Friday, June 28, 2013

ரூபாய் மதிப்பு வீழ்ச்சி - 1 (பணம் என்பதன் உட்பொருள்)


ஆதிகாலத்தில் மனிதன் மரங்களில் - குகைகளில் தங்கி, காடுமேடுகளில் சுற்றி காய்கனிகளைப் பறித்து, பிராணிகளை வேட்டையாடி வாழ்ந்து வந்தான். அதற்குப்பின், நெருப்பை உண்டாக்கவும் பயன்படுத்தவும் ஆரம்பித்து, ஆறு - ஏரிகள் அருகில் குடிசைகளை -குடும்பங்களை அமைக்கவும் விவசாயத்தின் மூலம் உணவுப் பண்டங்களை உற்பத்தி செய்யவும் ஆரம்பித்தான்.

பண்டமாற்று முறை:

தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் உள்ள தேவைகளை தனிப்பட்ட ஒரு மனிதனால் முழுமையாக பூர்த்திசெய்ய முடியாது. அதனால் தான் உற்பத்தி செய்யும் பண்டத்துக்கு ஈடாக தனக்குத் தேவையான மற்றொரு பொருளை உண்டாக்குபவனிடம் சென்று தனது பொருளைக் கொடுத்து, தனது தேவைக்கான பொருளை அவனிடமிருந்து பெறும் "பண்டம் மாற்றும் முறை' உருவானது.

பண்டமாற்று முறையில், கொடுப்பது வாங்குவது இரண்டும் ஒரே தடவையில் நடைபெற்று முடிந்துவிடும். ஒரு படி நெல்லுக்குப் பதில் மூன்று முட்டைகள், பத்து கோழிகளுக்கு ஈடாக ஒரு ஆடு, பதினைந்து மாடுகளுக்குப் பதில் ஒரு குதிரை என நேரடியாக இருவருக்குள் பண்டமாற்றுமுறை நடைபெற்றது.
உப்பை மட்டும் தயாரிக்கிற ஒருவன் அதை எடுத்துக்கொண்டு ஊர் ஊராகச் சுற்றி வரவேண்டும்; வாழைத் தோட்டத்தில் பாடுபட்டு, விளையும் வாழைப் பழங்களை உடனடியாகப் பண்டமாற்று முறையில் மாற்றவில்லை என்றால், பழங்கள் விரைவில் கெட்டுவிடக் கூடும்.

நேரடியான பண்டமாற்று முறையில் உள்ள சங்கடங்களைச் சமாளிக்க, உப்பு, தேயிலை, ஆடு-மாடுகள், புகையிலை, பாதாம் பருப்பு போன்று "பொதுவாக' எல்லோருக்கும் தேவைப்படும் பொருள்களில் ஒன்றை மாற்றி இன்னொன்றைப் பெற்றுக்கொள்ளக்கூடிய முறை பழக்கத்தில் வந்தது.
அடுத்து இடையில், ஒவ்வொருவருக்கும் தேவைப்படும் பொருள்களை எல்லாம் நேர்மையான முறையில் மதிப்பீடு செய்து அதற்கான மைய அடையாளத்தை வைத்துக்கொண்டு, உற்பத்தியான பொருள்களை அவற்றுக்கான மதிப்பீட்டு அடையாளங்களைத் தந்து - தேவையானவற்றை வாங்கி - மற்றவர்களுக்குத் தரும் முறையில், உற்பத்தி செய்பவனுக்கும் வாங்குபவனுக்கும் இடையில் பொதுவான மதிப்பீடும் ஒரு ஏற்பாடாக வந்தது. பொதுவான இந்த மதிப்பீட்டு அடையாளம்தான் "பணம்' என்பது.
முதலில் "பொன்' கட்டிகளை உருவாக்கி, அதன் கனத்தை வைத்து எல்லாவற்றயும் வாங்க - விற்க முடியும் என்ற முறை வந்தது. பிறகு வட்ட வடிவில் காசுகள் தங்கம், வெள்ளி ஆகியவற்றில் வெளிவந்தன. அவற்றை நேர்மையாக நடத்த அந்தக் காசுகளில் அரசாங்க முத்திரை பதிக்கப்பட்டது. நாளடைவில் மன்னரின் உருவத்தைப் பதித்து பொற்காசு, வெள்ளிக்காசுகள் போடப்பட்டன.

உலோகங்களில் காசுகள் வருவது 7,000 ஆண்டுகளுக்கு முன்பு - அதாவது கி.மு. 5000 காலத்தில் பழக்கத்துக்கு வந்துவிட்டது. குறைவான மதிப்பீடுகளுக்காக வெண்கலம், இரும்பு ஆகியவற்றிலும் காசுகள் வந்தன. பொன்-வெள்ளி ஆகியவற்றால் ஆன காசுகளுக்கு இருந்த வரவேற்பு மற்ற உலோகங்களின் காசுகளுக்கு இயல்பாகக் கிடைக்காது.

இந்திய ரூபாய் வரலாறு
ஆப்கானிஸ்தானத்தைச் சேர்ந்த ஷெர்ஷா சூரி, மொகலாய மன்னர் பாபர் படையில் பங்கு பெற்று, அவருக்குப் பிறகு வங்காளத்தில் தளபதியாகப் பணிபுரிந்தார்; பாபருக்குப் பிறகு ஹமாயூன் காலத்தில் வங்காளம், பிகார் பகுதிகளை வென்று தில்லியில் 1540-45 வரை ஐந்தாண்டுக் காலம் ஆட்சியில் இருந்தார். அவருடைய ஆட்சியில் "ருப்யா' என்ற வெள்ளிக் காசு வெளியிடப்பட்டது. அந்தப் பெயரில் தொடர்ந்து ரூபாய் நாணயங்கள் வெளிவந்தன, ஆங்கிலேயர் காலத்திலும் அவர்களின் சக்ரவர்த்தி - சக்ரவர்த்தினி உருவங்கள் பொறிக்கப்பட்ட ரூபாய், காசுகள் வெளிவந்தன.

காகிதப் பணம்
பொன்-வெள்ளி உள்பட பல உலோகங்களை வைத்து காசுகள் இருந்த காலத்தில், நாட்டில் பெருமளவில் வணிகம் பெருகியதால் வணிகர்களிடம் குவிகிற பணம் தூக்க முடியாதபடி கனமானது. அதிலும் சீன நாட்டில் நீண்ட தூரங்களுக்குப் பயணம் செய்யும் வியாபாரிகளுக்கு உதவியாக அவர்களுடைய சாமான்களை - பணத்தைப் பாதுகாத்துத் தரும் நிறுவனங்கள், வணிகர்களின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தி காகித அறிவிப்புகளைத் தந்தார்கள். அந்த அறிவிப்புகள் கி.பி. 740 முதல் "காகிதப் பணமாக' மாறியது. தனிப்பட்டவர்கள் தரும் காகித அறிவிப்பை மாற்றி, அரசாங்கமே காகிதப் பணத்தை வெளியிட ஆரம்பித்தது.

மேலை நாடுகளில், இங்கிலாந்தில் 1725, பிரான்சில் 1794-1803, அமெரிக்காவில் 1861-66, காலங்களில் காகிதப் பணம் முதலில் வங்கிகள் மூலமாக - பிறகு சட்டபூர்வமாக அரசாங்க வங்கியின் பொறுப்பாக ஆனது. அதனால் காகிதப் பணம் ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு வகையில் வளர்ச்சியடைந்தது.
இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சி துவங்கியதும் 1867-ஆம் ஆண்டில் 10 ரூபாய் நோட்டு, 1900-இல் 100 ருபாய் நோட்டு வெளிவந்தன. ஆனால், 1947 விடுதலை பெறும்வரை இந்தியாவில் 565 தனிப்பட்ட மன்னர்களின் அரசுகள் இருந்தன. அவைகளில் ஒவ்வொரு அரசிலும் தனிப்பட்ட காசுகள் வழக்கத்தில் இருந்தன.
பொன்-வெள்ளிக் காசுகள் இருந்த காலத்தில் அதிலுள்ள பொன், வெள்ளி ஆகியவற்றின் மதிப்பில் மக்களுக்கு நம்பிக்கை இருந்தது. ஆனால், 100 ரூபாய் நோட்டு என்றால் அதிலுள்ள காகிதத்தின் மதிப்பு ஒரு காசுகூட இருக்காது. எனினும் அதைத் தயாரிக்கும் அரசாங்கம் தரும் உறுதிப்பாட்டில் மக்களுக்கு நம்பிக்கை இருக்க வேண்டும்.

100 ரூபாய் நோட்டை எடுத்துப் பாருங்கள். ரூபாய் நோட்டுகளை மத்திய அரசாங்கம் தரும் உறுதிப்பாட்டுடன் ரிசர்வ் வங்கியால் தயாரிக்கப்படுகிறது. அதில் "இந்த நோட்டைக் கொண்டு வருபவருக்கு நூறு ரூபாய் தரப்படும் என உறுதி கூறுகிறேன்' என்று ரிசர்வ் வங்கி கவர்னர் கையெழுத்திட்ட உரை ஆங்கிலத்தில் இருக்கும். நோட்டின் ஒரு பக்கத்தில் 15 இந்திய மொழிகளில் "நூறு ரூபாய்' என எழுதப்பட்டிருக்கும். ஆக, காகிதப் பணம் என்பது அரசாங்கம் தரும் உறுதிப்பாட்டின்மீதுதான் - மக்கள் வைக்கும் நம்பிக்கைகையில்தான் - நிலைபெற்றிருக்கிறது.

தொடரும் ...

1 comment:

  1. கட்டுரையாளர், இந்திரா காலத்திலிருந்து தீவிரமாக அமலாக்கப்பட்ட உலகமயம், தாராளமயக் கொள்கைகளை குறித்து இக்கட்டுரையில் குறிப்பிட தவறுகிறார். அதுவே, ஏதோ இது இந்திராவின் தவறால் நடந்தது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறது.

    ReplyDelete

Labels

Coca Cola (1) Peak Oil (1) Permaculture (1) Power of Community (1) Renewable energy (1) Solar energy (1) SOPA (1) sustainable agriculture (1) அ.குமரேசன் (6) அங்காடிதெரு (1) அணு ஆற்றல் (2) அணுமின் (1) அண்ணா (4) அண்ணா நூலகம் (1) அதிர்ச்சி (1) அத்வானி (2) அந்நிய முதலீடு (2) அபிநயா (1) அப்துல் கலாம் (1) அப்பணசாமி (2) அமெரிக்கா (20) அம்பானி (1) அம்பேத்கர் (9) அரசியல் (177) அரசியல்.நிகழ்வுகள் (6) அரசு (14) அரசு மருத்துவமனை (1) அரசு விடுதி மாணவர்கள் (1) அரவான் (1) அருந்ததியர் (1) அர்ஜெண்டினா (1) அலசல் (1) அவலம் (19) அழகு (1) அறிமுகம் (1) அனுபவம் (28) அன்னா ஹசாரே (1) அஜயன் பாலா (1) ஆ.ராசா (1) ஆணையம் (2) ஆதவன் தீட்சண்யா (3) ஆப்கானிஸ்தான் (1) ஆப்பிரிக்கா (2) ஆர்.மீனா (1) ஆர்எஸ்எஸ் (2) ஆவணப்படம் (3) ஆனந்தன் (2) இ.எம்.ஜோசப் (1) இ.பா.சிந்தன் (22) இட ஓதுக்கீடு (3) இடஒதுக்கீடு (1) இடதுசாரிகள் (4) இணையம் (2) இதழ்கள் (6) இந்தியா (69) இந்துத்துவா (8) இந்துஜா (1) இமு (2) இமு டிச11 (5) இமு நவமபர் 2011 (6) இயக்கம் (7) இயக்குனர் ஷங்கர் (1) இரா.சிந்தன் (5) இரா.செழியன் (2) இரா.நடராஜன் (3) இராம.கோபாலன் (1) இல.சண்முகசுந்தரம் (2) இலக்கியம் (38) இலங்கை (6) இலங்கைத் தமிழர் (4) இலவசக் கல்வி (1) இலவசங்கள் (1) இளவரசன் கொலை (1) இளைஞர் முழக்கம் (11) இஷ்ரத் (2) இஸ்ரேல் ஆக்கிரமிப்பு (1) இஸ்லாம் (3) ஈராக் (1) ஈரான் (2) உ.வாசுகி (1) உச்ச நீதிமன்றம் (1) உணவு நெருக்கடி (2) உதயசங்கர் (1) உத்தப்புரம் (1) உயர்கல்வி (2) உரையாடல்கள் (2) உலக சினிமா (4) உலகமயம் (5) உலகம் (46) உளவியல் (1) உள்ளாட்சி (1) உள்ளாட்சித் தேர்தல் (1) ஊடகங்கள் (14) ஊடகம் (8) ஊழல் (30) எடியூரப்பா (1) எம்.எப்.ஹூசேன் (1) எம்.சிவக்குமார் (2) எரிசக்தி (1) எல்.கே.ஜி (1) என்.ஜி.ஓ (1) என்கவுண்டர் (1) எஸ். பாலா (1) எஸ்.கண்ணன் (1) எஸ்.கருணா (3) எஸ்.பி.ராஜேந்திரன் (3) எஸ்.வி.வேணுகோபாலன் (2) ஏகாதிபத்தியம் (13) ஏமன் (1) ஒபாமா (4) ஓம்பிரகாஷ் வால்மீகி (1) ஓளிப்பதிவு (1) ஃபாக்ஸ்கான் (1) கச்சத் தீவு (1) கட்டுரை (51) கட்டுரைகள் (2) கணிணி (2) கணினி தொழில் நுட்பம் (1) கமல்ஹாசன் (1) கம்யூனிசம் (12) கருணாநிதி (11) கருத்து சுதந்திரம் (1) கருத்துரிமை (3) கலைஞர் (6) கல்வி (14) கவிதை (21) கவிதைகள் (1) கறுப்புப்பணம் (3) கனிமொழி (2) காங்கிரஸ் (10) காதல் (2) கால்பந்து (1) காவல்துறை (4) காஷ்மீர் (1) கி.பார்த்திபராஜா (1) கிங்பிஷர் (1) கியூபா (4) கிரீஸ் (1) குடும்பம் (1) குட்டி ரேவதி (1) குப்பன் சுப்பன் (1) குலாத்தி (1) குழந்தைகள் (9) குழந்தைகள் கடத்தல் (1) குஜராத் கலவரம் (1) குஜராத் படுகொலைகள் (1) கூகிள் அந்தரங்கம் (1) கூடங்குளம் (2) கே.சாமுவேல்ராஜ் (1) கே.பாலமுருகன் (1) கேள்விகள் (1) கைப்பற்றுவோம் போராட்டம் (1) கோவில் (1) ச.தமிழ்ச்செல்வன் (1) ச.மாடசாமி (1) சக்திஜோதி (1) சங்கமம் (1) சசிகலா (1) சச்சின் (1) சட்டசபை (2) சட்டம் (4) சத்யஜித் ரே (1) சந்திரகாந்தன் (1) சமச்சீர் கல்வி (4) சமவூதியம் (1) சமூக நீதி (2) சமூக வலைத்தளம் (1) சமூகப் பாதுகாப்பு (2) சமூகம் (177) சம்பு (1) சரத் பவார் (1) சர்வதேச பெண்கள் தினம் (1) சல்மான் ருஷ்டி (1) சா.கந்தசாமி (2) சா.செயக்குமார் (1) சாகித்திய அகாதமி விருது (1) சாக்லேட் (1) சாதீயம் (4) சாரா விஜி (2) சாலிம் அலி (1) சி.பி.எம் (9) சிக்கிம் (1) சிந்தனை (5) சிபி (1) சிராஜுதீன் (1) சில்லரை வர்த்தகம் (4) சிறப்பு பொருளாதார மண்டலங்கள் (1) சிறுகதை (12) சினிமா (52) சினிமா செய்திகள் (4) சினிமாச் செய்திகள் (4) சீத்தாராம் யெச்சூரி (2) சு.பொ.அகத்தியலிங்கம் (2) சு.வெங்கடேசன் (1) சுகாதாரம் (1) சுதிர் ரா (1) சுயமரியாதைத் திருமணம் (1) சுவாரசியம் (1) சுற்றுப்புறச் சூழல் (3) சூர்யா (1) செம்மலர் (4) செம்மலர் அக் 2011 (4) செய்திகள் (112) சென்னை (1) சோவியத் (1) சோஷலிசம் (1) டெல்லி (2) டேம் 999 (1) த.தமிழரசி (1) தகவல் உரிமை (1) தகவல் திருட்டு (2) தண்ணீர் (3) தமிழக மீனவர்கள் (1) தமிழகம் (66) தமிழர் (1) தமிழ்ச் சினிமா (1) தமிழ்நதி (1) தமுஎகச (4) தலித் (21) தற்கொலை (1) தனியார்மயம் (4) தனுஷ் (1) தி.க (2) திமுக (1) திரிணாமுல் (1) திருப்பூர் (2) திருமணம் (2) திரைக்குப் பின்னால் (2) திரைத்துறை (1) திரைப்பட விழா (1) திரைப்படம் (4) தினகரன் (1) தினமணி (3) தீக்கதிர் (9) தீண்டாமை (22) தீண்டாமையின் அடையாளங்கள் (1) தீபாவளி (1) தேசியச் செய்திகள் (4) தேர்தல் (4) தொண்டு நிறுவனங்கள் (1) தொலைக்காட்சி (2) தொழிலாளர் (6) ந.பெரியசாமி (1) நகர்ப்புற விவசாயம் (1) நகைச்சுவை (1) நக்கீரன் (1) நதிம் சயித் (1) நந்தலாலா (1) நந்தன் (1) நரேந்திர மோடி (6) நலத்திட்டங்கள் (2) நவம்பர் புரட்சி (1) நாடகம் (1) நாடாளுமன்றத் தேர்தல் 2014 (2) நாணய மதிப்பு (1) நாறும்பூநாதன் (1) நிகழ்வுகள் (154) நிலப்பிரபுத்துவம் (1) நிலமோசடி (1) நீதித்துறை (2) நீலவேந்தன் (2) நுகர்வுக் கலாச்சாரம் (2) நூல் அறிமுகம் (12) நூல் வெளியீடுகள் (1) நெல்சன் மண்டேலா (1) நேட்டோ (2) நையாண்டி (26) நையாண்டி் (14) ப.சிதம்பரம் (3) பசுபதி (1) படுகொலை (3) படைப்புகள் (2) பட்ஜெட் (1) பணவீக்கம் (2) பதிவர் வட்டம் (3) பதிவர்வட்டம் (1) பதிவுலகம் (1) பரிந்துரைகள் (5) பழங்குடி (1) பள்ளிக்கூடம் (1) பறவைகள் (1) பன்னாட்டுக் கம்பெனிகள் (3) பா.ஜ.க (3) பாகிஸ்தான் (2) பாடல் (5) பாதல் சர்க்கார் (1) பாதுகாப்பு (1) பாரதி (2) பாலபாரதி (1) பாலஸ்தீனம் (1) பாலியல் வன்முறை (6) பாலு மகேந்திரா (1) பால் சமத்துவம் (1) பாஜக (1) பி.சுகந்தி (1) பி.ராமமூர்த்தி (1) பிடல் காஸ்ட்ரோ (3) பிரணாப் முகர்ஜி (1) பிரபாத் பட்நாயக் (3) பிரளயன் (2) பிரிட்டன் (1) பிர்தவ்ஸ் ராஜகுமாரன் (1) பிளின் (1) பு.பெ.நவமபர் 2011 (1) புகைப்படங்கள் (1) புதிய பரிதி (2) புது விசை (12) புதுமை (1) புத்தக அறிமுகம் (2) புத்தகக் கண்காட்சிகள் (2) புத்தகம் (18) புத்தகம் பேசுது (17) புத்தகம் பேசுது நவம்பர் 2011 (8) புத்தகாலயம் (2) புத்தாண்டு (1) புபே (2) புபே டிச11 (8) புரட்சி (2) புவி (1) புவி டிச11 (5) புவி நவ 2011 (7) புனைவு (1) புஷ் (1) பெட்ரோல் (7) பெண் (11) பெண் விடுதலை (1) பெண்குழந்தை (1) பெண்ணியம் (9) பெண்ணெழுத்து (1) பெரியார் (2) பெருமுதலாளிகள் (7) பேட்டி (2) பேரா.சிவசுப்பிரமணியன் (2) பேஸ்புக் (1) பொருளாதார நெருக்கடி (2) பொருளாதாரம் (24) போக்குவரத்து (1) போராட்டம் (15) போலீஸ் தாக்குதல் (3) ப்ரிசம் (4) ப்ரிசம் - தகவல் திருட்டு (7) ப்ரியா தம்பி (1) மக்களுக்கான மருத்துவம் (1) மக்கள் நலப்பணியாளர்கள் (2) மக்கானா (1) மத அடிப்படை வாதம் (1) மதவெறி (3) மதுசூதனன் (1) மம்தா (3) மம்முட்டி (1) மரபணு (1) மலாலாய் சோயா (1) மவோயிஸ்டுகள் (1) மன்மதன் அம்பு (1) மன்மோகன்சிங் (10) மா ற்று (1) மாட்டுக்கறி (1) மாதர் சங்கம் (1) மாதவராஜ் (2) மாவோ (1) மாற்ற (1) மாற்று (223) மின்கட்டணம் (1) மின்சாரம் (1) மீள்பார்வை (2) முதலாளி (1) முதலாளித்துவம் (11) முத்தமாக மாறேன் (1) முத்துக்கண்ணன் (1) முல்லைப் பெரியாறு (7) முறைகேடுகள் (5) மெகாசீரியல் (1) மே.வங்க அரசு (1) மே.வங்கம் (1) மேதினம் (1) மேற்கு வங்கம் (1) மொக்கை (1) மொழி (2) மொழிபெயர்ப்பு (1) மோசடி (1) மோடி (3) மோனிகா (1) யுத்தம் (2) ரத யாத்திரை (1) ரமேஷ் பாபு (2) ராகுல் காந்தி (2) ராடியா (2) ராஜ பக்‌ஷே (1) ரிலையன்ஸ் (1) ருமேனியா (1) லட்சுமணப்பெருமாள் (2) லெனின் (2) லோக்பால் (5) வசந்த பாலன் (1) வண்ணக்கதிர் (1) வரலாறு (19) வலைப்பூக்கள் (1) வழக்கு விசாரணை (1) வாசிப்பு (5) வாச்சாத்தி (1) வால் ஸ்டிரிட் (3) வால்மார்ட் (1) வால்ஸ்டிரிட் போராட்டம் (2) வாழ்க்கை (4) வானியல் (2) விக்கிபீடியா (1) விக்கிலீகஸ் (1) விக்கிலீக்ஸ் (7) விஞ்ஞானம் (2) விமர்சனம் (10) விலையேற்றம் (2) விலைவாசி (11) விலைவாசி உயர்வு (2) விவாதங்கள் (1) விவாதம் (9) விளம்பரம் (1) விளையாட்டு (4) வினவு (1) விஜய் (2) விஜய் மல்லையா (1) வீட்டுவசதி வாரியம் (1) வீரமணி (2) வெண்மணி (2) வெள்ளம் (2) வெனிசுவெல்லா (1) வேலையின்மை (2) வோடாபோன் (1) ஜப்பான் நெருக்கடி (2) ஜாக்கிசான் (1) ஜாதி (1) ஜாபர் பனாகி (1) ஜூலியன் அசாங்க (1) ஜெயலலிதா (9) ஜோதிடம் (1) ஸ்டீவ் ஜாப்ஸ் (1) ஸ்பீல்பர்க் (2) ஸ்பெக்ட்ரம் (6)