Friday, November 12, 2010

கண்களை விற்று சித்திரம் வாங்குவதா?

லைசன்ஸ் கொடுத்து கொள்ளை அடிக்கும் முறைக்கு சிறப்புப் பொருளாதார மண்டலம் என்ற பெயர் சூட்டினால் தவறில்லை.

ஆம் இந்தியாவைப் பொறுத்தளவில், இக்கொள்கை, 1965 காலத்திலேயே, ஏற்றுமதி வளாகங்கள் என்ற பெயரில், உருவாகியிருந் தாலும், 2000ன் இறுதியில் இருந்தே வேகம் பெறத் துவங்கியது. அதுவும் குறிப்பாக, 2005, சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கான, சிறப்பு சட்டத்தினை உருவாக்கி அமலாக்கத் துவங்கிய பிறகு, இடதுசாரிகளால் மட்டும் பேசப்பட்டு வந்த, வாழ்வாதாரம் மற்றும் தொழி லாளர் குறித்த பாதிப்புகளை, வேறு சிலரும் பேசுகின்றனர்.

நாடாளுமன்றத்தில், சிறப்பு சட்டத்தை மே 2005 ல் முன்மொழிந்த போது, இடதுசாரி கட்சிகள், குறிப்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி “சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் என்ற பெயரில் கொடுக்கப்படும், வரி உள்ளிட்ட சலுகைகளைத் திரும்பப் பெறவேண்டும், சட்டத்தில், நிலம் கையகப் படுத்துவதில் பல்வேறு மாற்றங்கள் தேவை” என்பதை எழுத்துப் பூர்வமாக முன்வைத்தது.

மத்திய அரசு சிறப்புப் பொருளாதார மண்ட லத்திற்கான சிறப்பு சலுகைகளை, அறிவிக்கிற நேரத்தில், அ) பொருளாதார சுழற்சியை கூடுதலாக்குவது, ஆ). ஏற்றுமதி பொருள்க ளையும், சேவையையும் அதிகரிப்பது, இ). உள் நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பது, ஈ). வேலை வாய்ப்புகளைப் பெருக்கு வது, உ). உள்கட்டமைப்புகளை வளர்ப்பது, ஊ).நாட்டின் இறையாண்மை மற்றும் ஒரு மைப்பாட்டை பராமரிப்பது, நாட்டின் பாது காப்பு மற்றும் வெளி நாடுகளுடனான நட் புறவை மேம்படுத்துவது, என்ற ஆறு முக்கிய மான கருத்துகளை, சிறப்புப் பொருளாதார மண்டலத்திற்கான சட்டத்தினை வகுக்கிற போது, அத்தியாயம் 2ல், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு தெரிவித்துள்ளது. மாநிலத் தி.மு.க அரசு, இதுபோன்ற சிறப்புப் பொருளா தார மண்டலங்களை உருவாக்குவதன் மூலம், 5 ஆண்டுகளில் தமிழ்நாட்டில், 20 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பை உருவாக் கப் போவதாக அறிவித்தது. இதையொட்டியே, தமிழ் நாட்டில் மாநில அரசு தொழில்கொள் கை ஒன்றையும் வெளியிட்டது. அறிவித்து 4 ஆண்டுகளாகும் நிலையில், எத்தனை லட் சம் நபர்கள் வேலை வாய்ப்பை சிறப்புப் பொரு ளாதார மண்டலங்கள் மூலம் பெற்றிருக்கிறார் கள் என்பதை மாநில அரசு வெள்ளை அறிக் கை வெளியிட்டால் மட்டுமே, தமிழ்நாட்டு மக்கள் அறிந்து கொள்ள முடியும்.

சிறப்புப் பொருளாதார மண்டலத்திற்கான, நிறைய சட்ட சலுகைகள் குறித்த விவாதம் இன்றைய தேவை என்றாலும் அந்நிய செலா வணி, வேலை, வேலை சூழல் ஆகியவை மட்டுமே இக்கட்டுரையில் விவாதிக்கப்படுகிறது.

நாடு முழுவதும் உருவாக்கப்பட்ட சிறப் புப் பொருளாதார மண்டலங்கள் எண்ணிக்கை 2008 ல் அனுமதி பெற்றவை 570க்கும் மேல், செயல்பாட்டை துவக்கியவை 155 க்குள் என்று சொல்லப்படுகிறது. குறிப்பாக 22 மாநி லங்களில் தீவிர ஆர்வம் காட்டப்படுகிறது. சாஃப்ட்வேர் நிறுவனங்கள் தவிர்த்து, அதிக முதலீடு தொலைபேசி அல்லது செல்ஃ போன் உற்பத்தியில் செய்யப்பட்டுள்ளதாக நெதர்லாந்து நாட்டைச் சார்ந்த, சோமா என்ற அமைப்பு இந்தியாவை ஆய்வு செய்து, அறிக்கை வெளியிட்டுள்ளது. 182,042.72 மில்லியன் ரூபாய் தொகையானது கடந்த 15 ஆண்டுகளில், 43 நாடுகள் மூலம் இந்தியா வில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இந்திய தொலைபேசி ஒழுங்காற்று ஆணையம் (ட்ராய்), தெரிவித்துள்ள தகவல்படி, மாதம் தோறும் செல்ஃபோன் பயன்படுத்துவோர் எண்ணிக்கை, 60 லட்சம் பேர் அதிகரிப்பதாக சொல்கிறது. 2008 ம் ஆண்டுக்குள் இந்தியா வில் செல்ஃபோன் பயன்படுத்துவோர் எண் ணிக்கை, 25 கோடியாக உயரும் என கூறப் பட்டது. தற்போது செல்ஃபோன் பயன்படுத்து வோர் எண்ணிக்கை சுமார் 36 கோடி என மதிப்பிடப்படுகிறது. உலக உற்பத்தியாளர்கள் உள்ளூரிலேயே உற்பத்தியும், சந்தையும் இருந்தால் மிகவும் நல்லது என எதிர்பார்க் கிறார்கள். அப்படி அமைந்து விட்டால் உடன டியாக தங்கள் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்ய பெரும் முயற்சி மேற்கொள்கிறார்கள். இந்த வர்த்தக அடிப்படையிலேயே, இந்தியா வில் செல்ஃபோன் உற்பத்தி நிறுவனங்க ளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

ஒட்டுமொத்த திருப்பெரும்புதூரில் ஆட் டோமொபைல் மற்றும் மின்னணு சாதன உற் பத்தி என சுமார் 1 லட்சம் தொழிலாளர் பணி புரிவதாக மதிப்பிடப் படுகிறது. தி.மு.க. அரசு சொன்ன 20 லட்சம் வேலை வாய்ப்பு எப் போது உருவாகும் என தெரியவில்லை. சமீபத் தில் தமிழில் படித்தால் வேலை வாய்ப்பில் முன்னுரிமை, என அவசரச் சட்டத்தினை முன்மொழிந்திருக்கிறது, மாநில அரசு. ஆனால், ஆங்கிலம் தெரியாது என்ற காரணத்தை முன் வைத்து மேற்படி நிறுவனங்கள், உள்ளூர் இளைஞர்களை வேலைக்கு எடுப்பதில்லை, என்ற புகார், திருப்பெரும்புதூர் பகுதி இளை ஞர்களிடம் இருப்பதாக சோமோ அமைப்பு தன் ஆய்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

வேலை, அந்நிய செலாவணி ஆகிய தனது இரண்டு பிரதான இலக்குகள் குறி தவறிப்போவது குறித்தே, கவலை கொள்ளாத அரசு, தொழிலாளர் நலன் பற்றி அக்கறை கொள்ளுமா? 53 பக்கங்களில், சிறப்புப் பொரு ளாதார மண்டலத்திற்கான விதிமுறைகளை, உருவாக்கிய அரசு, தொழிலாளர் நலன் குறித்து, எதுவும் குறிப்பிடவில்லை. சிறப்பு பொருளாதார மண்டலத்தில் ஏதாவது பிரச்சனை முன்னெழுந்தால், அங்கு மத்திய அரசால் நியமிக்கப்பட்டிருக் கும் ஆணையர், அப்பிரச்சனைகளைத் தீர்த்து வைப்பார், எனச் சொல்கிறது. மார்க்சிஸ்ட் கட்சி, “இந்த சிறப்பு ஆணையர் தேவையில்லை. மாறாக, சர்வ தேச தொழிலாளர் அமைப்பு குறிப்பிட்டதைப் போல், வளர்ச்சி ஆணை யருக்கும், குறை தீர்க்கும் அதிகாரிக்குமான அதிகாரங்கள் வேறுபடுத்தி காட்டப்பட வேண்டும். மேலும் தற்போது, பிரிவு 5ல் சொல்லப்பட்டுள்ள தகவல்களுக்குப் பதி லாக, பிரதான விதிகளிலேயே தொழிலாளர் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் இடம் பெற வேண்டும்” எனவும், “கூட்டு பேர உரிமை மற்றும் தொழிற்சங்க உரிமைகள் உத்திரவாதம் செய்யப் பட வேண்டும்” எனவும் தனது அறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ளது.

எனவே தொழிலாளர் உரிமைகளைப் பாது காக்கும் எந்த ஏற்பாடும், மேற்படி மண்டலங் களில் இல்லை. கடந்த அக்டோபர் 31 இரவு ஷிப்டுக்குச் சென்ற அம்பிகா என்ற பெண், பணி நேரத்தில் இயந்திரத்தில் சிக்கி இறந்துள்ளார். இயந்திரத்தை உடைத்து, உயிரைக்காப்பாற்றி இருக்கலாம். விலை மதிப்புமிக்கது உயிரா? இயந்திரமா? என்ற பட்டிமன்ற விவாதத்தில் அம்பிகா இறந்து போனார். இது நடந்தது, நோக்கியா நிறுவனத்தில், அங்கு தொ.மு.ச. என்ற தி.மு.க.வின் தொழிற்சங்கம் தான் இருக் கிறது. திமு.க யார் பக்கம் நின்று வாதாடும் என் பதை, நெய்வேலி போராட்டமும், ஃபாக்ஸ் கான் போராட்டமும் தமிழ் கூறும் நல் உலகத் திற்கு வெளிச்சம் போட்டு காட்டி இருக்கிறது.

சிறப்புப் பொருளாதார மண்டலத்தில், பணிபுரியும் தொழிலாளர்களில், பெரும் பான்மையினர் பெண்கள். திட்டமிட்டு சேர்க் கப்படுகின்றனர். ஏனென்றால், திருமணமா காத இளம்பெண்கள், இது போன்ற பணி களில், ஈடுபடும் போது, தொழிற்சங்கம் உள் ளிட்ட தொந்தரவுகளில் ஈடுபட மாட்டார்கள் என்பது, முதலாளிகளின் கணக்கு. உழைப் புச் சுரண்டலுடன், பாலியல் சுரண்டலையும் சில வேலைகளில் அரங்கேற்று கின்றனர். ஃபாக்ஸ்கான் உள்ளிட்ட நிறுவனங்களில், பெண்களை வார்த்தைகளால், கொடுமைப் படுத்தும் நிகழ்வுகள் இருப்பதாக சோமாவும் குறிப்பிட்டுள்ளது. பெண் தொழிலாளர் என் றால் சம்பளம் குறைத்து கொடுக்கலாம் என் பது நீண்ட நாட்களாக இந்திய சமூகத்தில் பின்பற்றப்பட்டு வரும் சுரண்டல் நடை முறை. இதை உலக முதலாளிகளுக்கும், ஆள்வோர் பட்டுக்கம்பளம் விரித்து அறிமுகம் செய்கிறார்கள்.

வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழ்வோர் யார் என்பதை, ஐ.நா. சபை தீர்மானிக்கிறபோது, நாளொன்றுக்கு 2 டாலருக்கும், குறைவான வருமானம் உடையவர் என வரையறை செய் துள்ளது. இந்த வரையறைக்கு எந்த விதமான வலியும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்கா கவே, பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் சம்பளத்தை தீர்மானிக்கிற போது, 2.1 டாலர், அதாவது 3000ல் இருந்து 4500 ரூபாய் என நிர்ணயிக்கின்றனர். மூன்றாண்டுகளுக்கும் மேலாக சம்பள உயர்வு குறித்த பேச்சுவார்த் தை நடத்தாமல், தொழிலாளர்களை சுரண்ட மத்திய, மாநில அரசுகள் அனுமதிக்கின்றன. பிரிட் டிஷார் அல்லது இதர ஐரோப்பியர்கள், இந்தியாவில் இருந்து, கனிம வளங்களையும், செல்வங்களையும் சுருட்டி எடுத்துச் சென்ற தால், இப்போது உலக முதலாளிகளுக்கு, மனித வளத்தைச் சுரண்டும் வேட்டைக் காடாக இந்தியா அனுமதிக்கப்படக்கூடாது. எனவேதான் போராட்டம் தவிர்க்க முடியாத தாக உள்ளது. போராட்டத்திற்குப் பின்னர் தான், தொழிலாளி மீது தொடுக்கப்படும் தாக்குதல்கள் வெளி உலகிற்கு தெரிய வரு கிறது. மார்க்சிஸ்ட் கட்சி குறிப்பிட்டதைப் போல், தொழிலாளர்களைப் பாதுகாக்கும் ஏற் பாடுகளுடன், தொழிற்சாலைகள் துவங்கப் படுவதே சரியானது. கண்களை விற்று சித் திரம் வாங்கினால் கைகொட்டி சிரியாரோ என்பதை நினைவில் கொள்வது நல்லது.

-எஸ்.கண்ணன்

0 comments:

Post a Comment

Labels

Coca Cola (1) Peak Oil (1) Permaculture (1) Power of Community (1) Renewable energy (1) Solar energy (1) SOPA (1) sustainable agriculture (1) அ.குமரேசன் (6) அங்காடிதெரு (1) அணு ஆற்றல் (2) அணுமின் (1) அண்ணா (4) அண்ணா நூலகம் (1) அதிர்ச்சி (1) அத்வானி (2) அந்நிய முதலீடு (2) அபிநயா (1) அப்துல் கலாம் (1) அப்பணசாமி (2) அமெரிக்கா (20) அம்பானி (1) அம்பேத்கர் (9) அரசியல் (177) அரசியல்.நிகழ்வுகள் (6) அரசு (14) அரசு மருத்துவமனை (1) அரசு விடுதி மாணவர்கள் (1) அரவான் (1) அருந்ததியர் (1) அர்ஜெண்டினா (1) அலசல் (1) அவலம் (19) அழகு (1) அறிமுகம் (1) அனுபவம் (28) அன்னா ஹசாரே (1) அஜயன் பாலா (1) ஆ.ராசா (1) ஆணையம் (2) ஆதவன் தீட்சண்யா (3) ஆப்கானிஸ்தான் (1) ஆப்பிரிக்கா (2) ஆர்.மீனா (1) ஆர்எஸ்எஸ் (2) ஆவணப்படம் (3) ஆனந்தன் (2) இ.எம்.ஜோசப் (1) இ.பா.சிந்தன் (22) இட ஓதுக்கீடு (3) இடஒதுக்கீடு (1) இடதுசாரிகள் (4) இணையம் (2) இதழ்கள் (6) இந்தியா (69) இந்துத்துவா (8) இந்துஜா (1) இமு (2) இமு டிச11 (5) இமு நவமபர் 2011 (6) இயக்கம் (7) இயக்குனர் ஷங்கர் (1) இரா.சிந்தன் (5) இரா.செழியன் (2) இரா.நடராஜன் (3) இராம.கோபாலன் (1) இல.சண்முகசுந்தரம் (2) இலக்கியம் (38) இலங்கை (6) இலங்கைத் தமிழர் (4) இலவசக் கல்வி (1) இலவசங்கள் (1) இளவரசன் கொலை (1) இளைஞர் முழக்கம் (11) இஷ்ரத் (2) இஸ்ரேல் ஆக்கிரமிப்பு (1) இஸ்லாம் (3) ஈராக் (1) ஈரான் (2) உ.வாசுகி (1) உச்ச நீதிமன்றம் (1) உணவு நெருக்கடி (2) உதயசங்கர் (1) உத்தப்புரம் (1) உயர்கல்வி (2) உரையாடல்கள் (2) உலக சினிமா (4) உலகமயம் (5) உலகம் (46) உளவியல் (1) உள்ளாட்சி (1) உள்ளாட்சித் தேர்தல் (1) ஊடகங்கள் (14) ஊடகம் (8) ஊழல் (30) எடியூரப்பா (1) எம்.எப்.ஹூசேன் (1) எம்.சிவக்குமார் (2) எரிசக்தி (1) எல்.கே.ஜி (1) என்.ஜி.ஓ (1) என்கவுண்டர் (1) எஸ். பாலா (1) எஸ்.கண்ணன் (1) எஸ்.கருணா (3) எஸ்.பி.ராஜேந்திரன் (3) எஸ்.வி.வேணுகோபாலன் (2) ஏகாதிபத்தியம் (13) ஏமன் (1) ஒபாமா (4) ஓம்பிரகாஷ் வால்மீகி (1) ஓளிப்பதிவு (1) ஃபாக்ஸ்கான் (1) கச்சத் தீவு (1) கட்டுரை (51) கட்டுரைகள் (2) கணிணி (2) கணினி தொழில் நுட்பம் (1) கமல்ஹாசன் (1) கம்யூனிசம் (12) கருணாநிதி (11) கருத்து சுதந்திரம் (1) கருத்துரிமை (3) கலைஞர் (6) கல்வி (14) கவிதை (21) கவிதைகள் (1) கறுப்புப்பணம் (3) கனிமொழி (2) காங்கிரஸ் (10) காதல் (2) கால்பந்து (1) காவல்துறை (4) காஷ்மீர் (1) கி.பார்த்திபராஜா (1) கிங்பிஷர் (1) கியூபா (4) கிரீஸ் (1) குடும்பம் (1) குட்டி ரேவதி (1) குப்பன் சுப்பன் (1) குலாத்தி (1) குழந்தைகள் (9) குழந்தைகள் கடத்தல் (1) குஜராத் கலவரம் (1) குஜராத் படுகொலைகள் (1) கூகிள் அந்தரங்கம் (1) கூடங்குளம் (2) கே.சாமுவேல்ராஜ் (1) கே.பாலமுருகன் (1) கேள்விகள் (1) கைப்பற்றுவோம் போராட்டம் (1) கோவில் (1) ச.தமிழ்ச்செல்வன் (1) ச.மாடசாமி (1) சக்திஜோதி (1) சங்கமம் (1) சசிகலா (1) சச்சின் (1) சட்டசபை (2) சட்டம் (4) சத்யஜித் ரே (1) சந்திரகாந்தன் (1) சமச்சீர் கல்வி (4) சமவூதியம் (1) சமூக நீதி (2) சமூக வலைத்தளம் (1) சமூகப் பாதுகாப்பு (2) சமூகம் (177) சம்பு (1) சரத் பவார் (1) சர்வதேச பெண்கள் தினம் (1) சல்மான் ருஷ்டி (1) சா.கந்தசாமி (2) சா.செயக்குமார் (1) சாகித்திய அகாதமி விருது (1) சாக்லேட் (1) சாதீயம் (4) சாரா விஜி (2) சாலிம் அலி (1) சி.பி.எம் (9) சிக்கிம் (1) சிந்தனை (5) சிபி (1) சிராஜுதீன் (1) சில்லரை வர்த்தகம் (4) சிறப்பு பொருளாதார மண்டலங்கள் (1) சிறுகதை (12) சினிமா (52) சினிமா செய்திகள் (4) சினிமாச் செய்திகள் (4) சீத்தாராம் யெச்சூரி (2) சு.பொ.அகத்தியலிங்கம் (2) சு.வெங்கடேசன் (1) சுகாதாரம் (1) சுதிர் ரா (1) சுயமரியாதைத் திருமணம் (1) சுவாரசியம் (1) சுற்றுப்புறச் சூழல் (3) சூர்யா (1) செம்மலர் (4) செம்மலர் அக் 2011 (4) செய்திகள் (112) சென்னை (1) சோவியத் (1) சோஷலிசம் (1) டெல்லி (2) டேம் 999 (1) த.தமிழரசி (1) தகவல் உரிமை (1) தகவல் திருட்டு (2) தண்ணீர் (3) தமிழக மீனவர்கள் (1) தமிழகம் (66) தமிழர் (1) தமிழ்ச் சினிமா (1) தமிழ்நதி (1) தமுஎகச (4) தலித் (21) தற்கொலை (1) தனியார்மயம் (4) தனுஷ் (1) தி.க (2) திமுக (1) திரிணாமுல் (1) திருப்பூர் (2) திருமணம் (2) திரைக்குப் பின்னால் (2) திரைத்துறை (1) திரைப்பட விழா (1) திரைப்படம் (4) தினகரன் (1) தினமணி (3) தீக்கதிர் (9) தீண்டாமை (22) தீண்டாமையின் அடையாளங்கள் (1) தீபாவளி (1) தேசியச் செய்திகள் (4) தேர்தல் (4) தொண்டு நிறுவனங்கள் (1) தொலைக்காட்சி (2) தொழிலாளர் (6) ந.பெரியசாமி (1) நகர்ப்புற விவசாயம் (1) நகைச்சுவை (1) நக்கீரன் (1) நதிம் சயித் (1) நந்தலாலா (1) நந்தன் (1) நரேந்திர மோடி (6) நலத்திட்டங்கள் (2) நவம்பர் புரட்சி (1) நாடகம் (1) நாடாளுமன்றத் தேர்தல் 2014 (2) நாணய மதிப்பு (1) நாறும்பூநாதன் (1) நிகழ்வுகள் (154) நிலப்பிரபுத்துவம் (1) நிலமோசடி (1) நீதித்துறை (2) நீலவேந்தன் (2) நுகர்வுக் கலாச்சாரம் (2) நூல் அறிமுகம் (12) நூல் வெளியீடுகள் (1) நெல்சன் மண்டேலா (1) நேட்டோ (2) நையாண்டி (26) நையாண்டி் (14) ப.சிதம்பரம் (3) பசுபதி (1) படுகொலை (3) படைப்புகள் (2) பட்ஜெட் (1) பணவீக்கம் (2) பதிவர் வட்டம் (3) பதிவர்வட்டம் (1) பதிவுலகம் (1) பரிந்துரைகள் (5) பழங்குடி (1) பள்ளிக்கூடம் (1) பறவைகள் (1) பன்னாட்டுக் கம்பெனிகள் (3) பா.ஜ.க (3) பாகிஸ்தான் (2) பாடல் (5) பாதல் சர்க்கார் (1) பாதுகாப்பு (1) பாரதி (2) பாலபாரதி (1) பாலஸ்தீனம் (1) பாலியல் வன்முறை (6) பாலு மகேந்திரா (1) பால் சமத்துவம் (1) பாஜக (1) பி.சுகந்தி (1) பி.ராமமூர்த்தி (1) பிடல் காஸ்ட்ரோ (3) பிரணாப் முகர்ஜி (1) பிரபாத் பட்நாயக் (3) பிரளயன் (2) பிரிட்டன் (1) பிர்தவ்ஸ் ராஜகுமாரன் (1) பிளின் (1) பு.பெ.நவமபர் 2011 (1) புகைப்படங்கள் (1) புதிய பரிதி (2) புது விசை (12) புதுமை (1) புத்தக அறிமுகம் (2) புத்தகக் கண்காட்சிகள் (2) புத்தகம் (18) புத்தகம் பேசுது (17) புத்தகம் பேசுது நவம்பர் 2011 (8) புத்தகாலயம் (2) புத்தாண்டு (1) புபே (2) புபே டிச11 (8) புரட்சி (2) புவி (1) புவி டிச11 (5) புவி நவ 2011 (7) புனைவு (1) புஷ் (1) பெட்ரோல் (7) பெண் (11) பெண் விடுதலை (1) பெண்குழந்தை (1) பெண்ணியம் (9) பெண்ணெழுத்து (1) பெரியார் (2) பெருமுதலாளிகள் (7) பேட்டி (2) பேரா.சிவசுப்பிரமணியன் (2) பேஸ்புக் (1) பொருளாதார நெருக்கடி (2) பொருளாதாரம் (24) போக்குவரத்து (1) போராட்டம் (15) போலீஸ் தாக்குதல் (3) ப்ரிசம் (4) ப்ரிசம் - தகவல் திருட்டு (7) ப்ரியா தம்பி (1) மக்களுக்கான மருத்துவம் (1) மக்கள் நலப்பணியாளர்கள் (2) மக்கானா (1) மத அடிப்படை வாதம் (1) மதவெறி (3) மதுசூதனன் (1) மம்தா (3) மம்முட்டி (1) மரபணு (1) மலாலாய் சோயா (1) மவோயிஸ்டுகள் (1) மன்மதன் அம்பு (1) மன்மோகன்சிங் (10) மா ற்று (1) மாட்டுக்கறி (1) மாதர் சங்கம் (1) மாதவராஜ் (2) மாவோ (1) மாற்ற (1) மாற்று (223) மின்கட்டணம் (1) மின்சாரம் (1) மீள்பார்வை (2) முதலாளி (1) முதலாளித்துவம் (11) முத்தமாக மாறேன் (1) முத்துக்கண்ணன் (1) முல்லைப் பெரியாறு (7) முறைகேடுகள் (5) மெகாசீரியல் (1) மே.வங்க அரசு (1) மே.வங்கம் (1) மேதினம் (1) மேற்கு வங்கம் (1) மொக்கை (1) மொழி (2) மொழிபெயர்ப்பு (1) மோசடி (1) மோடி (3) மோனிகா (1) யுத்தம் (2) ரத யாத்திரை (1) ரமேஷ் பாபு (2) ராகுல் காந்தி (2) ராடியா (2) ராஜ பக்‌ஷே (1) ரிலையன்ஸ் (1) ருமேனியா (1) லட்சுமணப்பெருமாள் (2) லெனின் (2) லோக்பால் (5) வசந்த பாலன் (1) வண்ணக்கதிர் (1) வரலாறு (19) வலைப்பூக்கள் (1) வழக்கு விசாரணை (1) வாசிப்பு (5) வாச்சாத்தி (1) வால் ஸ்டிரிட் (3) வால்மார்ட் (1) வால்ஸ்டிரிட் போராட்டம் (2) வாழ்க்கை (4) வானியல் (2) விக்கிபீடியா (1) விக்கிலீகஸ் (1) விக்கிலீக்ஸ் (7) விஞ்ஞானம் (2) விமர்சனம் (10) விலையேற்றம் (2) விலைவாசி (11) விலைவாசி உயர்வு (2) விவாதங்கள் (1) விவாதம் (9) விளம்பரம் (1) விளையாட்டு (4) வினவு (1) விஜய் (2) விஜய் மல்லையா (1) வீட்டுவசதி வாரியம் (1) வீரமணி (2) வெண்மணி (2) வெள்ளம் (2) வெனிசுவெல்லா (1) வேலையின்மை (2) வோடாபோன் (1) ஜப்பான் நெருக்கடி (2) ஜாக்கிசான் (1) ஜாதி (1) ஜாபர் பனாகி (1) ஜூலியன் அசாங்க (1) ஜெயலலிதா (9) ஜோதிடம் (1) ஸ்டீவ் ஜாப்ஸ் (1) ஸ்பீல்பர்க் (2) ஸ்பெக்ட்ரம் (6)