நம் நாடு ஜனநாயகக் குடியரசு ஆனதன் 62வது ஆண்டு விழாவை நாளை (ஜன.26) கொண்டாடப் போகிறோம். ஆனால் இன்றும் தலித்துக்களைப் பார்த்து ரத்தம் சொட்டும் கோரப் பற்களைக் காட்டி சிரித்துக் கொண்டிருக்கிறது உயர்சாதி ஆதிக்கவெறி! தீண்டாமை கொடுமையும், சாதிய ஒடுக்குமுறையும் எந்தெந்த வடிவங்களில் எல்லாம் வெளிப்படும் என்று நினைத்துக்கூடப் பார்க்க முடியாத அளவுக்கு கோரமான முறையில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
இப்போது சாதிவெறி தன் கோர முகத்தை காட்டியிருக்கும் மாநிலம் ஒடிசா. ஆதிக்க சக்திகளின் மனதுக்குள் உறைந்திருக்கும் சாதி வெறி தற்செயலான ஒரு சம்பவத்தை தலித்துகளுக்கு எதிரான திட்டமிட்ட ஒரு பெரும் வன்முறையாக அரங்கேற்றிக் காட்டியிருக்கிறது அங்கே!
போலாங்கிர் மாவட்டத்தைச் சேர்ந்த லாத்தூர் என்ற ஊரில் 22ம் தேதி பகல் 3 மணியளவில் இந்த வன்முறை கோரத் தாண்டவம் அரங்கேற்றப்பட்டிருக்கிறது. 9ம் வகுப்பு படிக்கும் தலித் மாணவன் கணேஷ் சுனா. சம்பவத்தன்று புது சட்டை வாங்குவதற்காக உள்ளூரில் உள்ள ஒரு ஜவுளிக் கடைக்குச் சென்றிருக்கிறார். கடையில் அந்த மாணவர் விசாரித்துக் கொண்டிருந்தபோது அவர் சட்டைக்கு உள்ளே பனியன் அணிந்திருப்பதை உயர்சாதியைச் சேர்ந்த அந்தக் கடைக்காரர் பாரத் மெஹர் கவனித்திருக்கிறார். தலித் மாணவன் பனியன் அணிந்திருப்பதா என்று சாதிவெறுப்பின் உச்சத்துக்கே சென்றிருக்கிறார். அதை நேரடியாகச் சொன்னால் தன் உண்மை முகம் வெளிப்பட்டு விடும் என்பதால், அந்த மாணவர் கடையில் திருட முயன்றார் என்று குற்றஞ்சாட்டியிருக்கிறார். அவரது சகோதரர் தயா மெஹர் என்பவரும் சேர்ந்து கொண்டு கணேஷ் சுனா திருடன்தான் என்று சொல்லி கடுமையாகத் தாக்கியுள்ளனர். கொலை செய்து விடுவோம் என்றும் மிரட்டினர்.
கடுமையான தாக்குதலுக்கு ஆளாகி மனஉளைச்சலுடன் வீட்டுக்குச் சென்ற சுனா, அங்கிருந்த தாத்தா கௌரங்க சுனாவிடம் தனக்கு ஏற்பட்ட கதியைக் கூறி அழுதிருக்கிறார். இதைக் கேட்டுப் பொறுக்க முடியாமல் கௌரங்க சுனா அந்த கடைக்குச் சென்று விசாரித்திருக்கிறார்.அவர் வந்து விசாரித்ததைக் கூட ஏற்க முடியாமல் உச்சக்கட்ட கோபத்துக்குச் சென்ற மெஹர் சகோதரர்கள் அவரையும் சாதியைச் சொல்லி திட்டியதுடன், செருப்பால் அடித்து உதைத்தனர்.
அவமானம் தாங்காத முதியவர் கூனிக்குறுகி வலியும் பொறுக்க முடியாமல் ஒருவாறு வீட்டுக்குப் போய்ச் சேர்ந்திருக்கிறார். சிறுவனுக்கு நேர்ந்த கதியைக் கேட்கப் போய் தனக்கு நேர்ந்த நிலையையும் அவர் விளக்கியவுடன், அங்கிருந்த இளைஞர்கள் 10 பேர் அந்த கடைக்குச் சென்று நியாயம் கேட்டுள்ளனர்.ஆனால் அவர்களிடம் பேசத் தயாராக இல்லாத உயர்சாதி ஆதிக்கவெறியர்கள், சுற்று வட்டாரத்தில் இருந்த உயர்சாதியினரை கூட்டம் சேர்த்துக் கொண்டு அந்த இளைஞர்களைத் தாக்கத் தொடங்கினர். நூறு பேருக்கு மேல் சேர்ந்து கொண்டு கத்தி, கம்பு உள்ளிட்ட கூர்மையான ஆயுதங்களைக் கொண்டு அவர்களைத் தாக்கத் தொடங்கியதும், உயிர் தப்பினால் போதும் என அந்த இளைஞர்கள் தப்பி ஓடினர்.
தலித்துக்கள் நியாயம் கேட்பதா என்று வெறிபிடித்தவர்களாக சாதி ஆதிக்க சக்திகள் பெரும் கூட்டமாகச் சேர்ந்து கொண்டு தலித் மக்கள் குடியிருப்பை நோக்கிச் சென்றனர். எதிர்வரும் விபரீதத்தைப் புரிந்து கொண்ட தலித் மக்கள் தங்கள் வீடுகளில் இருந்து தப்பி ஓடினர். அங்கே வந்த சாதி வெறியர்கள் தலித் மக்கள் யாருமே இல்லாததைப் பார்த்து மிளகாய் தின்ற குரங்காக மாறி அந்த குடியிருப்பில் இருந்த பொருட்களைச் சூறையாடினர். அங்கிருந்தபொருட்களையும், வாகனங்களையும் அடித்து நொறுக்கினர். ஐம்பதுக்கும் மேற்பட்ட வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன.
வன்முறை வெறியாட்டம் ஆடிய குண்டர்கள் கைகளில் ஏற்கனவே தயார்நிலையில் பெட்ரோல் கேன்களையும் கொண்டு சென்றனர்.
இதில் தலித் மக்கள் தங்கள் வாழ்க்கை முழுவதும் சிறுகச் சிறுக சேமித்த பொருட்கள் முழுமையாக நாசமாகின. ஐந்து கோடி ரூபாய் மதிப்புள்ள அனைத்து சொத்துக்களும் தீக்கிரையாக்கப்பட்டு விட்டன. இனி மறுபடியும் புதிதாக வாழ்க்கையைத் தொடங்க வேண்டிய நிலைக்கு அந்த தலித் மக்கள் மாற்றப்பட்டிருக்கின்றனர். தலித் ஆண்கள் எல்லோரும் கண் காணாத இடத்துக்குச் சென்று தலைமறைவாகிவிட்டனர். பெண்களோ தங்கள் உறவினர் வீடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். இவர்களுக்காக அருகாமை பள்ளிக்கூடத்தில் அமைக்கப்பட்ட முகாமில் சிலர் தங்கியுள்ளனர்.
இதற்கிடையே லாத்தூரை நோக்கி வரும் அனைத்துச் சாலைகளையும் முற்றுகையிட்டு உயர்சாதி வெறியர்கள் போக்குவரத்தைத் தடுத்து நிறுத்திவிட்டனர். எந்த வகையிலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எவ்வித நிவாரணமும் கிடைத்துவிடக் கூடாது என்பதற்காகத் தான் இந்த ஏற்பாடும்.ஆனால் இவ்வளவு நடந்தும் ஒடிசா மாநில அரசோ, காவல் துறை நிர்வாகமோ குற்றவாளிகள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய பாதுகாப்பும் கொடுக்கவில்லை. ஆனால் இந்த சம்பவம் ஒடிசா மட்டுமல்லாது பிற பகுதிகளில் இருக்கும் தலித் மக்களிடமும் காட்டுத்தீ போல் வேகமாகப் பரவி வருகிறது. இது போராட்டப் பெரு நெருப்பாக மாறி ஆதிக்க சக்திகளின் சாதி வெறியைப் பொசுக்கிச் சாம்பலாக்கப் போவது நிச்சயம்.
இந்த தாக்குதலில் ஈடுபட்ட குறிப்பிட்ட உயர்சாதியினர் அனைவரும் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர்கள் ஆவர். தாக்குதலுக்கு உள்ளான தலித் மக்கள் பெரும்பாலோர் இந்து மதத்தில் இருந்து அண்மையில் புத்த மதத்துக்கு மதம் மாறியவர்கள் ஆவர். உயர்சாதியினர் மதவெறி பாரதிய ஜனதாவை சேர்ந்தவர்களாகவும், தலித் மக்கள் புத்த மதத்திற்கு மாறியதற்கும், தற்போது அரங்கேற்றப்பட்டிருக்கும் வன்முறை வெறியாட்டத்திற்கும் நிச்சயமாகத் தொடர்பு இருக்கிறது என்று இச்சம்பவத்தைப் பார்த்த பத்திரிகையாளர்கள் கூறுகின்றனர்.
உள்ளூரில் பெட்ரோல் பங்க் வைத்திருப்பவர் உயர்சாதிக்காரர்தான். அவரது பெட்ரோல் பங்க்கில் இந்த குண்டர்களுக்கு வீடுகளை எரிப்பதற்குத் தேவையான பெட்ரோல் இலவசமாக, தாராளமாக வழங்கப்பட்டிருக்கிறது. அதைக் கொண்டு வந்து வீடுகளை எரித்துச் சாம்பலாக்கினர். தீயை அணைக்க வந்த தீயணைப்பு வாகனத்தையும் தீவைத்து எரித்துள்ளனர் வெறியர்கள்.
காட்டுமிராண்டித்தனச் செயல். ஒரு பனியன் அணிந்ததற்கா இவ்வளவு கொலை வெறி? இதெற்கெல்லாம் காரணம் பாழாய்ப்போன இந்து மதம்தான். இந்தியாவிலிருந்து இது அழிந்தொழிந்தால்தான் அனைவருக்கும் விடுதலை. ஆரிய நாய்களை விரட்டுவோம்.
ReplyDeletevengangetta seyal!
ReplyDeletenampunga namma naadu
vallarasaam!
kodumadaa!