லோக்பால் மசோதா பற்றி விவாதிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தை பிரதமர் மன்மோகன் சிங் டெல்லியில் வெள்ளிக்கிழமை கூட்டியுள்ளார். தற்போது நடைபெற்று வரும் பாராளுமன்றக் கூட்டத் தொடர், உகாதி பண்டிகையை முன்னிட்டு ஒரு நாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, டெல்லி ரேஸ் கோர்ஸ் ரோட்டில் உள்ள பிரதமர் இல்லத்தில் ராஜ்யசபா கட்சி தலைவர்கள் பங்கு பெறும் அனைத்துக் கட்சிக்கூட்டம் பிற்பகல் நடைபெறும் எனத் தெரிகிறது.
அன்னா ஹசாரே போராட்டம்: வலுவான லோக்பால் சட்டத்தை நடைபெறும் பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் நிறைவேற்ற வேண்டும் என அன்னா ஹசாரே வலியுறுத்துள்ளார். மசோதா நிறைவேற்றத் தவறினால் வரும் திங்கள்கிழமை முதல் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என ஏற்கனவே அறிவித்துள்ளார்.
அரைக்கிணறு தாண்டிய லோக்பால் மசோதா:
கடந்த மழைக்காலக் கூட்டத்தொடரில் லோக்பால் சட்ட மசோதா லோக்சபாவில் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது. ராஜ்யசபாவில் ஏற்பட்ட கூச்சல் குழப்பத்தால் மசோதா நிறைவேறவில்லை.
எப்படியும் இந்தக் கூட்டத் தொடரில் லோக்பால் மசோதாவை நிறைவேற்றிட
வேண்டும் என்ற முனைப்பில் ஆளும் காங்கிரஸ் அரசு இருப்பதாகவும், அதற்காகவே அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறுகிறது எனவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
VARUN AANA VARATHU
ReplyDelete