Thursday, June 27, 2013

நெல்சன் மண்டேலா - ஒடுக்குமுறைக்கு எதிராக சமத்துவத்தை முன்வைத்தவர்

நெல்சன் மண்டேலா
நெல்சன் மண்டேலாவின் நுறையீரல் பாதிப்பு காரணமாக அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், உடல் நிலை மாற்றமின்றி தொடர்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்ரிக்க நிலப்பரப்பும், கருப்பின தோழமைகளும் அவர் நலம் பெருவதற்கக கண்ணீர் மல்க காத்திருக்கின்றனர். ஆப்ரிக்க ஜனாதிபதி தனது வெளிநாட்டு பயணத்தை ரத்து செய்திருக்கிறார்.


மண்டேலாவின் வாழ்க்கை நாம் கற்று, பின்பற்ற வேண்டியதாகும். கடந்த ஜூலை 18 ஆம் தேதி அவர் 95 வயதை எட்டினார். ஆப்ரிக்க மக்களின் ஜனநாயக உரிமைக்கான போராட்டத்தை தலைமையேற்று நடத்திய மண்டேலா உலகத்தால் மதிக்கப்படும் பெரும் தலைவர்களின் ஒருவர்.



வாழ்க்கை குறிப்பு:
நெல்சன் மண்டேலா - 1918 ஆம் ஆண்டு ஜூலை 18 ஆம் நாள் பிறந்தார். இளங்கலை படிப்பை முடித்து வழக்கறிஞராக பணியாற்றினார். தன் வாழ்க்கையை, தென் ஆப்ரிக்க மண்ணில் சமத்துவம் மலர்வதற்காக அற்பணித்துக்கொண்ட அவரின் போராட்டங்கள், ஜனநாயக முறையிலும், ஆயுதப் போராட்டமாகவும் - அடக்குமுறையை எதிர்த்த சமத்துவத்துக்கான போராட்டமாகவும் இருந்தது. இந்தியாவின் மிக உயர்ந்த பாரத ரத்னா விருது,1990 ஆம் ஆண்டு இந்திய வம்சாவழி அல்லாத மண்டேலாவுக்கு முதன்முறையாக வழங்கி கவுரவிக்கப்பட்டது. அவர் செயல்பட்ட ஆப்ரிக்க தேசிய காங்கிரஸ் கட்சி இன்றுவரை அரசை வழிநடத்திவருகிறது.


ஆயுதப் போராட்டம்:

அமைதி வழிப் போராட்டம் பலனளிக்காதபோது ஆயுதப் போராட்டத்தை முன்னெடுக்கத் துணிந்த மண்டேலா - இனவெறிக்கு எதிராக மனித நேயத்தை முன் நிறுத்துவதில் தெளிவாக இருந்தார். அது குறித்து பேசும்போது, 

”1961 ஜூன் மாதத்தின் தொடக்கத்தில் நானும் எனது நண்பர்களும், நம் நாடு உள்ள நிலையில் அமைதியையும், அகிம்சையையும் பேசிக்கொண்டிருப்பது கற்பனாவாதம், வன்முறை தவிர்க்க முடியாதது என முடிவு செய்தோம். அந்தக் காலகட்டத்தில் அரசு எங்கள் அமைதியான கோரிக்கைகளை அடக்குமுறை கொண்டு நிராகரித்தது”



”இந்த முடிவுக்கு நாங்கள் எளிதில் வந்துவிடவில்லை. எல்லா வழிமுறைகளும் தோல்வியடைந்த பிறகே, அமைதி வழிப் போராட்டத்துக்கான எல்லா வழிகளும் அடைபட்ட பிறகே இந்த முடிவைச் செய்தோம்...  அரசு எங்களுக்கு வேறெந்த வாய்ப்பையும் வழங்கவில்லை”  என்று குறிப்பிடுகிறார்.

வெள்ளை அடக்குமுறையை எதிர்த்தபோதும், எம்.கே அமைப்பினர் தெளிவாக - கருப்பர் இனவாதத்தை ஒதுக்கி வைத்தனர். தங்கள் பிரகடனத்தை இவ்வாறு அமைத்துக் கொண்டனர். “அமைதியும், ஒருமைப்பாடும், அனைத்து மக்களுக்கும் சம உரிமையும் கொண்ட தென் ஆப்ரிக்காவுக்காக நாங்கள் போராடுகிறோம்.” “வெள்ளை அடக்குமுறையாளர்களைப் போல நாங்கள் இனவெறியர்கள் அல்ல. எங்கள் ஆப்ரிக்க தேசிய காங்கிரஸ் இந்த தேசத்தில் வாழும் ‘அனைவருக்குமான சுதந்திரத்தை’ தன் செய்தியாக அறிவிக்கிறது”


ஒடுக்குமுறைக்கு எதிராக சமத்துவத்தை பிரகடனம் செய்தது அந்தப் போராட்டத்திற்கு ஆன்ம வலுச் சேர்த்தது.

மண்டேலாவுக்கு தடை:


1956 இல் அமைதியழிப் போராட்டத்தைக் கண்டு அஞ்சி அவரை தேசத் துரோக வழக்கில் கைது செய்தனர். இதனை எதிர்த்து 1961 வரை சட்டப் போராட்டம் நடத்தி விடுதலை பெற்றார். இதே காலகட்டத்தில் ஆப்ரிக்க நிறவெறி அரசு கம்யூனிஸ்ட் கட்சியை தடை செய்த பின்னர், அவர்கள் ஆப்ரிக்க தேசிய காங்கிரசில் இணைந்து செயல்பட முடிவெடுத்தனர். ஆனால், ஆப்ரிக்க அரசு, அதையே காரணமாக வைத்து - மண்டேலா உள்ளிட்டவர்களை தடை செய்தது. 1962 மீண்டும் அரசால் கைது செய்யப்பட்டார். 1963 இல் அவருக்கு ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டது.

ஆப்ரிக்காவின் அடக்குமுறையாளர்கள் மண்டேலாவை கம்யூனிஸ்ட் என்றும், கம்யூனிச நாடுகளுடன் துணையோடு கலகம் செய்வதாகவும் குற்றம் சாட்டினர். உலக அளவில் நடந்துகொண்டிருந்த ‘பனிப்போர்’ சூழலை பயன்படுத்தி, விடுதலைப் போராட்டத்திற்கு எதிராக இந்தப் பிரச்சாரத்தைக் கட்டவிழ்த்துவிட்டது ஆப்ரிக்க அரசு. அவர் மீது ஆப்ரிக்க அரசு  மனித உரிமைகளை மீறுவதாகக் குற்றம் சாட்டப்பட்டியது. இதனைத் தொடர்ந்து  அமெரிக்க அரசு, அமெரிக்காவில் நுழைய விதித்தது. இந்தத் தடை ஜூலை 2008 ஆம் ஆண்டு வரை நடைமுறையில் இருந்தது.

நானொரு கம்யூனிஸ்ட் அல்ல:

அப்போது (1961 ஆம் ஆண்டு) ஆப்ரிக்க நீதிமன்றத்தில் அவர் ஆற்றிய உரை புகழ்பெற்றது. அந்த உரையில் தானொரு கம்யூனிஸ்ட் அல்ல என்பதையும், வெள்ளை ஆப்ரிக்கர்களால், விடுதலைக்கும், ஜனநாயகத்துக்குமான இயல்பான குரலை புரிந்துகொள்ள முடியவில்லை என்றும் வாதிடுகிறார். (Pretoria Supreme Court, 20 April 1964)

“1944 ஆம் ஆண்டு ஆப்ரிக்க தேசிய காங்கிரசில் இணைந்தேன். எனது இளமைக் காலங்களில் கம்யூனிஸ்டுகளை தேசிய காங்கிரசில் இணைக்க வேண்டும் என விரும்பினேன். கம்யூனிஸ்ட்க் கட்சியும், தேசிய காங்கிரசும் சில பிரச்சனைகளில் இணைந்து செயல்பட வேண்டுமென விரும்பினேன். ஆனால் ஆப்ரிக்க தேசியவாதக் கொள்கை நீர்த்துப் போய்விடுமென பலர் அதனை எதிர்த்தார்கள்.

நான் ஆப்ரிக்க தேசிய காங்கிரசின் இளைஞர்  அணியில் இருந்தபோது ஒரு குழு கட்சியிலிருந்து கம்யூனிஸ்டுகளை நீக்க வேண்டுமென தீர்மானம் கொண்டு வந்தது. அந்தப் பிரிவினர், பிற்போக்குவாதிகளாகவும், அடிப்படைவாதிகளாகவும் இருந்தனர். அந்தத் தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்து, தோல்வியடையச் செய்தோம்...

கம்யூனிசம் குறித்து, முன்முடிவோடு அணுகும் தென்னாப்ரிக்க வெள்ளையர்களுக்கு, ஆப்ரிக்க அரசியல்வாதிகள் கம்யூனிஸ்டுகளை ஏன் தங்கள் நண்பர்களாகக் கருதுகிறார்கள் என்பது புரியாது. ஆனால், அதற்கு தெளிவான காரணம் உண்டு. ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடுவதில் எங்களுக்கும் அவர்களுக்கும், கருத்து அடிப்படையில் பல வேற்றுமைகள் இருக்கலாம். ஆனால் கம்யூனிஸ்டுகள் மட்டுமே, ஆப்ரிக்க போராளிகளை நண்பர்களாக கருதினார்கள். சமத்துவத்தை பல பத்தாண்டுகளாக ஏற்படுத்தி செயல்பட்டார்கள். எங்களோடு சேர்ந்து உண்டார்கள், பேசினார்கள், வாழ்ந்தார்கள், உழைத்தார்கள். அவர்கள் மட்டும்தான் எங்களின் அரசியல் உரிமைகளுக்காகவும், சமூக மேம்பாட்டுக்காகவும் பாடுபட்டார்கள். இதனால் ஆப்ரிக்காவில் பலரும் விடுதலையை, கம்யூனிசத்தோடு ஒப்பிடுகிறார்கள். 

இதனால் (வெள்ளையர்கள்) அனைத்து விதமான ஜனநாயக அரசையும், விடுதலையையும் கம்யூனிசத்தின் பெயரால் விரிவுரைத்து, கம்யூனிஸ்ட் அல்லாதவர்களையும் கம்யூனிச தடைச் சட்டத்தின் பேரால் தடை செய்தார்கள். நான் கம்யூனிஸ்ட் கட்சியில் ஒருபோதும் உறுப்பினராக இருந்ததில்லை, ஆனால் கம்யூனிச விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக நின்றேன். இதனால் நானும் தடைசெய்யப்பட்டேன்.” என்று குறிப்பிடுகிறார். இதே புரிதலுடன், ஆப்ரிக்க தேசிய காங்கிரசும், கம்யூனிஸ்ட் கட்சியும் இன்றுவரை கூட்டாக செயல்படுகின்றன. கம்யூனிஸ்டுகளும், தொழிற்சங்கங்க கூட்டமைப்பும் தேர்தலில் பங்கெடுப்பதில்லை.

சிறை வாழ்க்கையும், பொது வாழ்விலிருந்து விலகியதும்:

உலகில் அதிக ஆண்டுகள் சிறை வாழ்க்கை அனுபவித்த மண்டேலாவின் 27 ஆண்டு சிறைவாசம், நிறவெறிக் கொடுமையின் சாட்சியமாகும். சிறைவாழ்க்கையை ராபன் தீவில் சிறிய சிறை அறையில் கழித்தார். சிறையில் இருந்த காலத்தில் மனைவியைச் சந்திப்பதற்குக்கூட அனுமதி மறுக்கப்பட்டது. 1988 ஆம் ஆண்டு காச நோய் பீடித்து மரணத்தின் எல்லைக்கே அவர் சென்றார். இதற்கு உலக அளவில் எதிர்ப்புக் கிளம்பியது.  இதனைத் தொடர்ந்து 1990 இல் வீட்டுச் சிறைக்கு மாற்றப்பட்டார்

மண்டேலா வாழ்ந்த சிறை
அவரது விடுதலைக்கு பிறகு அமைந்த புதிய தென்னாப்பிரிக்கக் குடியரசின் முதல் ஜனாதிபதியாக செயலாற்றினார். அமைதிக்கான நோபல் பரிசுக்கு மிகத் தகுதியான நபராக, பெருமை சேர்த்தார்.  சூன் 2008ல் பொது வாழ்க்கையிலிருந்து விலகுவதாக அறிவித்தார். 
 
மண்டேலாவின் சிறை வாழ்க்கையும் ஒரு போராட்டமாக அமைந்து, உலகம் முழுவதும் ஆதரவலைகளை உருவாக்கியது. அவரின் மனைவியின் தலைமையில் ஆர்ப்பாட்டங்களும், ஊர்வலங்களும் தொடர்ந்து நடந்து வந்தன. "மன்னிப்பு கேட்டால் விடுதலை செய்கிறோம்" என்ற ஆசை வார்த்தைக்கு மயங்காத அந்தக் தலைவர் - அடக்குமுறையிலிருந்து ஆப்ரிக்காவை விடுதலை செய்து, உலக இனவெறி எதிர்ப்புப் போராட்ட வரலாற்றின் மகுடமானார்.

4 comments:

  1. மண்டேலா இறந்துவிட்டதாக புறளிகள் அதிகரிக்கின்றன. அவருக்கு மரணமேது?

    ReplyDelete
  2. மண்டேலாவின் வாழ்க்கை - படிக்க படிக்க மனதைக் கவ்வுகிறது.

    ReplyDelete
  3. ஆம். தங்கள் கட்டுரை நன்றாக வந்திருக்கிறது. அதுவே, அவர் குறித்து நாம் அறியாதவை ஏராளம் இருப்பதையும் காட்டுகிறது. முடிந்தால் அவரைக் குறித்து தொடர்ந்து எழுத முயற்சி செய்யுங்கள் சிந்தன்.

    ReplyDelete

Labels

Coca Cola (1) Peak Oil (1) Permaculture (1) Power of Community (1) Renewable energy (1) Solar energy (1) SOPA (1) sustainable agriculture (1) அ.குமரேசன் (6) அங்காடிதெரு (1) அணு ஆற்றல் (2) அணுமின் (1) அண்ணா (4) அண்ணா நூலகம் (1) அதிர்ச்சி (1) அத்வானி (2) அந்நிய முதலீடு (2) அபிநயா (1) அப்துல் கலாம் (1) அப்பணசாமி (2) அமெரிக்கா (20) அம்பானி (1) அம்பேத்கர் (9) அரசியல் (177) அரசியல்.நிகழ்வுகள் (6) அரசு (14) அரசு மருத்துவமனை (1) அரசு விடுதி மாணவர்கள் (1) அரவான் (1) அருந்ததியர் (1) அர்ஜெண்டினா (1) அலசல் (1) அவலம் (19) அழகு (1) அறிமுகம் (1) அனுபவம் (28) அன்னா ஹசாரே (1) அஜயன் பாலா (1) ஆ.ராசா (1) ஆணையம் (2) ஆதவன் தீட்சண்யா (3) ஆப்கானிஸ்தான் (1) ஆப்பிரிக்கா (2) ஆர்.மீனா (1) ஆர்எஸ்எஸ் (2) ஆவணப்படம் (3) ஆனந்தன் (2) இ.எம்.ஜோசப் (1) இ.பா.சிந்தன் (22) இட ஓதுக்கீடு (3) இடஒதுக்கீடு (1) இடதுசாரிகள் (4) இணையம் (2) இதழ்கள் (6) இந்தியா (69) இந்துத்துவா (8) இந்துஜா (1) இமு (2) இமு டிச11 (5) இமு நவமபர் 2011 (6) இயக்கம் (7) இயக்குனர் ஷங்கர் (1) இரா.சிந்தன் (5) இரா.செழியன் (2) இரா.நடராஜன் (3) இராம.கோபாலன் (1) இல.சண்முகசுந்தரம் (2) இலக்கியம் (38) இலங்கை (6) இலங்கைத் தமிழர் (4) இலவசக் கல்வி (1) இலவசங்கள் (1) இளவரசன் கொலை (1) இளைஞர் முழக்கம் (11) இஷ்ரத் (2) இஸ்ரேல் ஆக்கிரமிப்பு (1) இஸ்லாம் (3) ஈராக் (1) ஈரான் (2) உ.வாசுகி (1) உச்ச நீதிமன்றம் (1) உணவு நெருக்கடி (2) உதயசங்கர் (1) உத்தப்புரம் (1) உயர்கல்வி (2) உரையாடல்கள் (2) உலக சினிமா (4) உலகமயம் (5) உலகம் (46) உளவியல் (1) உள்ளாட்சி (1) உள்ளாட்சித் தேர்தல் (1) ஊடகங்கள் (14) ஊடகம் (8) ஊழல் (30) எடியூரப்பா (1) எம்.எப்.ஹூசேன் (1) எம்.சிவக்குமார் (2) எரிசக்தி (1) எல்.கே.ஜி (1) என்.ஜி.ஓ (1) என்கவுண்டர் (1) எஸ். பாலா (1) எஸ்.கண்ணன் (1) எஸ்.கருணா (3) எஸ்.பி.ராஜேந்திரன் (3) எஸ்.வி.வேணுகோபாலன் (2) ஏகாதிபத்தியம் (13) ஏமன் (1) ஒபாமா (4) ஓம்பிரகாஷ் வால்மீகி (1) ஓளிப்பதிவு (1) ஃபாக்ஸ்கான் (1) கச்சத் தீவு (1) கட்டுரை (51) கட்டுரைகள் (2) கணிணி (2) கணினி தொழில் நுட்பம் (1) கமல்ஹாசன் (1) கம்யூனிசம் (12) கருணாநிதி (11) கருத்து சுதந்திரம் (1) கருத்துரிமை (3) கலைஞர் (6) கல்வி (14) கவிதை (21) கவிதைகள் (1) கறுப்புப்பணம் (3) கனிமொழி (2) காங்கிரஸ் (10) காதல் (2) கால்பந்து (1) காவல்துறை (4) காஷ்மீர் (1) கி.பார்த்திபராஜா (1) கிங்பிஷர் (1) கியூபா (4) கிரீஸ் (1) குடும்பம் (1) குட்டி ரேவதி (1) குப்பன் சுப்பன் (1) குலாத்தி (1) குழந்தைகள் (9) குழந்தைகள் கடத்தல் (1) குஜராத் கலவரம் (1) குஜராத் படுகொலைகள் (1) கூகிள் அந்தரங்கம் (1) கூடங்குளம் (2) கே.சாமுவேல்ராஜ் (1) கே.பாலமுருகன் (1) கேள்விகள் (1) கைப்பற்றுவோம் போராட்டம் (1) கோவில் (1) ச.தமிழ்ச்செல்வன் (1) ச.மாடசாமி (1) சக்திஜோதி (1) சங்கமம் (1) சசிகலா (1) சச்சின் (1) சட்டசபை (2) சட்டம் (4) சத்யஜித் ரே (1) சந்திரகாந்தன் (1) சமச்சீர் கல்வி (4) சமவூதியம் (1) சமூக நீதி (2) சமூக வலைத்தளம் (1) சமூகப் பாதுகாப்பு (2) சமூகம் (177) சம்பு (1) சரத் பவார் (1) சர்வதேச பெண்கள் தினம் (1) சல்மான் ருஷ்டி (1) சா.கந்தசாமி (2) சா.செயக்குமார் (1) சாகித்திய அகாதமி விருது (1) சாக்லேட் (1) சாதீயம் (4) சாரா விஜி (2) சாலிம் அலி (1) சி.பி.எம் (9) சிக்கிம் (1) சிந்தனை (5) சிபி (1) சிராஜுதீன் (1) சில்லரை வர்த்தகம் (4) சிறப்பு பொருளாதார மண்டலங்கள் (1) சிறுகதை (12) சினிமா (52) சினிமா செய்திகள் (4) சினிமாச் செய்திகள் (4) சீத்தாராம் யெச்சூரி (2) சு.பொ.அகத்தியலிங்கம் (2) சு.வெங்கடேசன் (1) சுகாதாரம் (1) சுதிர் ரா (1) சுயமரியாதைத் திருமணம் (1) சுவாரசியம் (1) சுற்றுப்புறச் சூழல் (3) சூர்யா (1) செம்மலர் (4) செம்மலர் அக் 2011 (4) செய்திகள் (112) சென்னை (1) சோவியத் (1) சோஷலிசம் (1) டெல்லி (2) டேம் 999 (1) த.தமிழரசி (1) தகவல் உரிமை (1) தகவல் திருட்டு (2) தண்ணீர் (3) தமிழக மீனவர்கள் (1) தமிழகம் (66) தமிழர் (1) தமிழ்ச் சினிமா (1) தமிழ்நதி (1) தமுஎகச (4) தலித் (21) தற்கொலை (1) தனியார்மயம் (4) தனுஷ் (1) தி.க (2) திமுக (1) திரிணாமுல் (1) திருப்பூர் (2) திருமணம் (2) திரைக்குப் பின்னால் (2) திரைத்துறை (1) திரைப்பட விழா (1) திரைப்படம் (4) தினகரன் (1) தினமணி (3) தீக்கதிர் (9) தீண்டாமை (22) தீண்டாமையின் அடையாளங்கள் (1) தீபாவளி (1) தேசியச் செய்திகள் (4) தேர்தல் (4) தொண்டு நிறுவனங்கள் (1) தொலைக்காட்சி (2) தொழிலாளர் (6) ந.பெரியசாமி (1) நகர்ப்புற விவசாயம் (1) நகைச்சுவை (1) நக்கீரன் (1) நதிம் சயித் (1) நந்தலாலா (1) நந்தன் (1) நரேந்திர மோடி (6) நலத்திட்டங்கள் (2) நவம்பர் புரட்சி (1) நாடகம் (1) நாடாளுமன்றத் தேர்தல் 2014 (2) நாணய மதிப்பு (1) நாறும்பூநாதன் (1) நிகழ்வுகள் (154) நிலப்பிரபுத்துவம் (1) நிலமோசடி (1) நீதித்துறை (2) நீலவேந்தன் (2) நுகர்வுக் கலாச்சாரம் (2) நூல் அறிமுகம் (12) நூல் வெளியீடுகள் (1) நெல்சன் மண்டேலா (1) நேட்டோ (2) நையாண்டி (26) நையாண்டி் (14) ப.சிதம்பரம் (3) பசுபதி (1) படுகொலை (3) படைப்புகள் (2) பட்ஜெட் (1) பணவீக்கம் (2) பதிவர் வட்டம் (3) பதிவர்வட்டம் (1) பதிவுலகம் (1) பரிந்துரைகள் (5) பழங்குடி (1) பள்ளிக்கூடம் (1) பறவைகள் (1) பன்னாட்டுக் கம்பெனிகள் (3) பா.ஜ.க (3) பாகிஸ்தான் (2) பாடல் (5) பாதல் சர்க்கார் (1) பாதுகாப்பு (1) பாரதி (2) பாலபாரதி (1) பாலஸ்தீனம் (1) பாலியல் வன்முறை (6) பாலு மகேந்திரா (1) பால் சமத்துவம் (1) பாஜக (1) பி.சுகந்தி (1) பி.ராமமூர்த்தி (1) பிடல் காஸ்ட்ரோ (3) பிரணாப் முகர்ஜி (1) பிரபாத் பட்நாயக் (3) பிரளயன் (2) பிரிட்டன் (1) பிர்தவ்ஸ் ராஜகுமாரன் (1) பிளின் (1) பு.பெ.நவமபர் 2011 (1) புகைப்படங்கள் (1) புதிய பரிதி (2) புது விசை (12) புதுமை (1) புத்தக அறிமுகம் (2) புத்தகக் கண்காட்சிகள் (2) புத்தகம் (18) புத்தகம் பேசுது (17) புத்தகம் பேசுது நவம்பர் 2011 (8) புத்தகாலயம் (2) புத்தாண்டு (1) புபே (2) புபே டிச11 (8) புரட்சி (2) புவி (1) புவி டிச11 (5) புவி நவ 2011 (7) புனைவு (1) புஷ் (1) பெட்ரோல் (7) பெண் (11) பெண் விடுதலை (1) பெண்குழந்தை (1) பெண்ணியம் (9) பெண்ணெழுத்து (1) பெரியார் (2) பெருமுதலாளிகள் (7) பேட்டி (2) பேரா.சிவசுப்பிரமணியன் (2) பேஸ்புக் (1) பொருளாதார நெருக்கடி (2) பொருளாதாரம் (24) போக்குவரத்து (1) போராட்டம் (15) போலீஸ் தாக்குதல் (3) ப்ரிசம் (4) ப்ரிசம் - தகவல் திருட்டு (7) ப்ரியா தம்பி (1) மக்களுக்கான மருத்துவம் (1) மக்கள் நலப்பணியாளர்கள் (2) மக்கானா (1) மத அடிப்படை வாதம் (1) மதவெறி (3) மதுசூதனன் (1) மம்தா (3) மம்முட்டி (1) மரபணு (1) மலாலாய் சோயா (1) மவோயிஸ்டுகள் (1) மன்மதன் அம்பு (1) மன்மோகன்சிங் (10) மா ற்று (1) மாட்டுக்கறி (1) மாதர் சங்கம் (1) மாதவராஜ் (2) மாவோ (1) மாற்ற (1) மாற்று (223) மின்கட்டணம் (1) மின்சாரம் (1) மீள்பார்வை (2) முதலாளி (1) முதலாளித்துவம் (11) முத்தமாக மாறேன் (1) முத்துக்கண்ணன் (1) முல்லைப் பெரியாறு (7) முறைகேடுகள் (5) மெகாசீரியல் (1) மே.வங்க அரசு (1) மே.வங்கம் (1) மேதினம் (1) மேற்கு வங்கம் (1) மொக்கை (1) மொழி (2) மொழிபெயர்ப்பு (1) மோசடி (1) மோடி (3) மோனிகா (1) யுத்தம் (2) ரத யாத்திரை (1) ரமேஷ் பாபு (2) ராகுல் காந்தி (2) ராடியா (2) ராஜ பக்‌ஷே (1) ரிலையன்ஸ் (1) ருமேனியா (1) லட்சுமணப்பெருமாள் (2) லெனின் (2) லோக்பால் (5) வசந்த பாலன் (1) வண்ணக்கதிர் (1) வரலாறு (19) வலைப்பூக்கள் (1) வழக்கு விசாரணை (1) வாசிப்பு (5) வாச்சாத்தி (1) வால் ஸ்டிரிட் (3) வால்மார்ட் (1) வால்ஸ்டிரிட் போராட்டம் (2) வாழ்க்கை (4) வானியல் (2) விக்கிபீடியா (1) விக்கிலீகஸ் (1) விக்கிலீக்ஸ் (7) விஞ்ஞானம் (2) விமர்சனம் (10) விலையேற்றம் (2) விலைவாசி (11) விலைவாசி உயர்வு (2) விவாதங்கள் (1) விவாதம் (9) விளம்பரம் (1) விளையாட்டு (4) வினவு (1) விஜய் (2) விஜய் மல்லையா (1) வீட்டுவசதி வாரியம் (1) வீரமணி (2) வெண்மணி (2) வெள்ளம் (2) வெனிசுவெல்லா (1) வேலையின்மை (2) வோடாபோன் (1) ஜப்பான் நெருக்கடி (2) ஜாக்கிசான் (1) ஜாதி (1) ஜாபர் பனாகி (1) ஜூலியன் அசாங்க (1) ஜெயலலிதா (9) ஜோதிடம் (1) ஸ்டீவ் ஜாப்ஸ் (1) ஸ்பீல்பர்க் (2) ஸ்பெக்ட்ரம் (6)