Tuesday, November 9, 2010

அரசு மருத்துவமனைகளில் அழுகும் பிணங்கள்


அரசு மருத்துவமனை ஒன்றின் அமரர் அறை - மார்ச்சுவரி. மிக விரிவாக, பளிச்சென்ற தோற்றத்தில், முற்றிலும் குளிரூட்டப்பட்டதாக உள்ள அந்த நீண்ட அறையின் பக்கவாட்டுச் சுவர் போல் அமைந்திருக்கிற இரும்புக் கூண்டின் தனித்தனி அறைகளில் சடலங்கள் உள்ளன. சீரான வரிசையில் உள்ள தள்ளுவண்டிக் கட்டில்களிலும் சடலங்கள் தூய வெண்துணியால் மூடிவைக்கப்பட்டிருக்கின்றன.


திரைப்படங்களில் காட்டப்படுகிற இது போன்ற அமரர் அறைக்காட்சிகளைக் கண்ட நினைப்போடு உண்மையான அரசு மருத்துவமனை அமரர் அறைக்குச் சென்று பார்த்தால் எப்படி இருக்கும்? ஒரு உறவினர் விபத்தில் மரணமடைய அவரது சடலத்தைப் பெறுவதற்காக சென்னையின் ஒரு அரசு மருத்துவமனையில் உள்ள அமரர் அறைக்குச் சென்றபோது ஏற்பட்ட முதல் உணர்வு ஒரு அதிர்ச்சிதான்.

மனிதர்கள் உயிருடன் இருக்கும்போதுதான் என்னென்னவோ அவமதிப்புகளையும் பாகுபாடுகளையும் சந்திக்கிறார்கள் என்றால், இறப்புக்குப் பிறகுமா அவர்களுக்கு இப்படிப்பட்ட அவலம் என்ற எண்ணமே மேலோங்குகிறது. மரணத்தின் காரணமறிய மருத்துவ சோதனை, காவல்துறை விசாரணை, குடும்பத்தினர் எடுத்துச்செல்லாமை போன்ற பல காரணங்களுக்காக சடலங்களை அமரர் அறையில் பராமரிக்கப்படுகின்றன.

குறிப்பிட்ட அமரர் அறையில் சோதனை நடவடிக்கைகள் முடிந்து, உரிய வேதிப்பொருள்கள் தடவப்பட்ட பல சடலங்கள், தரையில் கிடத்தப்பட்டிருந்தன. கிழிந்த துணியால் மூடி வைக்கப்பட்டிருந்த அந்தச் சடலங்களைப் பார்த்த போதே அவை ஏழைகளாக வாழ்ந்து முடிந்தவர்களுடையவையாகத்தான் இருக்கும் என்று ஊகிக்க முடிகிறது. அடிப்படை வசதிகள் முழுமையாகச் செய்யப்படாததால் இப்படி நீண்ட நாட்களாகத் தரையில் கிடத்தப்பட்டிருக்கிற பிணங்களின் அங்கங்கள் அவ்வப்போது பெருச்சாளிகளுக்கு உணவாகிற கொடுமை சர்வ சாதாரணம். ஏன் இந்த நிலைமை என்று விசாரித்தபோது தெரியவந்த தகவல்கள், என்ன கொடுமை இது என்று கேட்க வைக்கின்றன.

அமரர் அறைக்குப் பொதுவாக மூன்று வகையான சடலங்கள் கொண்டுவரப்படுகின்றன. விபத்துகளில் இறந்தவர்களின் சடலங்கள், நோய்களின் தாக்குதலுக்கு இலக்காகி சிகிச்சை பலனின்றி உயிரிழப்போரின் சடலங்கள், கொலை செய்யப்பட்டோர்-தற்கொலை செய்துகொண்டோர் பிணங்கள் என அவற்றை வகைப்படுத்தலாம்.

முன்னொரு காலத்தில் மருத்துவமனைகளில் வைத்துப் பராமரித்தாக வேண்டியிருந்த சடலங்களில் சராசரி எண்ணிக்கைக்கு ஏற்பக் கட்டப்பட்ட அமரர் அறைகளே இன்றும் அப்படியே நீடிக்கின்றன. இன்று விபத்துகள் அதிகரித்துவிட்டன என்பது உள்ளிட்ட காரணங்களால் இந்த அறைகளுக்குக் கொண்டுவரப்படும் பிணங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துவிட்டது. இந்தக் கூடங்களை விரிவுபடுத்த வேண்டும், நவீன வசதிகளைப் பொருத்த வேண்டும் என்ற ஆலோசனைகள், வல்லுநர்களாலும் சமூக அக்கறையாளர்களாலும் சொல்லப்பட்டிருக்கின்றன. அரசு மருத்துவமனை நிர்வாகம் தன் சொந்தச் செலவில் இதைச் செய்ய இயலாது. அரசு எந்திரம் அந்த ஆலோசனைகளைச் செயல்படுத்த முன்வந்தால்தான் அடிப்படை நிலைமை மாறும். அரசுக்கு ஏன் அந்த அக்கறை ஏற்படவில்லை? இறந்தவர்கள் எழுந்து போராடப்போவதில்லை என்பதாலா?

பிணங்களை நீண்ட நாட்கள் பாதுகாக்க வேண்டுமானால் குளிர் வசதி சரியான அளவில் இருக்க வேண்டும். அப்படி இல்லாததால் சில நாட்களில் அழுகத் தொடங்குகின்றன. அவற்றிலிருந்து கிளம்பும் கெட்ட வாடை கூடம் முழுவதும் பரவியிருக்கிறது. இந்த காரணத்தினால் அறையின் பணியாளர்கள் சிலர் சிறிது மது அருந்திவிட்டு தங்கள் வேலைகளைச் செய்கிறார்கள்.

உடல்களைப் பரிசோதனை செய்வதற்கு ஒரு முதன்மை மருத்துவரின் கீழ் நான்கு மருத்துவர்களும் ஊழியர்களும் இருக்க வேண்டும். ஆனால், உயிரோடு இருப்பவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கே போதிய மருத்துவர்கள் இல்லை என்கிறபோது, இறந்தவர்களை கவனிப்பதற்கான மருத்துவர்களும் ஊழியர்களும் மட்டும் போதுமான அளவுக்கு இருப்பார்களா என்ன? அரசு மருத்துவ மனைகளில் புதிய மருத்துவர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று அவ்வப்போது பிரச்சனை வரும்போது ஆட்சியாளர்கள் அறிவிப்பார்கள். அப்படி சில புதிய மருத்துவர்கள் நியமிக்கப்பட்டிருக்கலாம். ஆனால் பணி ஓய்வு பெற்று காலியாகிற இடங்கள் முழுமையாக நிரப்பப்படுகின்றனவா? அதிகரித்துள்ள நோயாளிகள் எண்ணிக்கைக்கு ஏற்ப அறிவியல்பூர்வமாக மருத்துவர், மருத்துவ உதவியாளர்கள் நியமிக்கப்படுகிறார்களா?

“உயிரைக் காப்பது எங்கள் கடமை. ஆனால் நாங்களும் மனிதர்கள்தான். அமரர் அறை இந்த லட்சணத்தில் இருக்கிற போது உள்ளே செல்வதில் எங்களுக்கும் உடல் பாதிப்புகளும் மனச்சங்கடங்களும் உள்ளன. இதை நாங்கள் யாரிடம் சொல்வது,” என்று கேட்டார் ஒரு மருத்துவர்.

இத்தகைய காரணங்களால் பெரும்பாலான இடங்களில் அனுபவமில்லாதவர்கள்தான் இந்த வேலைகளில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். அனுபவமிக்க, சிறப்புப் பயிற்சி பெற்ற தடய அறிவியல் மருத்துவர்கள் மிகக் குறைவாகவே இப்பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதனால் ஏற்படுகிற பணிச்சுமையும் நிலைமையை பாதிக்கிறது.

அமரர் அறையில் பிண அறுவைச் சோதனை உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுவோருக்கு அளிக்கப்படும் சிறப்புப் படிகள் காலத்திற்குப் பொருந்தாததாக, அவர்களை ஊக்குவிக்காததாக இருப்பதை அரசு மருத்துவமனையில் ஒரு மூத்த அலுவலர் தெரிவித்தார். ஒரு பிண அறுவை சோதனை செய்ய மருத்துவருக்கு வழங்கப்படுவது ரூ. 75, உதவியாளருக்கு ரூ.25 மட்டுமே.

தமிழ்நாடு மக்கள் நல மருத்துவ இயக்கத்தின் சார்பில் சில முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதைக் கேள்விப்பட்டு அவர்களை அணுகிய போது, அதன் பொதுச்செயலாளர் மருத்துவர் ரெக்ஸ் சற்குணம் இவ்வாறு கூறினார்: “மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு இறந்தவர்களை அறையில் மட்டும் பதிவு செய்துவிட்டு பிணங்களை உடனே உறவினர்களிடம் ஒப்படைத்து அப்புறப்படுத்தலாம். இதனால் இந்த அறைகளில் பராமரிக்கப்படும் சடலங்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறையும். இரவு நேரங்களில் பிணம் எடுத்துச் செல்ல அனுமதிப்பதில்லை என்ற விதி இப்போதும் இருக்கிறது. அந்தக் காலத்தில் இரவு நேரங்களில் வெளிச்சம் இல்லாததால் பிணங்கள் மாறிவிடும், சரியாக சோதனை செய்ய இயலாமல் போய்விடும் என்பன போன்ற காரணங்களால் அந்த விதி ஏற்படுத்தப்பட்டது. இன்று இந்தப் பிரச்சனை இல்லை என்பதால் இப்படிப்பட்ட சடலங்களையாவது உடனுக்குடன் அப்புறப்படுத்த அனுமதிக்கலாம்.”

“சடலங்களை மைனஸ் டிகிரி குளிரில் வைத்திருக்க வேண்டும். பெட்டியில் மூடி வைக்கவேண்டும். வேதிப் பொருள்களால் சடலம் அழுகு வதைக் கட்டுப்படுத்த வேண்டும். அப்போதுதான் அறையில் கெட்ட வாடை வருவதைத் தடுக்க முடியும். அறையை எந்நேரமும் தூய்மையாக வைத்திருக்கத் தேவையான கருவிகள் புதிதாக வாங்கப்பட வேண்டும். பழுதடையும் கருவிகளை உடனுக்குடன் சரிசெய்வதற்கான ஏற்பாடுகள் உறுதிப்படுத்தப்பட வேண்டும். சடலங்களை பராமரிக்க போதிய வேதிப்பொருள் தயாராக இருக்க வேண்டும். அனுபவமுள்ள மருத்துவர்களைக் கூடுதலாக நியமிக்க வேண்டும். பிண அறுவையின்போது இவர்களுக்குக் கிருமிகள் தொற்றும் அபாயம் அதிகமாக இருப்பதை உணர்ந்து அதை ஈடுகட்டும் வகையில் கூடுதல் ஊதியம், அல்லது கூடுதல் சிறப்புப் படிகள் என்று வழங்க வேண்டும்,” என்று அடிப்படையான நடவடிக்கைகளைச் சுட்டிக்காட்டினார் ரெக்ஸ். அமரர் அறைகளை விரிவு படுத்துதல் போன்ற உடனடி நடவடிக்கைகளையும் அவர் வலியுறுத்துகிறார்.

சென்னை குழந்தைகள் மருத்துவ மனையின் இயக்குநர் பொறுப்பு உட்பட பல நிலைகளில் அரசு மருத்துவராக சேவை செய்துள்ள இவரது அனுபவ வார்த்தைகளை இனியாவது அரசும் மருத்துவத் துறையும் ஆராய்ந்து ஆவன செய்யுமா? சவக்கிடங்கு என்றிருந்த பெயரை அமரர் அறை என மாற்றியது கவுரமானதுதான். அந்த கவுரவம் அமரரானவர்களின் உடல்களுக்கும் ஏற்றத் தாழ்வின்றி கிடைத்தாக வேண்டாமா?

-ஹேமாவதி

1 comment:

  1. நல்ல பதிவு, தொடருங்கள் தோழரே!

    ReplyDelete

Labels

Coca Cola (1) Peak Oil (1) Permaculture (1) Power of Community (1) Renewable energy (1) Solar energy (1) SOPA (1) sustainable agriculture (1) அ.குமரேசன் (6) அங்காடிதெரு (1) அணு ஆற்றல் (2) அணுமின் (1) அண்ணா (4) அண்ணா நூலகம் (1) அதிர்ச்சி (1) அத்வானி (2) அந்நிய முதலீடு (2) அபிநயா (1) அப்துல் கலாம் (1) அப்பணசாமி (2) அமெரிக்கா (20) அம்பானி (1) அம்பேத்கர் (9) அரசியல் (177) அரசியல்.நிகழ்வுகள் (6) அரசு (14) அரசு மருத்துவமனை (1) அரசு விடுதி மாணவர்கள் (1) அரவான் (1) அருந்ததியர் (1) அர்ஜெண்டினா (1) அலசல் (1) அவலம் (19) அழகு (1) அறிமுகம் (1) அனுபவம் (28) அன்னா ஹசாரே (1) அஜயன் பாலா (1) ஆ.ராசா (1) ஆணையம் (2) ஆதவன் தீட்சண்யா (3) ஆப்கானிஸ்தான் (1) ஆப்பிரிக்கா (2) ஆர்.மீனா (1) ஆர்எஸ்எஸ் (2) ஆவணப்படம் (3) ஆனந்தன் (2) இ.எம்.ஜோசப் (1) இ.பா.சிந்தன் (22) இட ஓதுக்கீடு (3) இடஒதுக்கீடு (1) இடதுசாரிகள் (4) இணையம் (2) இதழ்கள் (6) இந்தியா (69) இந்துத்துவா (8) இந்துஜா (1) இமு (2) இமு டிச11 (5) இமு நவமபர் 2011 (6) இயக்கம் (7) இயக்குனர் ஷங்கர் (1) இரா.சிந்தன் (5) இரா.செழியன் (2) இரா.நடராஜன் (3) இராம.கோபாலன் (1) இல.சண்முகசுந்தரம் (2) இலக்கியம் (38) இலங்கை (6) இலங்கைத் தமிழர் (4) இலவசக் கல்வி (1) இலவசங்கள் (1) இளவரசன் கொலை (1) இளைஞர் முழக்கம் (11) இஷ்ரத் (2) இஸ்ரேல் ஆக்கிரமிப்பு (1) இஸ்லாம் (3) ஈராக் (1) ஈரான் (2) உ.வாசுகி (1) உச்ச நீதிமன்றம் (1) உணவு நெருக்கடி (2) உதயசங்கர் (1) உத்தப்புரம் (1) உயர்கல்வி (2) உரையாடல்கள் (2) உலக சினிமா (4) உலகமயம் (5) உலகம் (46) உளவியல் (1) உள்ளாட்சி (1) உள்ளாட்சித் தேர்தல் (1) ஊடகங்கள் (14) ஊடகம் (8) ஊழல் (30) எடியூரப்பா (1) எம்.எப்.ஹூசேன் (1) எம்.சிவக்குமார் (2) எரிசக்தி (1) எல்.கே.ஜி (1) என்.ஜி.ஓ (1) என்கவுண்டர் (1) எஸ். பாலா (1) எஸ்.கண்ணன் (1) எஸ்.கருணா (3) எஸ்.பி.ராஜேந்திரன் (3) எஸ்.வி.வேணுகோபாலன் (2) ஏகாதிபத்தியம் (13) ஏமன் (1) ஒபாமா (4) ஓம்பிரகாஷ் வால்மீகி (1) ஓளிப்பதிவு (1) ஃபாக்ஸ்கான் (1) கச்சத் தீவு (1) கட்டுரை (51) கட்டுரைகள் (2) கணிணி (2) கணினி தொழில் நுட்பம் (1) கமல்ஹாசன் (1) கம்யூனிசம் (12) கருணாநிதி (11) கருத்து சுதந்திரம் (1) கருத்துரிமை (3) கலைஞர் (6) கல்வி (14) கவிதை (21) கவிதைகள் (1) கறுப்புப்பணம் (3) கனிமொழி (2) காங்கிரஸ் (10) காதல் (2) கால்பந்து (1) காவல்துறை (4) காஷ்மீர் (1) கி.பார்த்திபராஜா (1) கிங்பிஷர் (1) கியூபா (4) கிரீஸ் (1) குடும்பம் (1) குட்டி ரேவதி (1) குப்பன் சுப்பன் (1) குலாத்தி (1) குழந்தைகள் (9) குழந்தைகள் கடத்தல் (1) குஜராத் கலவரம் (1) குஜராத் படுகொலைகள் (1) கூகிள் அந்தரங்கம் (1) கூடங்குளம் (2) கே.சாமுவேல்ராஜ் (1) கே.பாலமுருகன் (1) கேள்விகள் (1) கைப்பற்றுவோம் போராட்டம் (1) கோவில் (1) ச.தமிழ்ச்செல்வன் (1) ச.மாடசாமி (1) சக்திஜோதி (1) சங்கமம் (1) சசிகலா (1) சச்சின் (1) சட்டசபை (2) சட்டம் (4) சத்யஜித் ரே (1) சந்திரகாந்தன் (1) சமச்சீர் கல்வி (4) சமவூதியம் (1) சமூக நீதி (2) சமூக வலைத்தளம் (1) சமூகப் பாதுகாப்பு (2) சமூகம் (177) சம்பு (1) சரத் பவார் (1) சர்வதேச பெண்கள் தினம் (1) சல்மான் ருஷ்டி (1) சா.கந்தசாமி (2) சா.செயக்குமார் (1) சாகித்திய அகாதமி விருது (1) சாக்லேட் (1) சாதீயம் (4) சாரா விஜி (2) சாலிம் அலி (1) சி.பி.எம் (9) சிக்கிம் (1) சிந்தனை (5) சிபி (1) சிராஜுதீன் (1) சில்லரை வர்த்தகம் (4) சிறப்பு பொருளாதார மண்டலங்கள் (1) சிறுகதை (12) சினிமா (52) சினிமா செய்திகள் (4) சினிமாச் செய்திகள் (4) சீத்தாராம் யெச்சூரி (2) சு.பொ.அகத்தியலிங்கம் (2) சு.வெங்கடேசன் (1) சுகாதாரம் (1) சுதிர் ரா (1) சுயமரியாதைத் திருமணம் (1) சுவாரசியம் (1) சுற்றுப்புறச் சூழல் (3) சூர்யா (1) செம்மலர் (4) செம்மலர் அக் 2011 (4) செய்திகள் (112) சென்னை (1) சோவியத் (1) சோஷலிசம் (1) டெல்லி (2) டேம் 999 (1) த.தமிழரசி (1) தகவல் உரிமை (1) தகவல் திருட்டு (2) தண்ணீர் (3) தமிழக மீனவர்கள் (1) தமிழகம் (66) தமிழர் (1) தமிழ்ச் சினிமா (1) தமிழ்நதி (1) தமுஎகச (4) தலித் (21) தற்கொலை (1) தனியார்மயம் (4) தனுஷ் (1) தி.க (2) திமுக (1) திரிணாமுல் (1) திருப்பூர் (2) திருமணம் (2) திரைக்குப் பின்னால் (2) திரைத்துறை (1) திரைப்பட விழா (1) திரைப்படம் (4) தினகரன் (1) தினமணி (3) தீக்கதிர் (9) தீண்டாமை (22) தீண்டாமையின் அடையாளங்கள் (1) தீபாவளி (1) தேசியச் செய்திகள் (4) தேர்தல் (4) தொண்டு நிறுவனங்கள் (1) தொலைக்காட்சி (2) தொழிலாளர் (6) ந.பெரியசாமி (1) நகர்ப்புற விவசாயம் (1) நகைச்சுவை (1) நக்கீரன் (1) நதிம் சயித் (1) நந்தலாலா (1) நந்தன் (1) நரேந்திர மோடி (6) நலத்திட்டங்கள் (2) நவம்பர் புரட்சி (1) நாடகம் (1) நாடாளுமன்றத் தேர்தல் 2014 (2) நாணய மதிப்பு (1) நாறும்பூநாதன் (1) நிகழ்வுகள் (154) நிலப்பிரபுத்துவம் (1) நிலமோசடி (1) நீதித்துறை (2) நீலவேந்தன் (2) நுகர்வுக் கலாச்சாரம் (2) நூல் அறிமுகம் (12) நூல் வெளியீடுகள் (1) நெல்சன் மண்டேலா (1) நேட்டோ (2) நையாண்டி (26) நையாண்டி் (14) ப.சிதம்பரம் (3) பசுபதி (1) படுகொலை (3) படைப்புகள் (2) பட்ஜெட் (1) பணவீக்கம் (2) பதிவர் வட்டம் (3) பதிவர்வட்டம் (1) பதிவுலகம் (1) பரிந்துரைகள் (5) பழங்குடி (1) பள்ளிக்கூடம் (1) பறவைகள் (1) பன்னாட்டுக் கம்பெனிகள் (3) பா.ஜ.க (3) பாகிஸ்தான் (2) பாடல் (5) பாதல் சர்க்கார் (1) பாதுகாப்பு (1) பாரதி (2) பாலபாரதி (1) பாலஸ்தீனம் (1) பாலியல் வன்முறை (6) பாலு மகேந்திரா (1) பால் சமத்துவம் (1) பாஜக (1) பி.சுகந்தி (1) பி.ராமமூர்த்தி (1) பிடல் காஸ்ட்ரோ (3) பிரணாப் முகர்ஜி (1) பிரபாத் பட்நாயக் (3) பிரளயன் (2) பிரிட்டன் (1) பிர்தவ்ஸ் ராஜகுமாரன் (1) பிளின் (1) பு.பெ.நவமபர் 2011 (1) புகைப்படங்கள் (1) புதிய பரிதி (2) புது விசை (12) புதுமை (1) புத்தக அறிமுகம் (2) புத்தகக் கண்காட்சிகள் (2) புத்தகம் (18) புத்தகம் பேசுது (17) புத்தகம் பேசுது நவம்பர் 2011 (8) புத்தகாலயம் (2) புத்தாண்டு (1) புபே (2) புபே டிச11 (8) புரட்சி (2) புவி (1) புவி டிச11 (5) புவி நவ 2011 (7) புனைவு (1) புஷ் (1) பெட்ரோல் (7) பெண் (11) பெண் விடுதலை (1) பெண்குழந்தை (1) பெண்ணியம் (9) பெண்ணெழுத்து (1) பெரியார் (2) பெருமுதலாளிகள் (7) பேட்டி (2) பேரா.சிவசுப்பிரமணியன் (2) பேஸ்புக் (1) பொருளாதார நெருக்கடி (2) பொருளாதாரம் (24) போக்குவரத்து (1) போராட்டம் (15) போலீஸ் தாக்குதல் (3) ப்ரிசம் (4) ப்ரிசம் - தகவல் திருட்டு (7) ப்ரியா தம்பி (1) மக்களுக்கான மருத்துவம் (1) மக்கள் நலப்பணியாளர்கள் (2) மக்கானா (1) மத அடிப்படை வாதம் (1) மதவெறி (3) மதுசூதனன் (1) மம்தா (3) மம்முட்டி (1) மரபணு (1) மலாலாய் சோயா (1) மவோயிஸ்டுகள் (1) மன்மதன் அம்பு (1) மன்மோகன்சிங் (10) மா ற்று (1) மாட்டுக்கறி (1) மாதர் சங்கம் (1) மாதவராஜ் (2) மாவோ (1) மாற்ற (1) மாற்று (223) மின்கட்டணம் (1) மின்சாரம் (1) மீள்பார்வை (2) முதலாளி (1) முதலாளித்துவம் (11) முத்தமாக மாறேன் (1) முத்துக்கண்ணன் (1) முல்லைப் பெரியாறு (7) முறைகேடுகள் (5) மெகாசீரியல் (1) மே.வங்க அரசு (1) மே.வங்கம் (1) மேதினம் (1) மேற்கு வங்கம் (1) மொக்கை (1) மொழி (2) மொழிபெயர்ப்பு (1) மோசடி (1) மோடி (3) மோனிகா (1) யுத்தம் (2) ரத யாத்திரை (1) ரமேஷ் பாபு (2) ராகுல் காந்தி (2) ராடியா (2) ராஜ பக்‌ஷே (1) ரிலையன்ஸ் (1) ருமேனியா (1) லட்சுமணப்பெருமாள் (2) லெனின் (2) லோக்பால் (5) வசந்த பாலன் (1) வண்ணக்கதிர் (1) வரலாறு (19) வலைப்பூக்கள் (1) வழக்கு விசாரணை (1) வாசிப்பு (5) வாச்சாத்தி (1) வால் ஸ்டிரிட் (3) வால்மார்ட் (1) வால்ஸ்டிரிட் போராட்டம் (2) வாழ்க்கை (4) வானியல் (2) விக்கிபீடியா (1) விக்கிலீகஸ் (1) விக்கிலீக்ஸ் (7) விஞ்ஞானம் (2) விமர்சனம் (10) விலையேற்றம் (2) விலைவாசி (11) விலைவாசி உயர்வு (2) விவாதங்கள் (1) விவாதம் (9) விளம்பரம் (1) விளையாட்டு (4) வினவு (1) விஜய் (2) விஜய் மல்லையா (1) வீட்டுவசதி வாரியம் (1) வீரமணி (2) வெண்மணி (2) வெள்ளம் (2) வெனிசுவெல்லா (1) வேலையின்மை (2) வோடாபோன் (1) ஜப்பான் நெருக்கடி (2) ஜாக்கிசான் (1) ஜாதி (1) ஜாபர் பனாகி (1) ஜூலியன் அசாங்க (1) ஜெயலலிதா (9) ஜோதிடம் (1) ஸ்டீவ் ஜாப்ஸ் (1) ஸ்பீல்பர்க் (2) ஸ்பெக்ட்ரம் (6)