நேற்றிரவில் லோக்பால் மசோதா நிறைவேறியிருக்கிறது. நாடாளுமன்றத்துக்கு வெளியே வருடக்கணக்கில் பேசி, நாடாளுமன்றத்திற்குள் பல மணிநேரங்கள் பேசி லோக்பால் மசோதாவை ஒருவழி செய்து இருக்கிறார்கள். அந்த மசோதாவின் தேவைக்குரிய வீரியமும், அர்த்தமும், முழுமையும் இல்லாமல் அரைகுறையாக வெளிவந்திருக்கிறது.
ஆரம்பத்திலிருந்தே தவறுகள் செய்ய ஆரம்பித்தது காங்கிரஸ். மசோதாவை தாக்கல் செய்ததிலேயே அதன் சூது இருந்தது. தேர்தல் ஆணையம், மத்திய லஞ்ச ஒழிப்பு ஆணையம், மத்திய தலைமை மற்றும் தணிக்கை ஆணையம் போன்ற அமைப்புகள் உருவாக்கப்பட்டபோது அரசியல் சாசன திருத்த மசோதாதான் முதலில் முன்மொழியப்பட்டுள்ளது. அதனடிப்படையில் இந்த அமைப்புகளுக்கு அரசியல் சாசன அந்தஸ்து உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் லோக்பால் மசோதா தாக்கல் செய்யப்பட்ட போது இதற்கான வழிவகை செய்யப்படவில்லை. நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சி.பி.எம் கட்சித் தலைவர் சீத்தாராம் யெச்சூரி இதனை அம்பலப்படுத்தினார். அரசியல் சாசன அந்தஸ்து லோக்பால் மசோதாவுக்கு உருவாக்கப்படாவிட்டால் நீதிமன்றத்தில் அதை எதிர்த்து வழக்கு போடுவதற்கான வாய்ப்பு உள்ளது. இதை தெரிந்துகொண்டே அரசு, அரசியல் சாசன திருத்த முன்மொழிவை கொண்டுவரவில்லை என்பதை சுட்டிக்காட்டினார். மேலும், அரசியல் சாசன திருத்தத்தை முன்மொழியாமல் இருப்பதன் மூலம் மசோதா நிறைவேறாமல் போனால் எதிர்க்கட்சிகள் மற்றும் பிராந்திய கட்சிகள் மீது பழிபோட அரசு திட்டமிட்டுள்ளது எனக் குற்றம் சாட்டினார்.
குஜராத்தில் லோக் அயுக்தாவையே அமைக்க முன்வராத பி.ஜே.பிக்கு இந்தியாவுக்கு லோக்பால் வேண்டும் எனச் சொல்வதில் இருக்கும் களவாணித்தனம்தான் அதன் அடையாளம். ஒரு தெளிவான இரட்டை நிலையை எடுத்துக்கொண்டு, பாசாங்குகளும், பாவ்லாக்களும் செய்து தன் வரலாற்றுக்கடமையை நிறைவேற்றி இருக்கிறது அந்தக் கட்சி. ஊழலுக்கு எதிராகத் தங்கள் கட்சி சமரசமற்று இருப்பதாகவும் காட்டிக்கொள்ள வேண்டும், ஆனால் லோக்பால் மசோதாவின் உள்ளடக்கம் குலைந்தும் போக வேண்டும் என்பது அதன் தந்திரம். லோக்பாலில் ஏராளமான திருத்தங்களை முன்மொழிந்ததோடு, இந்த மசோதாவை அப்படியே நிறைவேற்றக்கூடாது, மீண்டும் நிலைக்குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்று அதன் தலைவர் சுஷ்மா சுவராஜ் பேசினார். இந்த அமைப்பில் சிறுபான்மையோருக்கு இடஒதுக்கீடு வழங்குவதன் மூலம் நாட்டில் பிளவு ஏற்படும் என்று அவர்களது வழக்கமான பல்லவியையும் பாடினார்.
ஆர்ஜேடி தலைவர் லாலு பிரசாத் யாதவும், முலாயம்சிங் யாதவும், அன்னா ஹசாரேவின் நிர்ப்பந்தம் காரணமாக இம்மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது என்றனர். லோக்பால் ஒரு போலீஸ் போல இருப்பதும், அரசியல் சாசனத்தின் அடிப்படையில் அமைக்கப்பட்ட கூட்டாட்சி தத்துவத்தின் மீது இம்மசோதா தாக்குதல் தொடுக்கிறது என்றும் கருத்துக்களை வெளிப்படுத்தினர்.
விளைவு? லோக்பால் வாம்பிற்குள் பிரதமரைக் கொண்டு வருவதில், சி.பி.ஐ, ஊடகங்களை கொண்டு வருவதில் இருக்கும் நியாயங்கள் தோற்கடிக்கப்பட்டு இருக்கின்றன. சிறுபான்மையினருக்கான ஒதுக்கீடு தோற்கடிக்கப்பட்டு இருக்கிறது. லோக்பாலுக்கு அரசியல் சாசன அந்தஸ்து பெறுவது தோற்கடிக்கப்பட்டு இருக்கிறது. ஆனாலும் லோக்பால் நிறைவேறி இருக்கிறது. ஊழலை ஒழிக்க வேண்டும் என்று வாயளவில் பேசிவிட்டு, அதை நடைமுறைப்படுத்துவதை எதிர்க்கும் யோக்கியகர்களாக இவர்கள் இருக்கிறார்கள். லோக் என்றால் மக்கள். பால் என்றால் நலன். மக்களின் நலனைப் பிரதிபலிப்பது என்று அர்த்தமாகிறது. அந்த அர்த்தைத்தான் மொத்தமாகப் போட்டு மேலேக் குறிப்பிட்டவர்கள் எல்லாம் சேர்ந்து உடைத்திருக்கிறார்கள். இதனை நேற்று நாடாளுமன்ற நடவடிக்கைகளில் நடந்த ஒரு விஷயம் தெளிவாக்குகிறது!
இடதுசாரிக்கட்சிகள் லோக்பால் வரம்பிற்குள் கார்ப்பரேட் முதலாளிகளையும் கொண்டு வர வேண்டும் என ஒரு திருத்தம் கொண்டு வந்தது. ஊழலின் ஊற்றுக்கண்ணே அவர்கள்தாம். அரசியல்வாதிகளையும், உயர்மட்ட அதிகாரிகளையும் பயன்படுத்தி தங்களுக்கான ஆதாயங்களைப் பெறுவதே அவர்கள்தாம். ஆனால் இடதுசாரிகளின் இந்த முன்மொழிவு பெரும் வித்தியாசத்தில் தோற்கடிக்கப்பட்டது. மிக உன்னிப்பாக கவனித்தால் இதனை இடதுசாரிக் கட்சிகளின் எம்பிக்களைத் தவிர வேறு யாரும் ஆதரிக்கவில்லை. அதுமட்டுமல்ல, நாடாளுமன்றத்துக்கு வெளியே எதிர்பார்த்த கூட்டம் சேராமல், சோர்வுற்று காய்ச்சலில் உண்ணாவிரதம் இருக்கும் அன்னா ஹசாரேவும் இதனை ஆதரிக்கவில்லை.
இப்போது நிறைவேற்றப்பட்டு லோக்பாலின் வரைமுறைக்குள் அரசு ஊழியர்கள் மட்டுமே கடுமையாக தண்டனை பெறுவதற்கு சாத்தியங்கள் இருக்கின்றன. பாதசாரிகளுக்கே இந்தச் சட்டம். ஆகாயமார்க்கமாக உயரத்தில் பறப்பவர்களுக்கு அல்ல!
தொடர்புடைய பதிவுகள்
|
//அதுமட்டுமல்ல, நாடாளுமன்றத்துக்கு வெளியே எதிர்பார்த்த கூட்டம் சேராமல், சோர்வுற்று காய்ச்சலில் உண்ணாவிரதம் இருக்கும் அன்னா ஹசாரேவும் இதனை ஆதரிக்கவில்லை.
ReplyDelete// ஹசாரேவோட ஒன்னா மேடையில கல்லாக் கட்டிய பிருந்தா கரத், பரதனையும் சேத்துதானே சொல்றீங்க?
podang_maan //இந்த பிப்பீ ஊதர வேலை எல்லாம் வேனாம் கல்லாகட்றது உங்க பழக்கமாக இருக்கலாம். அங்கபோகல அங்கபோய் அஜரே புரானம் பாட போகல. பிருந்தாகாரத் அங்க பேசின கருத்துகளை கேட்காம இப்படி உளற கூடாது
ReplyDelete//இந்த பிப்பீ ஊதர வேலை எல்லாம் வேனாம் கல்லாகட்றது உங்க பழக்கமாக இருக்கலாம். அங்கபோகல அங்கபோய் அஜரே புரானம் பாட போகல. பிருந்தாகாரத் அங்க பேசின கருத்துகளை கேட்காம இப்படி உளற கூடாது
ReplyDelete// அந்த மேலான கருத்துச் சொற்பொழிவை இங்க கொஞ்சம் போடுங்களேன். அப்படியே பாஜக மாநாட்டுல, ஆர் எஸ் எஸ் மாநாட்டுல போயி பிரகாஷ்கரத், எச்சுஊரி போன்றோர் பேச இருக்கும் கருத்துக்கள்யும் சேத்து இங்க போடுங்களேன். வருங்கால சந்ததி படிச்சி தெளிவாய்க்கிவாங்க. எங்க கூட்டம் கூடினாலும் போயி நின்னு சந்தர்ப்பவாதமா பயன்படுத்த எத்தணிப்பதற்கு வியாக்கியானம் வேறு...