சென்னையில் நிலமோசடியை எதிர்த்து போராட்டம் நடத்தியவர் செவ் வாயன்று
பட்டப்பகலில் சமூகவிரோதிகளால் வெட்டிப்படுகொலை செய்யப் பட்டார்.
கொளத்தூர் காமராஜர் சாலை காந்தி தெருவில் வசிப்பவர் சிவா. இவரது மகன்
புவனேஸ்வரன் (37). இவரது மனைவி யோகா. இவர்களது மகள்கள் யாமினி (5), ருத்ரா
(3). ருத்ரா அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வருகிறார்.
ஆவடி அருகேயுள்ள மோரை கிராமத் தில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்
வீட்டுமனை வாங்கியிருந்தனர். இவர்களது நிலத்தை சில சமூகவிரோதிகள் ஆக்கிர
மித்து, இது ஜமீன் சொத்து என்றும், நாங் கள் தான் உரிமையாளர் என்றும் மறு
விற் பனை செய்து வந்தனர். நிலத்தின் உரிமை யாளர்கள் மறு விற்பனை செய்தவர்
களிடம் சென்று கேட்ட போது மீண்டும் எங்களிடம் பணம் செலுத்தி வாங்கிக்
கொள்ளுங்கள் என மிரட்டி அனுப்பி யுள்ளனர். 1948ம் ஆண்டிலேயே ஜமீன் முறை
ஒழிக்கப்பட்டு விட்டது குறிப்பிடத் தக்கது. காவல் நிலையத்திலும், சென்னை
புறநகர் காவல் ஆணையரிடம் புகார் அளித்தும் எந்த நியாயமும் கிடைக்கவில்லை.
இந்நிலையில் நியூ காலனி, நிகேதன்நகர் நில உரிமையாளர்கள் ஒன்றிணைந்து ஒரு
நலச்சங்கத்தை உருவாக்கினார்கள். அச்சங்கத்தின் செயலாளராக புவனேஸ்வரன்
செயல்பட்டு வந்தார்.
ஆவடி அருகே மோரை கிராமத்தில் 167 ஏக்கர் நிலம் நில மோசடியாளர்களால் சுற்றி
வளைக்கப்பட்டுள்ளது. இந்த நிலத்தை சமூக விரோதிகளிடம் இருந்து மீட்டு
கொடுக்க மார்க்சிஸ்ட் கட்சி துணையுடன் புவனேஸ்வரன் தொடர்ந்து போராடி
வந்தார். தகவல் பெறும் உரிமை சட்டத்தின் மூலம், நில மோசடியாளர் களுக்கு
எதிராக ஆதாரங்கள் பலவற்றையும் திரட்டினார். இந்த ஆதாரங்களை கொண்டு
நீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்தார். இந்த வழக்கில் வெற்றியும் பெற்றார்.
இந்த வெற்றியின் மூலம் 30 ஏக்கர் நிலத்தை கையகப் படுத்தி ஏழைமக்களாகிய நில
உரிமை யாளர்களிடம் ஒப்படைத்தார். ஆனால், இந்த கிராமத்தில் அவருக்கு
சொந்தமாக உள்ள 10 ஏக்கர் நிலம் இன்னுமும் அவருக்கு கிடைக்கவில்லை. அந்த
நிலமும் கிடைக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உதவியுடன் வழக்கு
தொடர்ந்து நடந்து வருகிறது.
இதனால் புவனேஷ்வரனுக்கு மிரட்டல் விடுத்ததோடு கொலை செய்யவும் 7 முறை
முயற்சித்துள்ளனர். இதுகுறித்து பலமுறை காவல் நிலையத்தில் புகார்
அளித்தும், காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர்
ஜி.ராமகிருஷ் ணன் தலைமையில் 2011ம் ஆண்டு மார்ச் 1ம் தேதி ஆவடியில்
உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. அன்றைய தினமே சமூக விரோதிகள் அபகரித்த
நிலங்களை திருப்பி ஒப்படைக்க முன் வந்து ஒப்பந்தம் போட்டனர். மார்க்சிஸ்ட்
கம்யூனிஸ்ட் கட்சியின் போராட்டத்தால் நில உரிமையாளர்களுக்கு நிலம்
திருப்பி அளிக்கப் பட்டது.
படுகொலை...
இந்நிலையில் செவ்வாயன்று 12 மணிக்கு தனது மகள் ருத்ராவை பள்ளியில் இருந்து
அழைத்துக் கொண்டு கொளத்தூர் கம்பர் நகர் 5வது தெருவில் புவனேஸ்வரன்
வந்து கொண்டிருக்கும் போது அவரை வழிமறித்து 10க்கும் மேற்பட்ட இடங்களில்
வெட்டி படுகொலை செய்துள்ளனர்.
இதுகுறித்து கொளத்தூர் காவல் நிலை யத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. கொளத்
தூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து கொலை செய்த சமூக விரோதி களை தேடி
வருகிறார்கள். உடலை கைப் பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு கீழ்ப்பாக்கம்
மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
நிலமோசடியைக் கண்டித்து போராடிய புவனேஸ்வரன் தமிழ்நாடு அனைத்து வகை
மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக்கான சங்கத்தின் வடசென்னை
மாவட்ட பொருளாளராகவும் செயல்பட்டு வந்தார்.
in both the dmk and aiadmk govts the cpim cadres are attacked and killed during fight for the people .police spectates.in toothukkudi lawyers federation backs a land grabber who is a lawer and fight against cpim.people should understand.
ReplyDeletei condemn
ReplyDeleteபொதுநல போராளிகளுக்கு ஏற்படும் முடிவு பாருங்கள்?
ReplyDelete