நூல் ‘பர்மா போராளிகளை ஏமாற்றிய இந்திய ராணுவம்’ என்கிற துணைத் தலைப்போடு நம்மிடம் நூலின் உள்ளடக்கத்தை பகிரங்கப்படுத்திவிடுகிறது. ஆயினும் ஒவ்வொரு பக்கமும் மர்மக் கதைபோல் நம்மை இழுத்துச் செல்கிறது.

இந்நூல் அந்த 36 பர்மியப் போராளிகள் விடு தலைக்கான போராட்டங்களை விவரிக்கிற முயற்சிதான். அதுதான் இந்நூலின் அடிப்படை நீரோட்டம். ஆயினும் பர்மாவின் வரலாறும் அங்கு ஜனநாயகத்துக்காக தொடரும் கிளர்ச்சிகளும் இந்நூல் நெடுக விரவிக் கிடக்கிறது. இந்தியாவின் வெளிநாட்டுக் கொள்கையில் ஏற்பட்ட தடுமாற்றமும், மாற்றமும் பர்மாவின் ஜன நாயகப் போராட்டங்களை சிக்கலாக்கிவிட்டதையும் அத் தோடு பிணைந்த பல்வேறு அரசியல் சிக்கல்கள் முடிச்சு களையும் இந்நூல் பேசுகிறது.

ஆக பர்மா போராளிகள் சிறைப்பட்ட கதை - பர்ம ஜன நாயகப் போராட்ட கதை - இந்திய வெளியுறவு கொள்கை குழப்பக்கதை என மூன்றும் கலந்ததே இந்நூல் எனில் மிகை அல்ல.

“அண்டை நாட்டில் சர்வாதிகாரம் கோலோச்சுகிற போது நம் நாட்டில் ஜனநாயகம் இருக்க முடியுமா? ஜன நாயகத்தை மீட்க பர்மிய மக்கள் நடத்தி வரும் போராட் டத்துக்கு ஆதரவு அளிப்பது நம் தார்மீகக் கடமை என்று தனிப்பட்ட முறையில் நம்புகிறேன்” என்று கேப்டன் லட்சுமி முன்னுரையில் கூறியிருப்பது பொருள்மிக்கது. இவர் இடதுசாரி கட்சிகள் சார்பில் இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட்டு தோற்றவர். ஆனால் வெற்றி பெற்ற அப்துல் கலாம், பர்மா இராணுவ ஆட்சியோடு கைகுலுக்கினார் என்பதும் சம்பந்தம் இல்லாத செய்தி கள் அல்லவே.

பர்மாவில் ஏன் இன்னும் ராணுவ ஆட்சி நீடிக்கிறது? பர்மாவில் தொடரும் அரசியல் கிளர்ச்சிகள் மிருகத் தனமாக நசுக்கப்படும்போதும் உலக நாடுகள் மவுனம் காப்பது ஏன்? ஆங் சான் சூகி இன்னும் வீட்டுச் சிறையில் இருப்பது ஏன்? விருதுகள் வழங்கி அவரைக் கவுரவித்த இந்திய அரசு தற்போது ராணுவ சர்வாதிகாரியுடன் கூடிக் குலவுவது ஏன்? வங்கதேச விடு தலைக்கு ஆதரவுக்கரம் நீட்டிய இந்திய அரசு பர்மாவில் கைகட்டி வேடிக்கை பார்ப்பது ஏன்? அமெரிக்க ஏகாதிபத்தியம் எப்படி ராணுவ ஆட்சியை ஆதரிக்கிறது? சீனா அங்கு சர்வாதிகார ஆட்சிக்கு துணை போவது ஏன்? அப்பப்பா புற்றீசல்போல் புறப் படும் கேள்விகள் பலவற்றுக்கு இந் நூல் விடை தேட முயன்று இருக்கிறது. அது இந்நூலின் மையப் பொருளல்ல, எனினும் இணைத்து பேசியிருப்பது தவிர்க்க இயலாத தேவையின் கட்டாயமே!

பர்மாவின் பெயர் மியான்மர் எனவும், ரங்கூன் நகர் யாங்கோன் எனவும் மாற்றப்பட்டது கூட ஒரு உள்நோக்கம் கொண்டது. பர்மா எனும் தேசம் உருவாக காத்தூலே என்ற தேசம் பலியிடப்பட்டதி லிருந்தே சோகம் தொடங்குகிறது. பர்மாவின் வரலாறு பல்வேறு இனக்குழுக்களின் சுயஅடையாளத்தை அழித்து உருவானதா? அல்லது ஐக் கியத்தில் உருவானதா? இதை புரிந்துகொள்ள இந்நூல் உதவும்.

“ரங்கூனிலோ, தில்லியிலோ, வாஷிங்டனிலோ உட்கார்ந்து கொண்டு வரலாற்றைப் படிப்பது வேறு; கோஹிமா, ஹர்லேம் அல்லது மனேர்ப்ளா போன்ற ஊர்களில் இருந்துகொண்டு வரலாற்றைப் புரிந்து கொள்வது வேறு. நான் கரோனியர்களுக்காகவும், ஆரக்கானியர்களுக் காகவும் வாதாடுகிறேன். ஆகவே அவர்கள் எவ்வாறு அனுபவித்தார்களோ அவ்வாறே அரசியலையும் வர லாற்றையும் நான் புரிந்து கொண்டாக வேண்டும்” என நூலாசிரியர் உறுதியாகக் கூறுகிறார். இவர் விடுதலைக் காக குரல் கொடுக்கும் இந்த 36 பேரும் ஆரக்கானியர்களும் கரேனியர்களும் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ?

பர்மாவுக்கும் நமது வடகிழக்கு மாநிலங்களுக்கும் உள்ள தொடர்பு எல்லை வழி பூகோளத் தொடர்பு மட்டுமா? அல்லது அதற்கும் மேலா?

நூலாசிரியர் தன் அனுபவத்தை கீழ்க்கண்டவாறு ஓரிடத்தில் பதிவு செய்கிறார், “வடகிழக்கு மாநிலங்க ளைச் சேர்ந்த மாணவர்கள் மற்றவர்களோடு ஒரே விடுதியில் இருந்தாலும் வெவ்வேறு உலகங்களில்தான் வாழ்ந்து கொண்டிருந்தார்கள் என்பதை நான் பார்த்தேன்”.

இது மிகவும் நுட்பமான பதிவு. இந்தியாவின் மாநிலங்களாக தொடர்ந்தாலும் வடகிழக்கு மாநில மக்களா யினும் காஷ்மீர் மக்களாயினும் நம்மோடு வாழாமல் அவர்களுக்கான ஓர் உலகில் வாழ்வது ஏன்? யாரோ தூண்டிவிடுவதால் மட்டும்தானா? அப்படி நாம் நம் பினால் முட்டாள்களின் சொர்க்கத்தில் வாழ்கிறோம் என்றே பொருள். தேசிய இனப்பிரச்சனைகள் பர்மா வாயினும், இந்தியாவாயினும் புதிய வடிவம் கொள்வது குறித்து ஆய்வு செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது.

எண்ணை வளமும் வர்த்தக நலனும் ஒரு நாட்டின் வெளிநாட்டுக்கொள்கையில் ஆதிக்கம் செலுத்தும் போது மக்களின் சுயவிருப்பங்கள் காலில் போட்டு மிதிக்கப்படுவதுதானே நிகழும். இதன் கோரப்பலியே 36 பர்மாக் கைதிகள் சிறைபட்டதும்; அவர்களின் தலை வர்கள் இந்திய தீவொன்றில் சுட்டுக் கொல்லப்பட்டதும்; ஒரு ராணுவ அதிகாரியால் மோசமாக வஞ்சிக்கப்பட்ட தும்; அந்த அதிகாரி தப்பிச் சென்று தண்டனையின்றி சுகபோகத்தில் திளைப்பதும். இந்நூலில் நன்கு பதிவாகியுள்ளது.

ஜனநாயகத்துக்காக பர்மாவில் நடக்கும்போரில் துறவிகள் பங்கேற்றது ஆச்சரியமான விஷயம். ஆனால் நிலைமை அவ்வளவு முற்றிபோயுள்ளது. அங்கே ராணுவ சர்வாதிகாரத்திற்கு எதிரான போராட்டத்தில் ஆயுதங்கள் மட்டுமல்ல. ஜட்டிகளும் ஆயுதமானது வேடிக்கையானது. மக்களின் உணர்வை வெளிப்படுத் தும் அளவுகோலாகும்.

பெண்களின் உள்ளாடைகளை வைத்திருக்கும் ஆண்கள் தங்கள் வலிமையை இழந்துவிடுவார்கள் என் பது பர்மாவின் பழமையான மூடநம்பிக்கை. ராணுவ சர்வாதிகாரிகளும் இதற்கு விதிவிலக்கல்ல. இதனைப் பயன்படுத்திக் கொண்டு பெண்கள் தங்கள் உள்ளாடைகளை ராணுவ சர்வாதிகாரிகளுக்கு தபாலில் அனுப்பும் “அமைதிக்கான ஜட்டிகள்” இயக்கம் நூலில் இடம் பெற்றுள்ள கொசுறுச் செய்தி. எனினும் கொதி நிலையை காட்டும் செய்தி.

பர்மாவின் நண்பனாக காட்சி அளித்த `அங்கிள்’ என அழைக்கப்பட்ட ஜார்ஜ் பெர்னாண்டஸ் ஏன் திடீ ரென மாறினார்? தேசபக்தி மிக்கவர் எனக் கருதப்படு கிற விஷ்ணுபகத் தளபதி பொறுப்பிலிருந்து ஏன் நீக்கப் பட்டார்? நேர்மையான தளபதி என பெயரெடுத்த விஷ்ணு பகத் மோசமான ஊழல் ராணுவ அதிகாரி என்ற கூறப் பட்ட விவகாரத்தில் வாய் மூடி இருந்தது ஏன்? அடே யப்பா..... தோண்டத் தோண்ட கேள்விகள். ‘மனித உரிமை’ பற்றிய பேச்சு கானல் நீர் தானோ?

வெறும் துரோகம், வஞ்சகம், ஏமாற்று, அவமானம், இவைகளின் வரலாறாக மட்டுமல்ல; தோள்கொடுக்க முன்வரும் இடதுசாரிகள், துணை நிற்கும் மனித நேயர்கள் பற்றிய செய்திகளும் நாமறிய வேண்டிய முக்கிய அம்சங்களே.

“தாவர உணவுக்காரரான அந்த ஹரியானா விவசாயிக்கு தன் வீட்டில் குடியிருக்கும் மாட்டுக்கறி உண்ணும் ஆப்கானியரோடு எந்தச் சிக்கலும் இல்லை. அந்த இஸ்லாமியர் பர்மாவிலிருந்து வந்த பன்றிக்கறி சாப்பிடுபவரை அன்புடன் வரவேற்கிறார் (உணவளிக் கிறார்). அதை கவனித்த நான் சமூகப் பணியாளர்க ளிடம் ‘இதையெல்லாம் அரசாங்கத்துக்குச் சொல்லி விட வேண்டாம். அவர்களுக்குத் தெரியவந்தால் அந்த விவசாயியின் வீட்டுக்குள்ளேயே ஒரு மதக்கலவரத் தைத் தூண்ட ஏற்பாடு செய்துவிடுவார்கள்! என்றேன்:!” இவ் வாறு நூலாசிரியர். ஓரிடத்தில் குறிப்பிட்டுள்ளார். இந்த சின்ன சம்பவம் பல பெரிய செய்திகளை கூறவில்லையா?

இந்த நூலைப் படிக்கிறபோது பல ஐயங்கள் எழும். இந்திய ராணுவக் கொள்கையும், வெளிநாட்டுக் கொள் கையும் ஆபத்தான திசையில் வேகமாக சென்று கொண்டிருக்கின்றன. இது நமது இயல்புக்கு முரணா னது. புதிய உலகச் சூழலில் தாராளமயத்தின் விளைவு இது.

பர்மா - இந்திய மக்கள் உறவு தொப்புள்கொடி உறவு போன்றது. ஆனால் இந்தியா துரோகம் செய்கிறது. அப்படியெனில் இங்கே தெற்கே இலங்கைத் தமிழர் நம் தொப்புள்கொடி உறவுக்கு இந்திய அரசும் இந்திய ராணுவமும் நியாயம் வழங்கி இருக்கும் என்று நம்ப முடியுமா? என்னுள் நெடுநாள் ஆழமாக பதிந்த சந்தேகம் இந்நூல் மூலம் மேலும் வலுப்பட்டது.

ஜான்பெர்கின்ஸ் எழுதிய “ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்கு மூலம்” என்ற நூலைப் போல இந்த நூலும் நடப்பு அரசியலை புரிந்து கொள்ள விழிகளைத் திறக்கும் சாவியாகும் என்பதில் ஐயமில்லை.

இது மொழிபெயர்ப்பு நூல் என்பதை அட்டையில் தமிழில் அ. குமரேசன் என்று போட்டுள்ளதால் மட்டு மே அறிய முடியும். நூலைப்படிக்கிற யாரும் மொழி பெயர்ப்பென்று கூற முடியாது. அப்படியொரு நீரோட்ட நடை. அ. குமரேசனுக்கு பாராட்டுகள்!

வஞ்சக உளவாளி

-பர்மா போராளிகளை ஏமாற்றிய

இந்திய ராணுவம், நந்திதா ஹச்சர்.

தமிழில்: அ. குமரேசன், கிழக்குப் பதிப்பகம்

33/15 எல்டாம்ஸ் சாலை,

ஆழ்வார்பேட்டை, சென்னை-600 018.

பக். 228, விலை ரூ. 170

1 comment:

  1. இந்திய ஆட்சியாளர்கள் வங்காள தேச உதயத்துக்கு உதவியது ஜனநாயக உணர்வால் அல்ல;பாகிஸ்தானை பலவீனப் படுத்தவே!
    கொசுறு:உலகின் பிற பகுதிகளில் அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்திய நாடுகள் என்ன அக்கிரமம் செய்தாலும் அது பற்றி வாய் திறக்க வம்படியாய் மறுத்து வருகிற தமிழ்த் தேசிய வாதிகள் இலங்கையில் நடக்கிற இன ஒடுக்கலைத் தடுக்க இந்த உலகமே திரள வேண்டும் என வற்புறுத்துவதை எவ்வாறு புரிந்து கொள்வது? எனக்குத் தெரிந்தவரை இந்திய சுதந்திரப் போராட்ட காலத்திலிருந்து இன்று வரை தொடரும் அவர்களின் ஏகாதிபத்திய அடிவருடித்தனம்தான் அதற்குக் காரணம்!

    ReplyDelete

Labels

Coca Cola (1) Peak Oil (1) Permaculture (1) Power of Community (1) Renewable energy (1) Solar energy (1) SOPA (1) sustainable agriculture (1) அ.குமரேசன் (6) அங்காடிதெரு (1) அணு ஆற்றல் (2) அணுமின் (1) அண்ணா (4) அண்ணா நூலகம் (1) அதிர்ச்சி (1) அத்வானி (2) அந்நிய முதலீடு (2) அபிநயா (1) அப்துல் கலாம் (1) அப்பணசாமி (2) அமெரிக்கா (20) அம்பானி (1) அம்பேத்கர் (9) அரசியல் (177) அரசியல்.நிகழ்வுகள் (6) அரசு (14) அரசு மருத்துவமனை (1) அரசு விடுதி மாணவர்கள் (1) அரவான் (1) அருந்ததியர் (1) அர்ஜெண்டினா (1) அலசல் (1) அவலம் (19) அழகு (1) அறிமுகம் (1) அனுபவம் (28) அன்னா ஹசாரே (1) அஜயன் பாலா (1) ஆ.ராசா (1) ஆணையம் (2) ஆதவன் தீட்சண்யா (3) ஆப்கானிஸ்தான் (1) ஆப்பிரிக்கா (2) ஆர்.மீனா (1) ஆர்எஸ்எஸ் (2) ஆவணப்படம் (3) ஆனந்தன் (2) இ.எம்.ஜோசப் (1) இ.பா.சிந்தன் (22) இட ஓதுக்கீடு (3) இடஒதுக்கீடு (1) இடதுசாரிகள் (4) இணையம் (2) இதழ்கள் (6) இந்தியா (69) இந்துத்துவா (8) இந்துஜா (1) இமு (2) இமு டிச11 (5) இமு நவமபர் 2011 (6) இயக்கம் (7) இயக்குனர் ஷங்கர் (1) இரா.சிந்தன் (5) இரா.செழியன் (2) இரா.நடராஜன் (3) இராம.கோபாலன் (1) இல.சண்முகசுந்தரம் (2) இலக்கியம் (38) இலங்கை (6) இலங்கைத் தமிழர் (4) இலவசக் கல்வி (1) இலவசங்கள் (1) இளவரசன் கொலை (1) இளைஞர் முழக்கம் (11) இஷ்ரத் (2) இஸ்ரேல் ஆக்கிரமிப்பு (1) இஸ்லாம் (3) ஈராக் (1) ஈரான் (2) உ.வாசுகி (1) உச்ச நீதிமன்றம் (1) உணவு நெருக்கடி (2) உதயசங்கர் (1) உத்தப்புரம் (1) உயர்கல்வி (2) உரையாடல்கள் (2) உலக சினிமா (4) உலகமயம் (5) உலகம் (46) உளவியல் (1) உள்ளாட்சி (1) உள்ளாட்சித் தேர்தல் (1) ஊடகங்கள் (14) ஊடகம் (8) ஊழல் (30) எடியூரப்பா (1) எம்.எப்.ஹூசேன் (1) எம்.சிவக்குமார் (2) எரிசக்தி (1) எல்.கே.ஜி (1) என்.ஜி.ஓ (1) என்கவுண்டர் (1) எஸ். பாலா (1) எஸ்.கண்ணன் (1) எஸ்.கருணா (3) எஸ்.பி.ராஜேந்திரன் (3) எஸ்.வி.வேணுகோபாலன் (2) ஏகாதிபத்தியம் (13) ஏமன் (1) ஒபாமா (4) ஓம்பிரகாஷ் வால்மீகி (1) ஓளிப்பதிவு (1) ஃபாக்ஸ்கான் (1) கச்சத் தீவு (1) கட்டுரை (51) கட்டுரைகள் (2) கணிணி (2) கணினி தொழில் நுட்பம் (1) கமல்ஹாசன் (1) கம்யூனிசம் (12) கருணாநிதி (11) கருத்து சுதந்திரம் (1) கருத்துரிமை (3) கலைஞர் (6) கல்வி (14) கவிதை (21) கவிதைகள் (1) கறுப்புப்பணம் (3) கனிமொழி (2) காங்கிரஸ் (10) காதல் (2) கால்பந்து (1) காவல்துறை (4) காஷ்மீர் (1) கி.பார்த்திபராஜா (1) கிங்பிஷர் (1) கியூபா (4) கிரீஸ் (1) குடும்பம் (1) குட்டி ரேவதி (1) குப்பன் சுப்பன் (1) குலாத்தி (1) குழந்தைகள் (9) குழந்தைகள் கடத்தல் (1) குஜராத் கலவரம் (1) குஜராத் படுகொலைகள் (1) கூகிள் அந்தரங்கம் (1) கூடங்குளம் (2) கே.சாமுவேல்ராஜ் (1) கே.பாலமுருகன் (1) கேள்விகள் (1) கைப்பற்றுவோம் போராட்டம் (1) கோவில் (1) ச.தமிழ்ச்செல்வன் (1) ச.மாடசாமி (1) சக்திஜோதி (1) சங்கமம் (1) சசிகலா (1) சச்சின் (1) சட்டசபை (2) சட்டம் (4) சத்யஜித் ரே (1) சந்திரகாந்தன் (1) சமச்சீர் கல்வி (4) சமவூதியம் (1) சமூக நீதி (2) சமூக வலைத்தளம் (1) சமூகப் பாதுகாப்பு (2) சமூகம் (177) சம்பு (1) சரத் பவார் (1) சர்வதேச பெண்கள் தினம் (1) சல்மான் ருஷ்டி (1) சா.கந்தசாமி (2) சா.செயக்குமார் (1) சாகித்திய அகாதமி விருது (1) சாக்லேட் (1) சாதீயம் (4) சாரா விஜி (2) சாலிம் அலி (1) சி.பி.எம் (9) சிக்கிம் (1) சிந்தனை (5) சிபி (1) சிராஜுதீன் (1) சில்லரை வர்த்தகம் (4) சிறப்பு பொருளாதார மண்டலங்கள் (1) சிறுகதை (12) சினிமா (52) சினிமா செய்திகள் (4) சினிமாச் செய்திகள் (4) சீத்தாராம் யெச்சூரி (2) சு.பொ.அகத்தியலிங்கம் (2) சு.வெங்கடேசன் (1) சுகாதாரம் (1) சுதிர் ரா (1) சுயமரியாதைத் திருமணம் (1) சுவாரசியம் (1) சுற்றுப்புறச் சூழல் (3) சூர்யா (1) செம்மலர் (4) செம்மலர் அக் 2011 (4) செய்திகள் (112) சென்னை (1) சோவியத் (1) சோஷலிசம் (1) டெல்லி (2) டேம் 999 (1) த.தமிழரசி (1) தகவல் உரிமை (1) தகவல் திருட்டு (2) தண்ணீர் (3) தமிழக மீனவர்கள் (1) தமிழகம் (66) தமிழர் (1) தமிழ்ச் சினிமா (1) தமிழ்நதி (1) தமுஎகச (4) தலித் (21) தற்கொலை (1) தனியார்மயம் (4) தனுஷ் (1) தி.க (2) திமுக (1) திரிணாமுல் (1) திருப்பூர் (2) திருமணம் (2) திரைக்குப் பின்னால் (2) திரைத்துறை (1) திரைப்பட விழா (1) திரைப்படம் (4) தினகரன் (1) தினமணி (3) தீக்கதிர் (9) தீண்டாமை (22) தீண்டாமையின் அடையாளங்கள் (1) தீபாவளி (1) தேசியச் செய்திகள் (4) தேர்தல் (4) தொண்டு நிறுவனங்கள் (1) தொலைக்காட்சி (2) தொழிலாளர் (6) ந.பெரியசாமி (1) நகர்ப்புற விவசாயம் (1) நகைச்சுவை (1) நக்கீரன் (1) நதிம் சயித் (1) நந்தலாலா (1) நந்தன் (1) நரேந்திர மோடி (6) நலத்திட்டங்கள் (2) நவம்பர் புரட்சி (1) நாடகம் (1) நாடாளுமன்றத் தேர்தல் 2014 (2) நாணய மதிப்பு (1) நாறும்பூநாதன் (1) நிகழ்வுகள் (154) நிலப்பிரபுத்துவம் (1) நிலமோசடி (1) நீதித்துறை (2) நீலவேந்தன் (2) நுகர்வுக் கலாச்சாரம் (2) நூல் அறிமுகம் (12) நூல் வெளியீடுகள் (1) நெல்சன் மண்டேலா (1) நேட்டோ (2) நையாண்டி (26) நையாண்டி் (14) ப.சிதம்பரம் (3) பசுபதி (1) படுகொலை (3) படைப்புகள் (2) பட்ஜெட் (1) பணவீக்கம் (2) பதிவர் வட்டம் (3) பதிவர்வட்டம் (1) பதிவுலகம் (1) பரிந்துரைகள் (5) பழங்குடி (1) பள்ளிக்கூடம் (1) பறவைகள் (1) பன்னாட்டுக் கம்பெனிகள் (3) பா.ஜ.க (3) பாகிஸ்தான் (2) பாடல் (5) பாதல் சர்க்கார் (1) பாதுகாப்பு (1) பாரதி (2) பாலபாரதி (1) பாலஸ்தீனம் (1) பாலியல் வன்முறை (6) பாலு மகேந்திரா (1) பால் சமத்துவம் (1) பாஜக (1) பி.சுகந்தி (1) பி.ராமமூர்த்தி (1) பிடல் காஸ்ட்ரோ (3) பிரணாப் முகர்ஜி (1) பிரபாத் பட்நாயக் (3) பிரளயன் (2) பிரிட்டன் (1) பிர்தவ்ஸ் ராஜகுமாரன் (1) பிளின் (1) பு.பெ.நவமபர் 2011 (1) புகைப்படங்கள் (1) புதிய பரிதி (2) புது விசை (12) புதுமை (1) புத்தக அறிமுகம் (2) புத்தகக் கண்காட்சிகள் (2) புத்தகம் (18) புத்தகம் பேசுது (17) புத்தகம் பேசுது நவம்பர் 2011 (8) புத்தகாலயம் (2) புத்தாண்டு (1) புபே (2) புபே டிச11 (8) புரட்சி (2) புவி (1) புவி டிச11 (5) புவி நவ 2011 (7) புனைவு (1) புஷ் (1) பெட்ரோல் (7) பெண் (11) பெண் விடுதலை (1) பெண்குழந்தை (1) பெண்ணியம் (9) பெண்ணெழுத்து (1) பெரியார் (2) பெருமுதலாளிகள் (7) பேட்டி (2) பேரா.சிவசுப்பிரமணியன் (2) பேஸ்புக் (1) பொருளாதார நெருக்கடி (2) பொருளாதாரம் (24) போக்குவரத்து (1) போராட்டம் (15) போலீஸ் தாக்குதல் (3) ப்ரிசம் (4) ப்ரிசம் - தகவல் திருட்டு (7) ப்ரியா தம்பி (1) மக்களுக்கான மருத்துவம் (1) மக்கள் நலப்பணியாளர்கள் (2) மக்கானா (1) மத அடிப்படை வாதம் (1) மதவெறி (3) மதுசூதனன் (1) மம்தா (3) மம்முட்டி (1) மரபணு (1) மலாலாய் சோயா (1) மவோயிஸ்டுகள் (1) மன்மதன் அம்பு (1) மன்மோகன்சிங் (10) மா ற்று (1) மாட்டுக்கறி (1) மாதர் சங்கம் (1) மாதவராஜ் (2) மாவோ (1) மாற்ற (1) மாற்று (223) மின்கட்டணம் (1) மின்சாரம் (1) மீள்பார்வை (2) முதலாளி (1) முதலாளித்துவம் (11) முத்தமாக மாறேன் (1) முத்துக்கண்ணன் (1) முல்லைப் பெரியாறு (7) முறைகேடுகள் (5) மெகாசீரியல் (1) மே.வங்க அரசு (1) மே.வங்கம் (1) மேதினம் (1) மேற்கு வங்கம் (1) மொக்கை (1) மொழி (2) மொழிபெயர்ப்பு (1) மோசடி (1) மோடி (3) மோனிகா (1) யுத்தம் (2) ரத யாத்திரை (1) ரமேஷ் பாபு (2) ராகுல் காந்தி (2) ராடியா (2) ராஜ பக்‌ஷே (1) ரிலையன்ஸ் (1) ருமேனியா (1) லட்சுமணப்பெருமாள் (2) லெனின் (2) லோக்பால் (5) வசந்த பாலன் (1) வண்ணக்கதிர் (1) வரலாறு (19) வலைப்பூக்கள் (1) வழக்கு விசாரணை (1) வாசிப்பு (5) வாச்சாத்தி (1) வால் ஸ்டிரிட் (3) வால்மார்ட் (1) வால்ஸ்டிரிட் போராட்டம் (2) வாழ்க்கை (4) வானியல் (2) விக்கிபீடியா (1) விக்கிலீகஸ் (1) விக்கிலீக்ஸ் (7) விஞ்ஞானம் (2) விமர்சனம் (10) விலையேற்றம் (2) விலைவாசி (11) விலைவாசி உயர்வு (2) விவாதங்கள் (1) விவாதம் (9) விளம்பரம் (1) விளையாட்டு (4) வினவு (1) விஜய் (2) விஜய் மல்லையா (1) வீட்டுவசதி வாரியம் (1) வீரமணி (2) வெண்மணி (2) வெள்ளம் (2) வெனிசுவெல்லா (1) வேலையின்மை (2) வோடாபோன் (1) ஜப்பான் நெருக்கடி (2) ஜாக்கிசான் (1) ஜாதி (1) ஜாபர் பனாகி (1) ஜூலியன் அசாங்க (1) ஜெயலலிதா (9) ஜோதிடம் (1) ஸ்டீவ் ஜாப்ஸ் (1) ஸ்பீல்பர்க் (2) ஸ்பெக்ட்ரம் (6)