Wednesday, December 28, 2011

ஐய்யய்யோ! லோக் என்றால் மக்களாம், பால் என்றால் நலனாம்!


நேற்றிரவில் லோக்பால் மசோதா நிறைவேறியிருக்கிறது.  நாடாளுமன்றத்துக்கு வெளியே வருடக்கணக்கில் பேசி, நாடாளுமன்றத்திற்குள் பல மணிநேரங்கள் பேசி லோக்பால் மசோதாவை ஒருவழி செய்து இருக்கிறார்கள். அந்த மசோதாவின் தேவைக்குரிய வீரியமும், அர்த்தமும், முழுமையும் இல்லாமல் அரைகுறையாக வெளிவந்திருக்கிறது.

ஆரம்பத்திலிருந்தே தவறுகள் செய்ய ஆரம்பித்தது காங்கிரஸ். மசோதாவை தாக்கல் செய்ததிலேயே அதன் சூது இருந்தது.  தேர்தல் ஆணையம், மத்திய லஞ்ச ஒழிப்பு ஆணையம், மத்திய தலைமை மற்றும் தணிக்கை ஆணையம் போன்ற அமைப்புகள் உருவாக்கப்பட்டபோது அரசியல் சாசன திருத்த மசோதாதான் முதலில் முன்மொழியப்பட்டுள்ளது. அதனடிப்படையில் இந்த அமைப்புகளுக்கு அரசியல் சாசன அந்தஸ்து உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் லோக்பால் மசோதா தாக்கல் செய்யப்பட்ட போது இதற்கான வழிவகை செய்யப்படவில்லை.  நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சி.பி.எம் கட்சித் தலைவர் சீத்தாராம் யெச்சூரி இதனை அம்பலப்படுத்தினார். அரசியல் சாசன அந்தஸ்து லோக்பால் மசோதாவுக்கு உருவாக்கப்படாவிட்டால் நீதிமன்றத்தில் அதை எதிர்த்து வழக்கு போடுவதற்கான வாய்ப்பு உள்ளது. இதை தெரிந்துகொண்டே அரசு, அரசியல் சாசன திருத்த முன்மொழிவை கொண்டுவரவில்லை என்பதை சுட்டிக்காட்டினார். மேலும், அரசியல் சாசன திருத்தத்தை முன்மொழியாமல் இருப்பதன் மூலம் மசோதா நிறைவேறாமல் போனால் எதிர்க்கட்சிகள் மற்றும் பிராந்திய கட்சிகள் மீது பழிபோட அரசு திட்டமிட்டுள்ளது எனக் குற்றம் சாட்டினார்.

குஜராத்தில்  லோக் அயுக்தாவையே அமைக்க முன்வராத பி.ஜே.பிக்கு  இந்தியாவுக்கு லோக்பால் வேண்டும் எனச் சொல்வதில் இருக்கும் களவாணித்தனம்தான் அதன் அடையாளம்.  ஒரு தெளிவான இரட்டை நிலையை எடுத்துக்கொண்டு, பாசாங்குகளும், பாவ்லாக்களும் செய்து தன் வரலாற்றுக்கடமையை நிறைவேற்றி இருக்கிறது அந்தக் கட்சி. ஊழலுக்கு எதிராகத் தங்கள் கட்சி சமரசமற்று இருப்பதாகவும் காட்டிக்கொள்ள வேண்டும், ஆனால் லோக்பால் மசோதாவின் உள்ளடக்கம் குலைந்தும் போக வேண்டும் என்பது அதன் தந்திரம்.  லோக்பாலில் ஏராளமான திருத்தங்களை முன்மொழிந்ததோடு, இந்த மசோதாவை அப்படியே நிறைவேற்றக்கூடாது, மீண்டும் நிலைக்குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்று அதன் தலைவர் சுஷ்மா சுவராஜ் பேசினார். இந்த அமைப்பில் சிறுபான்மையோருக்கு இடஒதுக்கீடு வழங்குவதன் மூலம் நாட்டில் பிளவு ஏற்படும் என்று அவர்களது வழக்கமான பல்லவியையும் பாடினார்.

ஆர்ஜேடி தலைவர் லாலு பிரசாத் யாதவும், முலாயம்சிங் யாதவும், அன்னா ஹசாரேவின் நிர்ப்பந்தம் காரணமாக இம்மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது என்றனர்.  லோக்பால் ஒரு போலீஸ் போல இருப்பதும்,  அரசியல் சாசனத்தின் அடிப்படையில் அமைக்கப்பட்ட கூட்டாட்சி தத்துவத்தின் மீது இம்மசோதா தாக்குதல் தொடுக்கிறது என்றும் கருத்துக்களை வெளிப்படுத்தினர்.

விளைவு? லோக்பால் வாம்பிற்குள் பிரதமரைக் கொண்டு வருவதில், சி.பி.ஐ, ஊடகங்களை கொண்டு வருவதில் இருக்கும் நியாயங்கள் தோற்கடிக்கப்பட்டு இருக்கின்றன.  சிறுபான்மையினருக்கான ஒதுக்கீடு தோற்கடிக்கப்பட்டு இருக்கிறது. லோக்பாலுக்கு அரசியல் சாசன அந்தஸ்து பெறுவது தோற்கடிக்கப்பட்டு இருக்கிறது. ஆனாலும் லோக்பால் நிறைவேறி இருக்கிறது. ஊழலை ஒழிக்க வேண்டும் என்று வாயளவில் பேசிவிட்டு, அதை நடைமுறைப்படுத்துவதை எதிர்க்கும் யோக்கியகர்களாக இவர்கள் இருக்கிறார்கள். லோக் என்றால் மக்கள். பால் என்றால் நலன். மக்களின் நலனைப் பிரதிபலிப்பது என்று அர்த்தமாகிறது. அந்த அர்த்தைத்தான்  மொத்தமாகப் போட்டு மேலேக் குறிப்பிட்டவர்கள் எல்லாம் சேர்ந்து  உடைத்திருக்கிறார்கள். இதனை நேற்று நாடாளுமன்ற நடவடிக்கைகளில் நடந்த ஒரு விஷயம் தெளிவாக்குகிறது!

இடதுசாரிக்கட்சிகள் லோக்பால் வரம்பிற்குள் கார்ப்பரேட் முதலாளிகளையும் கொண்டு வர வேண்டும் என ஒரு திருத்தம் கொண்டு வந்தது. ஊழலின் ஊற்றுக்கண்ணே அவர்கள்தாம். அரசியல்வாதிகளையும்,  உயர்மட்ட அதிகாரிகளையும் பயன்படுத்தி தங்களுக்கான ஆதாயங்களைப் பெறுவதே அவர்கள்தாம். ஆனால் இடதுசாரிகளின் இந்த முன்மொழிவு பெரும் வித்தியாசத்தில் தோற்கடிக்கப்பட்டது. மிக உன்னிப்பாக கவனித்தால் இதனை இடதுசாரிக் கட்சிகளின் எம்பிக்களைத் தவிர வேறு யாரும் ஆதரிக்கவில்லை. அதுமட்டுமல்ல, நாடாளுமன்றத்துக்கு வெளியே எதிர்பார்த்த கூட்டம் சேராமல், சோர்வுற்று காய்ச்சலில் உண்ணாவிரதம் இருக்கும் அன்னா ஹசாரேவும் இதனை ஆதரிக்கவில்லை.

இப்போது நிறைவேற்றப்பட்டு லோக்பாலின் வரைமுறைக்குள் அரசு ஊழியர்கள் மட்டுமே  கடுமையாக தண்டனை பெறுவதற்கு சாத்தியங்கள் இருக்கின்றன. பாதசாரிகளுக்கே இந்தச் சட்டம். ஆகாயமார்க்கமாக உயரத்தில் பறப்பவர்களுக்கு அல்ல!
தொடர்புடைய பதிவுகள்

3 comments:

  1. //அதுமட்டுமல்ல, நாடாளுமன்றத்துக்கு வெளியே எதிர்பார்த்த கூட்டம் சேராமல், சோர்வுற்று காய்ச்சலில் உண்ணாவிரதம் இருக்கும் அன்னா ஹசாரேவும் இதனை ஆதரிக்கவில்லை.

    // ஹசாரேவோட ஒன்னா மேடையில கல்லாக் கட்டிய பிருந்தா கரத், பரதனையும் சேத்துதானே சொல்றீங்க?

    ReplyDelete
  2. podang_maan //இந்த பிப்பீ ஊதர வேலை எல்லாம் வேனாம் கல்லாகட்றது உங்க பழக்கமாக இருக்கலாம். அங்கபோகல அங்கபோய் அஜரே புரானம் பாட போகல. பிருந்தாகாரத் அங்க பேசின கருத்துகளை கேட்காம இப்படி உளற கூடாது

    ReplyDelete
  3. //இந்த பிப்பீ ஊதர வேலை எல்லாம் வேனாம் கல்லாகட்றது உங்க பழக்கமாக இருக்கலாம். அங்கபோகல அங்கபோய் அஜரே புரானம் பாட போகல. பிருந்தாகாரத் அங்க பேசின கருத்துகளை கேட்காம இப்படி உளற கூடாது

    // அந்த மேலான கருத்துச் சொற்பொழிவை இங்க கொஞ்சம் போடுங்களேன். அப்படியே பாஜக மாநாட்டுல, ஆர் எஸ் எஸ் மாநாட்டுல போயி பிரகாஷ்கரத், எச்சுஊரி போன்றோர் பேச இருக்கும் கருத்துக்கள்யும் சேத்து இங்க போடுங்களேன். வருங்கால சந்ததி படிச்சி தெளிவாய்க்கிவாங்க. எங்க கூட்டம் கூடினாலும் போயி நின்னு சந்தர்ப்பவாதமா பயன்படுத்த எத்தணிப்பதற்கு வியாக்கியானம் வேறு...

    ReplyDelete

Labels

Coca Cola (1) Peak Oil (1) Permaculture (1) Power of Community (1) Renewable energy (1) Solar energy (1) SOPA (1) sustainable agriculture (1) அ.குமரேசன் (6) அங்காடிதெரு (1) அணு ஆற்றல் (2) அணுமின் (1) அண்ணா (4) அண்ணா நூலகம் (1) அதிர்ச்சி (1) அத்வானி (2) அந்நிய முதலீடு (2) அபிநயா (1) அப்துல் கலாம் (1) அப்பணசாமி (2) அமெரிக்கா (20) அம்பானி (1) அம்பேத்கர் (9) அரசியல் (177) அரசியல்.நிகழ்வுகள் (6) அரசு (14) அரசு மருத்துவமனை (1) அரசு விடுதி மாணவர்கள் (1) அரவான் (1) அருந்ததியர் (1) அர்ஜெண்டினா (1) அலசல் (1) அவலம் (19) அழகு (1) அறிமுகம் (1) அனுபவம் (28) அன்னா ஹசாரே (1) அஜயன் பாலா (1) ஆ.ராசா (1) ஆணையம் (2) ஆதவன் தீட்சண்யா (3) ஆப்கானிஸ்தான் (1) ஆப்பிரிக்கா (2) ஆர்.மீனா (1) ஆர்எஸ்எஸ் (2) ஆவணப்படம் (3) ஆனந்தன் (2) இ.எம்.ஜோசப் (1) இ.பா.சிந்தன் (22) இட ஓதுக்கீடு (3) இடஒதுக்கீடு (1) இடதுசாரிகள் (4) இணையம் (2) இதழ்கள் (6) இந்தியா (69) இந்துத்துவா (8) இந்துஜா (1) இமு (2) இமு டிச11 (5) இமு நவமபர் 2011 (6) இயக்கம் (7) இயக்குனர் ஷங்கர் (1) இரா.சிந்தன் (5) இரா.செழியன் (2) இரா.நடராஜன் (3) இராம.கோபாலன் (1) இல.சண்முகசுந்தரம் (2) இலக்கியம் (38) இலங்கை (6) இலங்கைத் தமிழர் (4) இலவசக் கல்வி (1) இலவசங்கள் (1) இளவரசன் கொலை (1) இளைஞர் முழக்கம் (11) இஷ்ரத் (2) இஸ்ரேல் ஆக்கிரமிப்பு (1) இஸ்லாம் (3) ஈராக் (1) ஈரான் (2) உ.வாசுகி (1) உச்ச நீதிமன்றம் (1) உணவு நெருக்கடி (2) உதயசங்கர் (1) உத்தப்புரம் (1) உயர்கல்வி (2) உரையாடல்கள் (2) உலக சினிமா (4) உலகமயம் (5) உலகம் (46) உளவியல் (1) உள்ளாட்சி (1) உள்ளாட்சித் தேர்தல் (1) ஊடகங்கள் (14) ஊடகம் (8) ஊழல் (30) எடியூரப்பா (1) எம்.எப்.ஹூசேன் (1) எம்.சிவக்குமார் (2) எரிசக்தி (1) எல்.கே.ஜி (1) என்.ஜி.ஓ (1) என்கவுண்டர் (1) எஸ். பாலா (1) எஸ்.கண்ணன் (1) எஸ்.கருணா (3) எஸ்.பி.ராஜேந்திரன் (3) எஸ்.வி.வேணுகோபாலன் (2) ஏகாதிபத்தியம் (13) ஏமன் (1) ஒபாமா (4) ஓம்பிரகாஷ் வால்மீகி (1) ஓளிப்பதிவு (1) ஃபாக்ஸ்கான் (1) கச்சத் தீவு (1) கட்டுரை (51) கட்டுரைகள் (2) கணிணி (2) கணினி தொழில் நுட்பம் (1) கமல்ஹாசன் (1) கம்யூனிசம் (12) கருணாநிதி (11) கருத்து சுதந்திரம் (1) கருத்துரிமை (3) கலைஞர் (6) கல்வி (14) கவிதை (21) கவிதைகள் (1) கறுப்புப்பணம் (3) கனிமொழி (2) காங்கிரஸ் (10) காதல் (2) கால்பந்து (1) காவல்துறை (4) காஷ்மீர் (1) கி.பார்த்திபராஜா (1) கிங்பிஷர் (1) கியூபா (4) கிரீஸ் (1) குடும்பம் (1) குட்டி ரேவதி (1) குப்பன் சுப்பன் (1) குலாத்தி (1) குழந்தைகள் (9) குழந்தைகள் கடத்தல் (1) குஜராத் கலவரம் (1) குஜராத் படுகொலைகள் (1) கூகிள் அந்தரங்கம் (1) கூடங்குளம் (2) கே.சாமுவேல்ராஜ் (1) கே.பாலமுருகன் (1) கேள்விகள் (1) கைப்பற்றுவோம் போராட்டம் (1) கோவில் (1) ச.தமிழ்ச்செல்வன் (1) ச.மாடசாமி (1) சக்திஜோதி (1) சங்கமம் (1) சசிகலா (1) சச்சின் (1) சட்டசபை (2) சட்டம் (4) சத்யஜித் ரே (1) சந்திரகாந்தன் (1) சமச்சீர் கல்வி (4) சமவூதியம் (1) சமூக நீதி (2) சமூக வலைத்தளம் (1) சமூகப் பாதுகாப்பு (2) சமூகம் (177) சம்பு (1) சரத் பவார் (1) சர்வதேச பெண்கள் தினம் (1) சல்மான் ருஷ்டி (1) சா.கந்தசாமி (2) சா.செயக்குமார் (1) சாகித்திய அகாதமி விருது (1) சாக்லேட் (1) சாதீயம் (4) சாரா விஜி (2) சாலிம் அலி (1) சி.பி.எம் (9) சிக்கிம் (1) சிந்தனை (5) சிபி (1) சிராஜுதீன் (1) சில்லரை வர்த்தகம் (4) சிறப்பு பொருளாதார மண்டலங்கள் (1) சிறுகதை (12) சினிமா (52) சினிமா செய்திகள் (4) சினிமாச் செய்திகள் (4) சீத்தாராம் யெச்சூரி (2) சு.பொ.அகத்தியலிங்கம் (2) சு.வெங்கடேசன் (1) சுகாதாரம் (1) சுதிர் ரா (1) சுயமரியாதைத் திருமணம் (1) சுவாரசியம் (1) சுற்றுப்புறச் சூழல் (3) சூர்யா (1) செம்மலர் (4) செம்மலர் அக் 2011 (4) செய்திகள் (112) சென்னை (1) சோவியத் (1) சோஷலிசம் (1) டெல்லி (2) டேம் 999 (1) த.தமிழரசி (1) தகவல் உரிமை (1) தகவல் திருட்டு (2) தண்ணீர் (3) தமிழக மீனவர்கள் (1) தமிழகம் (66) தமிழர் (1) தமிழ்ச் சினிமா (1) தமிழ்நதி (1) தமுஎகச (4) தலித் (21) தற்கொலை (1) தனியார்மயம் (4) தனுஷ் (1) தி.க (2) திமுக (1) திரிணாமுல் (1) திருப்பூர் (2) திருமணம் (2) திரைக்குப் பின்னால் (2) திரைத்துறை (1) திரைப்பட விழா (1) திரைப்படம் (4) தினகரன் (1) தினமணி (3) தீக்கதிர் (9) தீண்டாமை (22) தீண்டாமையின் அடையாளங்கள் (1) தீபாவளி (1) தேசியச் செய்திகள் (4) தேர்தல் (4) தொண்டு நிறுவனங்கள் (1) தொலைக்காட்சி (2) தொழிலாளர் (6) ந.பெரியசாமி (1) நகர்ப்புற விவசாயம் (1) நகைச்சுவை (1) நக்கீரன் (1) நதிம் சயித் (1) நந்தலாலா (1) நந்தன் (1) நரேந்திர மோடி (6) நலத்திட்டங்கள் (2) நவம்பர் புரட்சி (1) நாடகம் (1) நாடாளுமன்றத் தேர்தல் 2014 (2) நாணய மதிப்பு (1) நாறும்பூநாதன் (1) நிகழ்வுகள் (154) நிலப்பிரபுத்துவம் (1) நிலமோசடி (1) நீதித்துறை (2) நீலவேந்தன் (2) நுகர்வுக் கலாச்சாரம் (2) நூல் அறிமுகம் (12) நூல் வெளியீடுகள் (1) நெல்சன் மண்டேலா (1) நேட்டோ (2) நையாண்டி (26) நையாண்டி் (14) ப.சிதம்பரம் (3) பசுபதி (1) படுகொலை (3) படைப்புகள் (2) பட்ஜெட் (1) பணவீக்கம் (2) பதிவர் வட்டம் (3) பதிவர்வட்டம் (1) பதிவுலகம் (1) பரிந்துரைகள் (5) பழங்குடி (1) பள்ளிக்கூடம் (1) பறவைகள் (1) பன்னாட்டுக் கம்பெனிகள் (3) பா.ஜ.க (3) பாகிஸ்தான் (2) பாடல் (5) பாதல் சர்க்கார் (1) பாதுகாப்பு (1) பாரதி (2) பாலபாரதி (1) பாலஸ்தீனம் (1) பாலியல் வன்முறை (6) பாலு மகேந்திரா (1) பால் சமத்துவம் (1) பாஜக (1) பி.சுகந்தி (1) பி.ராமமூர்த்தி (1) பிடல் காஸ்ட்ரோ (3) பிரணாப் முகர்ஜி (1) பிரபாத் பட்நாயக் (3) பிரளயன் (2) பிரிட்டன் (1) பிர்தவ்ஸ் ராஜகுமாரன் (1) பிளின் (1) பு.பெ.நவமபர் 2011 (1) புகைப்படங்கள் (1) புதிய பரிதி (2) புது விசை (12) புதுமை (1) புத்தக அறிமுகம் (2) புத்தகக் கண்காட்சிகள் (2) புத்தகம் (18) புத்தகம் பேசுது (17) புத்தகம் பேசுது நவம்பர் 2011 (8) புத்தகாலயம் (2) புத்தாண்டு (1) புபே (2) புபே டிச11 (8) புரட்சி (2) புவி (1) புவி டிச11 (5) புவி நவ 2011 (7) புனைவு (1) புஷ் (1) பெட்ரோல் (7) பெண் (11) பெண் விடுதலை (1) பெண்குழந்தை (1) பெண்ணியம் (9) பெண்ணெழுத்து (1) பெரியார் (2) பெருமுதலாளிகள் (7) பேட்டி (2) பேரா.சிவசுப்பிரமணியன் (2) பேஸ்புக் (1) பொருளாதார நெருக்கடி (2) பொருளாதாரம் (24) போக்குவரத்து (1) போராட்டம் (15) போலீஸ் தாக்குதல் (3) ப்ரிசம் (4) ப்ரிசம் - தகவல் திருட்டு (7) ப்ரியா தம்பி (1) மக்களுக்கான மருத்துவம் (1) மக்கள் நலப்பணியாளர்கள் (2) மக்கானா (1) மத அடிப்படை வாதம் (1) மதவெறி (3) மதுசூதனன் (1) மம்தா (3) மம்முட்டி (1) மரபணு (1) மலாலாய் சோயா (1) மவோயிஸ்டுகள் (1) மன்மதன் அம்பு (1) மன்மோகன்சிங் (10) மா ற்று (1) மாட்டுக்கறி (1) மாதர் சங்கம் (1) மாதவராஜ் (2) மாவோ (1) மாற்ற (1) மாற்று (223) மின்கட்டணம் (1) மின்சாரம் (1) மீள்பார்வை (2) முதலாளி (1) முதலாளித்துவம் (11) முத்தமாக மாறேன் (1) முத்துக்கண்ணன் (1) முல்லைப் பெரியாறு (7) முறைகேடுகள் (5) மெகாசீரியல் (1) மே.வங்க அரசு (1) மே.வங்கம் (1) மேதினம் (1) மேற்கு வங்கம் (1) மொக்கை (1) மொழி (2) மொழிபெயர்ப்பு (1) மோசடி (1) மோடி (3) மோனிகா (1) யுத்தம் (2) ரத யாத்திரை (1) ரமேஷ் பாபு (2) ராகுல் காந்தி (2) ராடியா (2) ராஜ பக்‌ஷே (1) ரிலையன்ஸ் (1) ருமேனியா (1) லட்சுமணப்பெருமாள் (2) லெனின் (2) லோக்பால் (5) வசந்த பாலன் (1) வண்ணக்கதிர் (1) வரலாறு (19) வலைப்பூக்கள் (1) வழக்கு விசாரணை (1) வாசிப்பு (5) வாச்சாத்தி (1) வால் ஸ்டிரிட் (3) வால்மார்ட் (1) வால்ஸ்டிரிட் போராட்டம் (2) வாழ்க்கை (4) வானியல் (2) விக்கிபீடியா (1) விக்கிலீகஸ் (1) விக்கிலீக்ஸ் (7) விஞ்ஞானம் (2) விமர்சனம் (10) விலையேற்றம் (2) விலைவாசி (11) விலைவாசி உயர்வு (2) விவாதங்கள் (1) விவாதம் (9) விளம்பரம் (1) விளையாட்டு (4) வினவு (1) விஜய் (2) விஜய் மல்லையா (1) வீட்டுவசதி வாரியம் (1) வீரமணி (2) வெண்மணி (2) வெள்ளம் (2) வெனிசுவெல்லா (1) வேலையின்மை (2) வோடாபோன் (1) ஜப்பான் நெருக்கடி (2) ஜாக்கிசான் (1) ஜாதி (1) ஜாபர் பனாகி (1) ஜூலியன் அசாங்க (1) ஜெயலலிதா (9) ஜோதிடம் (1) ஸ்டீவ் ஜாப்ஸ் (1) ஸ்பீல்பர்க் (2) ஸ்பெக்ட்ரம் (6)