ஜேம்ஸ்பாண்டு 007 கதாபாத்திரம் தோன்றும் படம் வெளியாகி 50 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ள நிலையில், அதைக் கொண்டாடும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அந்த நிகழ்ச்சி நடைபெற இன்னும் பத்து மாதங்கள் இருந்தாலும், ஏற்பாடுகள் இப்போதிருந்தே செய்யப்பட்டு வருகின்றன. இந்தக் கற்பனைக் கதாபாத்திரத்தை பிரிட்டனைச் சேர்ந்த பிரபல எழுத்தாளர் இயான் ஃபிளமிங் 1953 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தினார்.
ஜேம்ஸ்பாண்டை நாயகனாக வைத்து எழுதப்பட்ட நாவல்கள் அமோகமாக விற்பனையாகின. இந்த நாவலில் ஒன்றை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட முதல் படம் 1962 ஆம் ஆண்டில் திரைக்கு வந்தது. டாக்டர் நம்பர் ஒன் என்பதுதான் ஜேம்ஸ் பாண்ட் பாத்திரம் தோன்றிய முதல் படமாகும். அதன்பிறகு, 22 படங்கள் எடுக்கப்பட்டுள்ளன.
ஸ்கைபால் என்ற பெயரில் உருவாகி வரும் படம் 23வது படமாக இருக்கப்போகிறது. 50 ஆம் ஆண்டு விழா கொண்டாடவிருக்கும் நேரத்தில்தான் இது வெளியாகும். இப்படத்தில் டேனியல் கிரேக், ஜேம்ஸ்பாண்டாக நடிக்கவிருக்கிறார். முதல் ஜேம்ஸ்பாண்டாக நடித்த சீன் கானரியிலிருந்து, ஜார்ஜ் லாசன்பி, ரோஜர் மூர், டிமோதி டால்டன், பியர்ஸ் பிராஸ்னன் ஆகியோர் இந்தப் பாத்திரத்தில் தோன்றினர்.
இந்த நடிகர்களுக்கு இணையாக நடித்த நாயகிகளான உர்சுலா ஆண்டர்ஸ்(வயது 75), டயானா ரிக்(73), பார்பரா பேக்(64), கேரி லேவல்(50), ஹேல் பெர்ரி(45) மற்றும் தற்போது உருவாகி வரும் ஸ்கைபால் படத்தின் நாயகியான நவேமி ஹாரிஸ்(35) ஆகியோரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்கள்.
இந்த நிகழ்ச்சிக்கு ஜேம்ஸ்பாண்டு படத்தயாரிப்பாளரான எம்.ஜி.எம். நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது. இந்த நிகழ்ச்சி ஹாலிவுட்டில் நடக்கவிருக்கையில், மேலும் பல இடங்களில் கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்துள்ளார்கள். திரைப்படத்துறையில் நவீன தொழில்நுட்பங்கள் வந்து பெரும் மாற்றங்கள் ஏற்பட்டு விட்டன. ஆனால் 50 ஆண்டுகளாக ஒரு கதாபாத்திரம் தொடர்வதே சாதனையான விஷயமாகும். 80 வயதைக் கடந்துவிட்ட சீன்கானரி உள்ளிட்ட பலரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பது பெருமைக்குரியது என்கிறார் தற்போதைய ஜேம்ஸ்பாண்டு நாயகன் டேனியல் கிரேக்.
இதெல்லாம் சரி இந்த ஜேம்ஸ்பாண்டுகள் மூன்றாம் உலக நாடுகளில் நடக்கும் அநியாயங்களை தடுப்பதற்காக பாய்ந்து, பறந்து அடிபதை பார்த்த நமக்கு அமெரிக்காவின் அடாவடிகளை எதிர்த்து அவர் அடித்த மாதிரி தெரியவில்ல அல்லவா? இதற்கு காரணம் இல்லாமல் இல்லை. ஏகாதிபத்திய நாடுகள் தங்களை அவ்வுளவு எளிதாக தாங்களே அம்பலப்படுத்திகொள்மாட்டார்கள். ஜேம்ஸ்பாண்டு அமெரிக்கா போனால் ராக்கி, ராம்போ சில்வர்ஸ்டோல்ன் இங்கிலாந்து போவார் அல்லது டெர்மினேட்டர் அர்னால்டு அங்கு போவார். எனவே இவர்கள் சாகசங்கள் சோசலிச நடுகள் மற்றும் மூன்றாம் உலக நாடுகளில் மட்டும் செல்லுபடியாகும். கிரிமினல்களும், போதை மருந்து கடத்துபவர்களும் ஏதோ இத்தகைய நாடுகளில்தான் இருப்பது போல சித்ததிக்கப்படுவதும், அதை தடுக்க ஜேம்ஸ்பாண்டுகளும், அர்னால்டுகளும் சண்டையிடுவதாக உருவாக்கப்படும் சினிமாக்களுக்கு பின்னால் அரசியல் இல்லாமல் இல்லை.!?
ஜேம்ஸ் போண்ட் படங்களின் பெரிய ரசிகன் நான்,,ஒன்று விடாது முடிந்தவரை எல்லா படங்களையும் பார்த்து வருகிறேன்..ஜேம்ஸ் போண்ட் பற்றி நல்ல பதிவா வழங்கிட்டீங்க,,நன்றி.அருமை...அருமை.
ReplyDeleteதகவலுக்கும் பகிர்வுக்கும் நன்றி
ReplyDeleteசினிமாக்களுக்கு பின்னால் அரசியல் இல்லாமல் இல்லை.!?
ReplyDeleteசரியான விமர்சனம்.
Unmaithan thoar.
ReplyDelete