இந்திய வரலாற்றில் முதன்முறையாக அனைத்து மத்திய தொழிற்சங்கங்களும் கூட்டாக போராட்டம் நடத்துகின்றன.
தமிழகத்தில் நவம்பர் 8 அன்று நடைபெறுகின்ற சிறை நிரப்பும் போராட் டம் 160 மையங்களில் நடை பெறும் என்றும், இப்போராட்டத்தில் 3லட்சம் தொழிலாளர்கள் பங்கேற்பார்கள் என்றும் தொழிற் சங்கத் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
புதிய பொருளாதாரக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டு 20ஆண்டுகளுக்கு பிறகும் மக்களின் வறுமை யும், துன்பமும் அதிகரித் துள்ளது. வெகு சிலர் மட் டுமே வளமை அடைந்துள் ளனர். புதிய பொருளாதாரக் கொள்கையை எதிர்த்து தொழிற்சங்கங்கள் தொடர்ந்து போராடி வருகின்றன. கடந்த சில வருடங்களாக அனைத்து தொழிற்சங்கங்களும் ஒன்றுபட்டு போராடி வருகின்றன.
2010 மார்ச் 5ல் சிறை நிரப்பும் போராட்டம், செப்டம்பர் 7ல் பொது வேலை நிறுத்தம், 2011 பிப்ரவரி 23ல் நாடாளுமன்றம் நோக்கி பேரணி என தொழி லாளர் வர்க்கம் ஒன்றுபட்டு போராடுகிறது. உழைக்கும் மக்களின் அதிருப்தியையும், கோபத்தையும் மத்திய அரசு அலட்சியப்படுத்துகிறது. பொருளாதாரக் கொள்கையை மாற்றாமல் உள்ளது.
விலைவாசி செங்குத் தாக உயர்கிறது, மாதந்தோறும் பெட்ரோல் விலை உயர்த்தப்படுகிறது, சாதா ரண மக்கள் வாழ முடியாத அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ள நிலையில் 2011 செப்டம்பர் 7 அன்று தில்லி யில் நடைபெற்ற அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள், தொழில்வாரி சம்மேளனங்கள் மாநாடு நவம்பர் 8 அன்று சிறை நிரப்பும் போராட்டத்திற்கு அறை கூவல் விடுத்தது.
அதன்படி, சிஐடியு, ஏஐ டியுசி, ஐஎன்டியுசி, பிஎம் எஸ், எச்எம்எஸ், எல்பிஎப், ஏஐசிசிடியு, ஏஐயுடியுசி, யுடியுசி, டியுசிசி ஆகிய மத் திய அரசு அங்கீகரித்துள்ள தேசிய தொழிற்சங்கங்கள் ஒருங்கிணைந்து நவம்பர் 8 அன்று சிறை நிரப்பும் போராட் டத்தை நடத்துகின்றன.
இந்திய வரலாற்றில் முதன்முறையாக ஒரு மத்திய சங்கம் கூட விலகி நிற்காமல், அனைத்து மத்திய தொழிற்சங்கங்களும் ஒன் றாக திரண்டு இந்த சிறை நிரப்பும் போராட்டத்தை நடத்துகின்றன. அனைவருக்கும் உணவு, வேலை, உறைவிடம் வாழ்க்கை கோரும் போராட்டத்தை தொழிலாளி வர்க்கம் ஒன்று பட்டு தொடங்கியுள்ளது.
மக்களுக்கு சார்பாக அரசின் கொள்கைகள் மாற்றப்பட வேண்டும். பட்டினி, வறுமை, ஊழல்களில் இருந்து நாட்டை விடுவிக்கும் போராட்டத்தை; நாட்டின் சகல செல்வங்களையும் உற்பத்தி செய்த தொழிலாளர்களே தொடங்கியுள்ளனர்.
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், வேலைக்கு உத்தரவாதம் வழங்க வேண்டும், தொழிலாளர் நலச்சட்டங்களை கறாராக அமலாக்க வேண் டும், அமைப்புசாரா, விவசாயத் தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்புச் சட்டத்தை உரிய திருத்தங்களுடன் நிறைவேற்ற வேண்டும், மத்திய-மாநில பொதுத் துறை நிறுவனங்களின் பங்குகளை விற்கக்கூடாது, நிரந்தரம் மற்றும் தொடர்ச் சியான தன்மையுடைய வேலையை காண்ட்ராக்ட் விடக்கூடாது; தற்போதுள்ள காண்ட்ராக்ட் தொழிலாளர்களுக்கு நிரந்தர தொழிலாளர்களுக்கு உரிய விகிதத்தில் ஊதியம் வழங்க வேண்டும்.
குறைந்தபட்ச ஊதியச் சட்டத்தை திருத்தி அனைத்து தொழிலாளர்களுக்கும் விலைவாசிப் புள்ளி உயர்வோடு கூடிய குறைந்தபட்ச ஊதிய மாக மாதம் 10ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும், போனஸ், வருங்கால வைப்பு நிதிக்கான தகுதி ஊதிய வரம்புகள் அனைத்தையும் ரத்து செய்ய வேண்டும்; பணிக்கொடை அளவை அதிகப்படுத்த வேண்டும், அனைத்து தரப்பினருக்கும் உறுதி செய்யப் பட்ட ஓய் வூதியம் வழங்க வேண்டும், தொழிற்சங்கங்கள் விண் ணப்பித்த 45 நாட்களுக்குள் கட்டாயமாக பதிவு செய்யவேண்டும் ஆகிய 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த சிறை நிரப்பும் போராட்டம் நடைபெறுகிறது.
நவம்பர் 8 அன்று தமிழகத்தில் 160 மையங்களில் நடைபெறும் இப்போராட்டத்தில் 3 லட்சம் தொழி லாளர்கள் பங்கேற்கிறார்கள். வடசென்னை மாவட்டத்தில் மெமோரியல் ஹால் அருகிலும், தென்சென்னை யில் சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகிலும் மறியல் நடைபெறுகிறது.
இந்த மத்திய தொழிற்சங்கங்களோடு இணைந்துள்ள தொழில்வாரி சம்மேளனங்கள், விவசாய சங்கங்கள், நெசவாளர்களும் சிறை நிரப்பும் போராட்டத்தில் பங்கேற்கின்றனர்.
இப்போராட்டத்தை ஆதரித்து மத்திய, மாநில அரசு ஊழியர்கள், வங்கி, காப்பீடு, தொலைபேசி ஊழியர்கள் ஆர்ப்பாட்டங் கள் நடத்துகிறார்கள். போக் குவரத்து, மின்சாரம், ஆட்டோ தொழிலாளர்களும் போராட்டத்தில் கலந்து கொள்கின்றனர்.
உழைக்கும் மக்கள் அனைவரும் அரசியல் கட்சி, தொழிற்சங்க வேறுபாடின்றி இந்த சிறை நிரப்பும் போராட்டத்தில் பங்கேற்பது அவசியம்.
தமிழகத்தில் நவம்பர் 8 அன்று நடைபெறுகின்ற சிறை நிரப்பும் போராட் டம் 160 மையங்களில் நடை பெறும் என்றும், இப்போராட்டத்தில் 3லட்சம் தொழிலாளர்கள் பங்கேற்பார்கள் என்றும் தொழிற் சங்கத் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
புதிய பொருளாதாரக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டு 20ஆண்டுகளுக்கு பிறகும் மக்களின் வறுமை யும், துன்பமும் அதிகரித் துள்ளது. வெகு சிலர் மட் டுமே வளமை அடைந்துள் ளனர். புதிய பொருளாதாரக் கொள்கையை எதிர்த்து தொழிற்சங்கங்கள் தொடர்ந்து போராடி வருகின்றன. கடந்த சில வருடங்களாக அனைத்து தொழிற்சங்கங்களும் ஒன்றுபட்டு போராடி வருகின்றன.
2010 மார்ச் 5ல் சிறை நிரப்பும் போராட்டம், செப்டம்பர் 7ல் பொது வேலை நிறுத்தம், 2011 பிப்ரவரி 23ல் நாடாளுமன்றம் நோக்கி பேரணி என தொழி லாளர் வர்க்கம் ஒன்றுபட்டு போராடுகிறது. உழைக்கும் மக்களின் அதிருப்தியையும், கோபத்தையும் மத்திய அரசு அலட்சியப்படுத்துகிறது. பொருளாதாரக் கொள்கையை மாற்றாமல் உள்ளது.
விலைவாசி செங்குத் தாக உயர்கிறது, மாதந்தோறும் பெட்ரோல் விலை உயர்த்தப்படுகிறது, சாதா ரண மக்கள் வாழ முடியாத அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ள நிலையில் 2011 செப்டம்பர் 7 அன்று தில்லி யில் நடைபெற்ற அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள், தொழில்வாரி சம்மேளனங்கள் மாநாடு நவம்பர் 8 அன்று சிறை நிரப்பும் போராட்டத்திற்கு அறை கூவல் விடுத்தது.
அதன்படி, சிஐடியு, ஏஐ டியுசி, ஐஎன்டியுசி, பிஎம் எஸ், எச்எம்எஸ், எல்பிஎப், ஏஐசிசிடியு, ஏஐயுடியுசி, யுடியுசி, டியுசிசி ஆகிய மத் திய அரசு அங்கீகரித்துள்ள தேசிய தொழிற்சங்கங்கள் ஒருங்கிணைந்து நவம்பர் 8 அன்று சிறை நிரப்பும் போராட் டத்தை நடத்துகின்றன.
இந்திய வரலாற்றில் முதன்முறையாக ஒரு மத்திய சங்கம் கூட விலகி நிற்காமல், அனைத்து மத்திய தொழிற்சங்கங்களும் ஒன் றாக திரண்டு இந்த சிறை நிரப்பும் போராட்டத்தை நடத்துகின்றன. அனைவருக்கும் உணவு, வேலை, உறைவிடம் வாழ்க்கை கோரும் போராட்டத்தை தொழிலாளி வர்க்கம் ஒன்று பட்டு தொடங்கியுள்ளது.
மக்களுக்கு சார்பாக அரசின் கொள்கைகள் மாற்றப்பட வேண்டும். பட்டினி, வறுமை, ஊழல்களில் இருந்து நாட்டை விடுவிக்கும் போராட்டத்தை; நாட்டின் சகல செல்வங்களையும் உற்பத்தி செய்த தொழிலாளர்களே தொடங்கியுள்ளனர்.
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், வேலைக்கு உத்தரவாதம் வழங்க வேண்டும், தொழிலாளர் நலச்சட்டங்களை கறாராக அமலாக்க வேண் டும், அமைப்புசாரா, விவசாயத் தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்புச் சட்டத்தை உரிய திருத்தங்களுடன் நிறைவேற்ற வேண்டும், மத்திய-மாநில பொதுத் துறை நிறுவனங்களின் பங்குகளை விற்கக்கூடாது, நிரந்தரம் மற்றும் தொடர்ச் சியான தன்மையுடைய வேலையை காண்ட்ராக்ட் விடக்கூடாது; தற்போதுள்ள காண்ட்ராக்ட் தொழிலாளர்களுக்கு நிரந்தர தொழிலாளர்களுக்கு உரிய விகிதத்தில் ஊதியம் வழங்க வேண்டும்.
குறைந்தபட்ச ஊதியச் சட்டத்தை திருத்தி அனைத்து தொழிலாளர்களுக்கும் விலைவாசிப் புள்ளி உயர்வோடு கூடிய குறைந்தபட்ச ஊதிய மாக மாதம் 10ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும், போனஸ், வருங்கால வைப்பு நிதிக்கான தகுதி ஊதிய வரம்புகள் அனைத்தையும் ரத்து செய்ய வேண்டும்; பணிக்கொடை அளவை அதிகப்படுத்த வேண்டும், அனைத்து தரப்பினருக்கும் உறுதி செய்யப் பட்ட ஓய் வூதியம் வழங்க வேண்டும், தொழிற்சங்கங்கள் விண் ணப்பித்த 45 நாட்களுக்குள் கட்டாயமாக பதிவு செய்யவேண்டும் ஆகிய 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த சிறை நிரப்பும் போராட்டம் நடைபெறுகிறது.
நவம்பர் 8 அன்று தமிழகத்தில் 160 மையங்களில் நடைபெறும் இப்போராட்டத்தில் 3 லட்சம் தொழி லாளர்கள் பங்கேற்கிறார்கள். வடசென்னை மாவட்டத்தில் மெமோரியல் ஹால் அருகிலும், தென்சென்னை யில் சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகிலும் மறியல் நடைபெறுகிறது.
இந்த மத்திய தொழிற்சங்கங்களோடு இணைந்துள்ள தொழில்வாரி சம்மேளனங்கள், விவசாய சங்கங்கள், நெசவாளர்களும் சிறை நிரப்பும் போராட்டத்தில் பங்கேற்கின்றனர்.
இப்போராட்டத்தை ஆதரித்து மத்திய, மாநில அரசு ஊழியர்கள், வங்கி, காப்பீடு, தொலைபேசி ஊழியர்கள் ஆர்ப்பாட்டங் கள் நடத்துகிறார்கள். போக் குவரத்து, மின்சாரம், ஆட்டோ தொழிலாளர்களும் போராட்டத்தில் கலந்து கொள்கின்றனர்.
உழைக்கும் மக்கள் அனைவரும் அரசியல் கட்சி, தொழிற்சங்க வேறுபாடின்றி இந்த சிறை நிரப்பும் போராட்டத்தில் பங்கேற்பது அவசியம்.
ஒன்றுபட்ட தொழிலாளர் வர்க்க போராட்டங்கள் தோற்றதாக சரித்திரம் இல்லை.செங்கொடியின் தலைமையிலே இந்திய தேசத்தின் தொழிலாளர்கள் அணி திரளட்டும்.மாமேதை காரல்மார்க்சின் ”அளவு மாற்றமும் குணமாற்றமும்” என்கிற கூற்றுக்கிணங்க தொழிலாளர்கள் வர்க்கமாக போராட இன்குலாப் முழக்கமிடுகிறேன். உதயா dyfi s.chennai
ReplyDelete