Sunday, June 23, 2013

உடலுறவே திருமணத்தை தீர்மானிக்கிறதா? - சாரா விஜி

சமீபத்தில் சென்னை உயர்நீதி மன்றம் அளித்த தீர்ப்பு ஒன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ”திருமணத்திற்கு முன் உடலுறவு கொள்ளும் ஆணும் பெண்ணும் திருமணமானவர்களாக கருதப்படுவார்கள்என்று சூடான பத்திரிகை செய்திகள் வெளியாயின. இது பெண்களுக்கு ஆதரவான தீர்ப்பு என சிலர் கூற, சிலர் தீர்ப்பு குறித்து அதிருப்தி வெளியிட்டனர். சிலர் இது தனி மனித சுதந்திரத்தை பறிக்கும் என்று கூறினர்

திருமணம் உடல் ரீதியான உறவு மட்டுமா?
இந்த தீர்ப்பை கொடுக்கப்பட்டிருக்கும் வழக்கின் தன்மைக்காக வரவேற்க வேண்டிய அதே நேரத்தில் இது எடுத்துரைக்கும் அனைத்து அம்சங்களை பரிசீலிக்க வேண்டியுள்ளது.
 
வழக்கு என்ன? தீர்ப்பு என்ன?
வழக்கையும் தீர்ப்பையும் முழுமையாக வெளியிடாத ஊழகங்களால், விவாதமின்றி பலரும் அவசர அவசரமாக ஒரு முன் தீர்மானத்திற்கு வந்து விட்டதாக தோன்றுகிறது.

கோவையில் ஒரு பெண் தனது கணவன் தன்னை 1994ல் திருமணம் செய்து கொண்டு இரண்டு குழந்தைகள் பெற்ற பிறகு, 1999ல் “நான் அவனில்லைஎன்று கூறுவதாகவும் தன்னை குழந்தைகளையும் வாழ அவரது மாத வருமானம் ரூ.25000 திலிருந்து ரூ.5000 தர வேண்டும் எனவும் கூறியிருந்தார்.

மருத்துவமனையில் தனது இரண்டாவது குழந்தையின் பிரசவத்தின் போது அந்த ஆண்யிட்ட கையெழுத்தை சாட்சியாக கொண்டு அந்த குழந்தைகள் அந்த ஆணுக்கு பிறந்தவை தான் என்று நீதிமன்றம் ஒப்புக் கொண்டது. முதலில் அந்தப் பெண் நடத்தை கெட்டவள் என்று குற்றம் சாட்டிய அந்த ஆண், தீர்ப்பை மறுக்கவில்லை. எனினும் திருமணம் நடந்ததற்கான சான்றிதழ் உள்ளிட்ட ஆதாரங்கள் ஏதும் இல்லாததால் அந்தப் பெண் அவரின் மனைவி இல்லை என்று கோவை நீதிமன்றம் தீர்ப்பளித்த்து. இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு நடந்துவந்தது. 

 மருத்துவமனைக் கோப்புகளில் உள்ள கையெழுத்தே அந்த ஆண் இப்பண்ணின் கணவனாக வாழ்ந்துள்ளார் என்பதற்கு சாட்சியாக கொள்ளப்பட வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் கூறியது. மேலும் அவர் குடும்ப அட்டைக்கு குடும்பத்தின் தலைவனாக விண்ணிப்பித்திருப்பதும் கருத்தில் கொள்ளப்பட்டது. இதிலிருந்து இருவரும் இணைந்து வாழ்ந்திருப்பதும் அந்த வாழ்க்கையில் இரண்டு குழந்தைகள் பிறந்திருப்பதும் நிரூபணமாவதாக நீதிமன்றம் தெரிவித்தது. 

திருமணம் நடந்ததற்கு தாலி, நெருப்பைச் சுற்றி  வருவது, போன்ற மத சடங்குகளை கணக்கில் கொள்வதை விட சம்பந்தப்பட்ட இருவரும் ஒன்றாக வாழ்ந்ததற்கான சட்ட ரீதியான சாட்சிகளேயே கணக்கில் கொள்ள வேண்டும் என்று நீதிபதி கூறியுள்ளார். எனவே இந்த வழக்கில் இந்த ஆண் தான் இப்பெண்ணின் கணவன் என்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

மேலும் தீர்ப்பில் கூறப்பட்டவை
21 வயது நிரம்பிய ஆணும் 18 வயதான பெண்ணும் உடலுறவுக் கொண்டு அதன் விளைவாக அந்தப் பெண் கர்பமடைந்தால் அந்தப் பெண் அந்த ஆணின் மனைவியாக சட்ட்த்தின் முன் கருதப்படுவாள். கர்பம் அடையாவிட்டாலும், அவர்களது உறவை நிரூபிக்க வேறு வலுவான ஆதாரங்கள் இருந்தால் அந்தப் பெண் சட்டப்பூர்வமான மனைவியாக கருதப்படுவாள் என்றும் கூறுகிறது.

எனவே அந்த பெண்ணை விடுத்து வேறு ஒரு பெண்ணை அந்த ஆண் திருமணம் செய்ய வேண்டுமானால், மனைவியாக இருக்கும் பெண்ணை சட்டப்பூர்வமாக விவாகரத்து செய்த பின்பே அது முடியும் என்றும் தீர்ப்பு கூறுகிறது

இந்த வழக்கில் இந்த தீர்ப்பு சரியானதே!
இந்த வழக்கில் கொடுக்கப்பட்டுள்ள தீர்ப்பு சரியானதே. சேர்ந்த வாழ்ந்த கணவன் புகைப்படம் இல்லை, சான்றிதழ் இல்லை என்பதால் திருமணம் செய்த பெண்ணை ஏமாற்றிவிட முடியாது என்ற எச்சரிக்கை செய்தியை தெளிவாக கூறுகிறது இத்தீர்ப்பு


எல்லாம் சரியாகத்தானே இருக்கிறது. இதிலென்ன பிரச்சனை? பத்திரிகை செய்திகள் வேறு மாதிரியாக வர காரணம் என்ன?

மேற்கூறிய விஷயங்களை கூறிய தீர்ப்பு மேலும் சிலவற்றை கூறியுள்ளது: ஒரு திருமணம் சட்டப்பூர்வமாக செல்லும் என்பதை தீர்மானிப்பது ஆணும் பெண்ணும் கொள்ளும் உடலுறவு தான் என்று கூறுகிறது. ஓரினச் சேர்க்கை, ”லிவிங் டுகெதர்” போன்ற உறவு முறைகள் முளைத்து நிற்கும் காலத்தில் திருமணத்தை வெறும் உடலுறவிற்குள் சுருக்கி விடுவதாக உள்ளது.

இந்த தீர்ப்பின் சாராம்சத்தை, பெண்களுக்கு எதிராகவும் வியாக்கியானம் செய்ய முடியும். ஒரு பெண்ணை வலுகட்டாயமாக உடலுறவுக் கொண்டு பின்பு அவளை பெண்ணை மிரட்டி சட்டத்தின் முன் இது வல்லுறவு அல்ல என்று நிரூபிக்கும் சூழலில் - அது திருமணம் என்று கருதப்படுமா?

வழக்கறிஞர் சிவகுமார், திருமணத்திற்கு முன்பு பல பெண்களுடன் ஒரு ஆண் உடலுறவு கொண்டால், யாரை மனைவி என்று கூறுவது? ஒரு ஆணுடன் உடலுறவுக் கொண்ட பிறகு அவன் சரியானவன் இல்லை தெரிய வருகிறது. இந்த உறவு வேண்டாம் என்று முடிவெடுக்கும் வாய்ப்பை மறுக்கவும் இது வழி வகுக்கும். இந்த வழக்கில் இந்த தீர்ப்பு சரியானது. ஆனால் இதை பொதுப்படையாக எடுத்து கொள்ள முடியாது. என்று கூறுகிறார்.

மேலும் பி.பி.சி. தமிழ் வலைதளச் செய்தியில் நீதிபதி சந்துரு வழக்கை தாண்டி பல விஷயங்கள் இத்தீர்ப்பில் கூறப்பட்டுள்ளதாக சொல்லியிருக்கிறார். தீர்ப்பை ஒட்டி எழுந்த சர்ச்சைகளை அடுத்து,  கர்ணன் அவர்கள் ,இந்த தீர்ப்பு சரி தான் என்று நியாயப்படுத்த ஊடகத்தில் கூறிய காரணங்கள் ஏற்றுக் கொள்பவையாக இல்லை.

அவர் ‘இது இந்திய கலாச்சாரத்தையும் பெண்களையும் பாதுகாப்பதாக கூறுகிறார். து இந்திய கலாச்சாரம்?  தன்னை ஒருவன்தொட்டுவிட்டால் அவனுடேயே வாழ வேண்டும் என்ற நிர்பந்தத்தை ஏற்படுத்தி விடுகிறது சமூகம். ஒருவன்தொட்டபெண்ணை வேறு ஒருவன்தொடமுன் வர மாட்டான் என்ற சமுதாயத்தின் போக்கை வலியுறுத்துவதாக அந்த விளக்கம் அமைகிறது. கல்லானாலும் கணவன். புல்லானாலும் புருஷன்என்று சொல்வதுதான் இவர்கள் கூறும் இந்திய கலாச்சாரமா?

இப்படி பல சர்ச்சைகள் இருந்தாலும் இந்த தீர்ப்பு இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணை போன்ற பெண்களுக்கு சாதகமாகத்தான் உள்ளது. வழக்கறிஞர் சிவகுமார் கூறுவது போல திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றப்படும் பெண்களுக்கு ஆதரவான தீர்ப்பாக இது அமைகிறது. இந்த தீர்ப்பை முன்மாதிரியாகக் கொண்டு ஏமாற்றப்படும் பெண்களுக்கு சாதமாக சட்டங்கள் இயற்ற முயற்சிகள் எடுக்கலாம்.

-சாரா விஜி

0 comments:

Post a Comment

Labels

Coca Cola (1) Peak Oil (1) Permaculture (1) Power of Community (1) Renewable energy (1) Solar energy (1) SOPA (1) sustainable agriculture (1) அ.குமரேசன் (6) அங்காடிதெரு (1) அணு ஆற்றல் (2) அணுமின் (1) அண்ணா (4) அண்ணா நூலகம் (1) அதிர்ச்சி (1) அத்வானி (2) அந்நிய முதலீடு (2) அபிநயா (1) அப்துல் கலாம் (1) அப்பணசாமி (2) அமெரிக்கா (20) அம்பானி (1) அம்பேத்கர் (9) அரசியல் (177) அரசியல்.நிகழ்வுகள் (6) அரசு (14) அரசு மருத்துவமனை (1) அரசு விடுதி மாணவர்கள் (1) அரவான் (1) அருந்ததியர் (1) அர்ஜெண்டினா (1) அலசல் (1) அவலம் (19) அழகு (1) அறிமுகம் (1) அனுபவம் (28) அன்னா ஹசாரே (1) அஜயன் பாலா (1) ஆ.ராசா (1) ஆணையம் (2) ஆதவன் தீட்சண்யா (3) ஆப்கானிஸ்தான் (1) ஆப்பிரிக்கா (2) ஆர்.மீனா (1) ஆர்எஸ்எஸ் (2) ஆவணப்படம் (3) ஆனந்தன் (2) இ.எம்.ஜோசப் (1) இ.பா.சிந்தன் (22) இட ஓதுக்கீடு (3) இடஒதுக்கீடு (1) இடதுசாரிகள் (4) இணையம் (2) இதழ்கள் (6) இந்தியா (69) இந்துத்துவா (8) இந்துஜா (1) இமு (2) இமு டிச11 (5) இமு நவமபர் 2011 (6) இயக்கம் (7) இயக்குனர் ஷங்கர் (1) இரா.சிந்தன் (5) இரா.செழியன் (2) இரா.நடராஜன் (3) இராம.கோபாலன் (1) இல.சண்முகசுந்தரம் (2) இலக்கியம் (38) இலங்கை (6) இலங்கைத் தமிழர் (4) இலவசக் கல்வி (1) இலவசங்கள் (1) இளவரசன் கொலை (1) இளைஞர் முழக்கம் (11) இஷ்ரத் (2) இஸ்ரேல் ஆக்கிரமிப்பு (1) இஸ்லாம் (3) ஈராக் (1) ஈரான் (2) உ.வாசுகி (1) உச்ச நீதிமன்றம் (1) உணவு நெருக்கடி (2) உதயசங்கர் (1) உத்தப்புரம் (1) உயர்கல்வி (2) உரையாடல்கள் (2) உலக சினிமா (4) உலகமயம் (5) உலகம் (46) உளவியல் (1) உள்ளாட்சி (1) உள்ளாட்சித் தேர்தல் (1) ஊடகங்கள் (14) ஊடகம் (8) ஊழல் (30) எடியூரப்பா (1) எம்.எப்.ஹூசேன் (1) எம்.சிவக்குமார் (2) எரிசக்தி (1) எல்.கே.ஜி (1) என்.ஜி.ஓ (1) என்கவுண்டர் (1) எஸ். பாலா (1) எஸ்.கண்ணன் (1) எஸ்.கருணா (3) எஸ்.பி.ராஜேந்திரன் (3) எஸ்.வி.வேணுகோபாலன் (2) ஏகாதிபத்தியம் (13) ஏமன் (1) ஒபாமா (4) ஓம்பிரகாஷ் வால்மீகி (1) ஓளிப்பதிவு (1) ஃபாக்ஸ்கான் (1) கச்சத் தீவு (1) கட்டுரை (51) கட்டுரைகள் (2) கணிணி (2) கணினி தொழில் நுட்பம் (1) கமல்ஹாசன் (1) கம்யூனிசம் (12) கருணாநிதி (11) கருத்து சுதந்திரம் (1) கருத்துரிமை (3) கலைஞர் (6) கல்வி (14) கவிதை (21) கவிதைகள் (1) கறுப்புப்பணம் (3) கனிமொழி (2) காங்கிரஸ் (10) காதல் (2) கால்பந்து (1) காவல்துறை (4) காஷ்மீர் (1) கி.பார்த்திபராஜா (1) கிங்பிஷர் (1) கியூபா (4) கிரீஸ் (1) குடும்பம் (1) குட்டி ரேவதி (1) குப்பன் சுப்பன் (1) குலாத்தி (1) குழந்தைகள் (9) குழந்தைகள் கடத்தல் (1) குஜராத் கலவரம் (1) குஜராத் படுகொலைகள் (1) கூகிள் அந்தரங்கம் (1) கூடங்குளம் (2) கே.சாமுவேல்ராஜ் (1) கே.பாலமுருகன் (1) கேள்விகள் (1) கைப்பற்றுவோம் போராட்டம் (1) கோவில் (1) ச.தமிழ்ச்செல்வன் (1) ச.மாடசாமி (1) சக்திஜோதி (1) சங்கமம் (1) சசிகலா (1) சச்சின் (1) சட்டசபை (2) சட்டம் (4) சத்யஜித் ரே (1) சந்திரகாந்தன் (1) சமச்சீர் கல்வி (4) சமவூதியம் (1) சமூக நீதி (2) சமூக வலைத்தளம் (1) சமூகப் பாதுகாப்பு (2) சமூகம் (177) சம்பு (1) சரத் பவார் (1) சர்வதேச பெண்கள் தினம் (1) சல்மான் ருஷ்டி (1) சா.கந்தசாமி (2) சா.செயக்குமார் (1) சாகித்திய அகாதமி விருது (1) சாக்லேட் (1) சாதீயம் (4) சாரா விஜி (2) சாலிம் அலி (1) சி.பி.எம் (9) சிக்கிம் (1) சிந்தனை (5) சிபி (1) சிராஜுதீன் (1) சில்லரை வர்த்தகம் (4) சிறப்பு பொருளாதார மண்டலங்கள் (1) சிறுகதை (12) சினிமா (52) சினிமா செய்திகள் (4) சினிமாச் செய்திகள் (4) சீத்தாராம் யெச்சூரி (2) சு.பொ.அகத்தியலிங்கம் (2) சு.வெங்கடேசன் (1) சுகாதாரம் (1) சுதிர் ரா (1) சுயமரியாதைத் திருமணம் (1) சுவாரசியம் (1) சுற்றுப்புறச் சூழல் (3) சூர்யா (1) செம்மலர் (4) செம்மலர் அக் 2011 (4) செய்திகள் (112) சென்னை (1) சோவியத் (1) சோஷலிசம் (1) டெல்லி (2) டேம் 999 (1) த.தமிழரசி (1) தகவல் உரிமை (1) தகவல் திருட்டு (2) தண்ணீர் (3) தமிழக மீனவர்கள் (1) தமிழகம் (66) தமிழர் (1) தமிழ்ச் சினிமா (1) தமிழ்நதி (1) தமுஎகச (4) தலித் (21) தற்கொலை (1) தனியார்மயம் (4) தனுஷ் (1) தி.க (2) திமுக (1) திரிணாமுல் (1) திருப்பூர் (2) திருமணம் (2) திரைக்குப் பின்னால் (2) திரைத்துறை (1) திரைப்பட விழா (1) திரைப்படம் (4) தினகரன் (1) தினமணி (3) தீக்கதிர் (9) தீண்டாமை (22) தீண்டாமையின் அடையாளங்கள் (1) தீபாவளி (1) தேசியச் செய்திகள் (4) தேர்தல் (4) தொண்டு நிறுவனங்கள் (1) தொலைக்காட்சி (2) தொழிலாளர் (6) ந.பெரியசாமி (1) நகர்ப்புற விவசாயம் (1) நகைச்சுவை (1) நக்கீரன் (1) நதிம் சயித் (1) நந்தலாலா (1) நந்தன் (1) நரேந்திர மோடி (6) நலத்திட்டங்கள் (2) நவம்பர் புரட்சி (1) நாடகம் (1) நாடாளுமன்றத் தேர்தல் 2014 (2) நாணய மதிப்பு (1) நாறும்பூநாதன் (1) நிகழ்வுகள் (154) நிலப்பிரபுத்துவம் (1) நிலமோசடி (1) நீதித்துறை (2) நீலவேந்தன் (2) நுகர்வுக் கலாச்சாரம் (2) நூல் அறிமுகம் (12) நூல் வெளியீடுகள் (1) நெல்சன் மண்டேலா (1) நேட்டோ (2) நையாண்டி (26) நையாண்டி் (14) ப.சிதம்பரம் (3) பசுபதி (1) படுகொலை (3) படைப்புகள் (2) பட்ஜெட் (1) பணவீக்கம் (2) பதிவர் வட்டம் (3) பதிவர்வட்டம் (1) பதிவுலகம் (1) பரிந்துரைகள் (5) பழங்குடி (1) பள்ளிக்கூடம் (1) பறவைகள் (1) பன்னாட்டுக் கம்பெனிகள் (3) பா.ஜ.க (3) பாகிஸ்தான் (2) பாடல் (5) பாதல் சர்க்கார் (1) பாதுகாப்பு (1) பாரதி (2) பாலபாரதி (1) பாலஸ்தீனம் (1) பாலியல் வன்முறை (6) பாலு மகேந்திரா (1) பால் சமத்துவம் (1) பாஜக (1) பி.சுகந்தி (1) பி.ராமமூர்த்தி (1) பிடல் காஸ்ட்ரோ (3) பிரணாப் முகர்ஜி (1) பிரபாத் பட்நாயக் (3) பிரளயன் (2) பிரிட்டன் (1) பிர்தவ்ஸ் ராஜகுமாரன் (1) பிளின் (1) பு.பெ.நவமபர் 2011 (1) புகைப்படங்கள் (1) புதிய பரிதி (2) புது விசை (12) புதுமை (1) புத்தக அறிமுகம் (2) புத்தகக் கண்காட்சிகள் (2) புத்தகம் (18) புத்தகம் பேசுது (17) புத்தகம் பேசுது நவம்பர் 2011 (8) புத்தகாலயம் (2) புத்தாண்டு (1) புபே (2) புபே டிச11 (8) புரட்சி (2) புவி (1) புவி டிச11 (5) புவி நவ 2011 (7) புனைவு (1) புஷ் (1) பெட்ரோல் (7) பெண் (11) பெண் விடுதலை (1) பெண்குழந்தை (1) பெண்ணியம் (9) பெண்ணெழுத்து (1) பெரியார் (2) பெருமுதலாளிகள் (7) பேட்டி (2) பேரா.சிவசுப்பிரமணியன் (2) பேஸ்புக் (1) பொருளாதார நெருக்கடி (2) பொருளாதாரம் (24) போக்குவரத்து (1) போராட்டம் (15) போலீஸ் தாக்குதல் (3) ப்ரிசம் (4) ப்ரிசம் - தகவல் திருட்டு (7) ப்ரியா தம்பி (1) மக்களுக்கான மருத்துவம் (1) மக்கள் நலப்பணியாளர்கள் (2) மக்கானா (1) மத அடிப்படை வாதம் (1) மதவெறி (3) மதுசூதனன் (1) மம்தா (3) மம்முட்டி (1) மரபணு (1) மலாலாய் சோயா (1) மவோயிஸ்டுகள் (1) மன்மதன் அம்பு (1) மன்மோகன்சிங் (10) மா ற்று (1) மாட்டுக்கறி (1) மாதர் சங்கம் (1) மாதவராஜ் (2) மாவோ (1) மாற்ற (1) மாற்று (223) மின்கட்டணம் (1) மின்சாரம் (1) மீள்பார்வை (2) முதலாளி (1) முதலாளித்துவம் (11) முத்தமாக மாறேன் (1) முத்துக்கண்ணன் (1) முல்லைப் பெரியாறு (7) முறைகேடுகள் (5) மெகாசீரியல் (1) மே.வங்க அரசு (1) மே.வங்கம் (1) மேதினம் (1) மேற்கு வங்கம் (1) மொக்கை (1) மொழி (2) மொழிபெயர்ப்பு (1) மோசடி (1) மோடி (3) மோனிகா (1) யுத்தம் (2) ரத யாத்திரை (1) ரமேஷ் பாபு (2) ராகுல் காந்தி (2) ராடியா (2) ராஜ பக்‌ஷே (1) ரிலையன்ஸ் (1) ருமேனியா (1) லட்சுமணப்பெருமாள் (2) லெனின் (2) லோக்பால் (5) வசந்த பாலன் (1) வண்ணக்கதிர் (1) வரலாறு (19) வலைப்பூக்கள் (1) வழக்கு விசாரணை (1) வாசிப்பு (5) வாச்சாத்தி (1) வால் ஸ்டிரிட் (3) வால்மார்ட் (1) வால்ஸ்டிரிட் போராட்டம் (2) வாழ்க்கை (4) வானியல் (2) விக்கிபீடியா (1) விக்கிலீகஸ் (1) விக்கிலீக்ஸ் (7) விஞ்ஞானம் (2) விமர்சனம் (10) விலையேற்றம் (2) விலைவாசி (11) விலைவாசி உயர்வு (2) விவாதங்கள் (1) விவாதம் (9) விளம்பரம் (1) விளையாட்டு (4) வினவு (1) விஜய் (2) விஜய் மல்லையா (1) வீட்டுவசதி வாரியம் (1) வீரமணி (2) வெண்மணி (2) வெள்ளம் (2) வெனிசுவெல்லா (1) வேலையின்மை (2) வோடாபோன் (1) ஜப்பான் நெருக்கடி (2) ஜாக்கிசான் (1) ஜாதி (1) ஜாபர் பனாகி (1) ஜூலியன் அசாங்க (1) ஜெயலலிதா (9) ஜோதிடம் (1) ஸ்டீவ் ஜாப்ஸ் (1) ஸ்பீல்பர்க் (2) ஸ்பெக்ட்ரம் (6)