மங்கையராய் பிறப்பதோ பாவம் என்று நினைக்கும் அளவிற்கு பெண்கள் மீதான வன்முறைகள் நாளுக்குநாள் அதிகரித்த வண்ணமே உள்ளது. இந்த ஆணாதிக்க சமுதாயத்தில் முன்பெல்லாம் குழந்தை திருமணம், பெண்கல்வி மறுப்பு, தேவதாசி முறை, சதி, விதவை மணம் மறுப்பு, இப்படி இருந்த நிலை மாறி இன்று உள்ள நுகர்வுக் கலாச்சாரத்தில் வன்முறை வடிவங்கள் மாறிக்கொண்டே வருகிறது. மாற்றம் என்பதே விதியானதால் வன்முறையின் வடிவங்களும் மாறிவருகின்றன. காதலிக்க மறுக்கும் பெண்ணின் முகஅழகை சிதைக்க முகத்தில் அமிலம் வீசுவது, சாதி-மதம் மாறி காதலித்தால் குடும்ப கவுரவமே போய்விட்டதாக செய்யும் கவுரவக் கொலைகள், பள்ளிகளில் ஆசிரியர்களால் பாலியல் சீண்டலுக்கு உள்ளாகும் குழந்தைகள், குழந்தைகளை கடத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்துதல், இப்படி வன்முறையின் வடிவங்கள் நீண்டு கொண்டே செல்கின்றன. தமிழகத்திலுள்ள 40சதவீத பெண்கள் ஏதாவது ஒரு வகையில் தினம் தினம் வன்முறைக்கு உள்ளாகிறார்கள்.
பெண்கள் பள்ளிக்கு சென்று கல்வி கற்க வாய்ப்பே இல்லாத நிலைமாறி அனைத்துறைகளிலும் தடம் பதித்து வருகின்றனர். பெண்கள் படிக்க வறுமை தவிர வேறு தடை இல்லை. நம் வீட்டு குழந்தைகள் பள்ளிக்கு செல்லும்போதே டாக்டராக, என்ஜீனியராக, ஐ.ஏ.எஸ் அதி காரியாக வரவேண்டும் என்ற ஆயிரம் கனவுகளோடு பள்ளிக்கு அனுப்புகின்றோம். சில பள்ளிகளில் பள்ளி ஆசிரியர்கள், வாகன ஓட்டுநர்கள், பள்ளி காவலர்கள், டியூசன் ஆசிரியர்கள், இப்படி பலரது வக்கிரபுத்திகளுக்கு ஆளாகும் குழந்தைகளின் நிலைமைகள் பல வெளிவந்து கொண்டுள்ளன. மாதா, பிதாவுக்கு அடுத்து குருவை மரியாதைக்குரிய இடத்தில் நாம் வைத்துள்ளோம். ஆனால் குழந்தைகளை கொண்டாட வேண்டிய குருவே இப்படி செய்தால்?
கடந்த ஆகஸ்டு 15ல் பள்ளியில் தேசியக் கொடியை ஏற்றி விட்டு இனிப்பு வழங்கிக்கொண்டிருந்த பள்ளி தலைமைஆசிரியரை ஊர் மக்கள் முற்றுகையிட்டனர். இது விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் ஊராட்சி ஓன் றிய நடுநிலைப் பள்ளியில் நடந்த சம்பவம். 12,13 வயது சிறுமிகளை வார்த்தைகள் கூட எழுத கூசும் அளவிற்கு அந்த தலைமைஆசிரியரின் நடவடிக்கைகள் அமைந்தன. குழந்தைகளின் பெற்றோர் புகார் கொடுக்க காவல் நிலையம் சென்ற போது “வழக்கு நடந்து தீர்ப்பு வர 10 ஆண்டுகள் ஆகும். அப்போது உன் குழந்தைக்கு திருமண வயது வந்து விடும். எனவே கொடுப்பதை வாங்கிக் கொண்டு வழக்கை வாபஸ் வாங்கு” என்று காவல் துறையால் அந்த பெற்றோர்கள் மிரட்டப்பட்டனர். பாதிக்கப்பட்ட குழந்தைகள் அனைவரும் தலித் குழந்தைகள். ஒரு குழந்தையின் பெற்றோர்க்கு ரூ.15 ஆயிரம் வாங்கிக் கொடுத்து வழக்கு வாபஸ் பெறப்பட்டது. காவல்துறையின் இச்செயல் குற்றம் செய்த ஆசிரியர் செய்த செயலைவிட இழிவான செயல் அல்லவா. மாதர் சங்க போராட்டத்திற்குப்பின் தலைமை ஆசிரியர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டார்.
மதுரை மாவட்டம் பொதும்பு அரசு உயர்நிலைப்பள்ளி தலைமைஆசிரியர் ஆரோக்கியசாமியால் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட குழந்தைகள், தங்கள் பிரச்சனைகளை பள்ளி ஆசிரியர்களிடம் பகிர்ந்து கொண்ட போது, குற்றம் செய்பவர் தலைமை ஆசிரியராக இருப்பதால் சகஆசிரியர்கள், பிரச் சனையில் தலையிடவில்லை. பாலியல் வன்முறைக்கு உள்ளான குழந்தைகளிடம் மாதர் சங்கம் நடத்திய விசாரணை அனைவரது உள்ளங்களையும் குமுறச்செய்தது. நடந்ததை வெளியில் சொன்னால் பெற்றோர் படிப்பை நிறுத்திவிடுவார்கள் என்ற பயம். வீட்டில் சொன்னால் பெயில் ஆக்கிவிடுவதாக ஆசிரியர் மிரட்டியது, இன்று தலைமை ஆசிரியர் என்ன செய்ய சொல்வாரோ என்ற பயத்துடனும் ஒவ்வொரு நாளும் பொழுதை தள்ளிய மாணவிகள் பலர். மார்பகங்கள் கசக்கப்பட்டு வேதனை தாங்காமல் பல நாள் தூக்கத்தை இழந்த மாணவிகள் பலர். இதையெல்லாம் கேட்ட போது நெஞ்சம் பொறுக்க வில்லை, இந்த நிலைகெட்ட மனிதரை நினைக்கும் போது, மாதர் சங்கத்தின் 2மாத போராட்டத்தால் குற்றவாளி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
வேலூர் மாவட்டம் சோலிங்கம் பகுதியில் அரசு பள்ளியில் 13வயது சிறுமி தினமும் வகுப்பின் வருகைப்பதிவேடும், தேர்வு நோட்டுகளையும் ஆசிரியர் அறைக்கு கொண்டு சென்ற போது வகுப்பு ஆசிரியரால் பாலியல் சீண் டலுக்கு உட்பட்டார்.
தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தில் தனியார் மெட்ரிக் பள்ளியில் பயிலும் 8ம் வகுப்பு விடுதி மாணவி அந்த பள்ளியில் முதல்வரால் தொடர்ந்து வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டார். வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.
விருதுநகர் மாவட்டம் பழைய சென்னல்குளம் அரசு தொடக்கப் பள்ளியில் பள்ளிக்குச் செல்ல மறுத்த 10வயது சிறுமியை விசாரித்த போது, அவள் சொன்ன தகவல் நம்மை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஒவ்வொரு நாளும் பள்ளி இடை வேளை நேரத்தில் தலைமைஆசிரியர் ராமசாமி அக்குழந்தையை மறைவிடத்திற்கு அழைத்துச் சென்று பல்வேறு சித்ரவதைக்கு உள்ளாக்கியுள்ளார். வெளியில் சொல்ல பயந்து பலநாட்கள் வேதனைகளை தாங்கியிருந்தாள். தகவல் தெரிந்ததும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் பள்ளியை முற்றுகையிட்டு பள்ளிக் கதவுகளை இழுத்து மூடியது. பின்னர் தலைமை ஆசிரியர் ராமசாமி கைது செய்யப்பட்டார்.
கிருஷ்ணகிரியில் உண்டுஉறைவிடப் பள்ளியில் பள்ளித் தாளாளரால் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட ஆதரவற்ற குழந்தை ஒன்று தன்னை பாதுகாக்கக் கோரி மாதர் சங்கத்திடம் மனு கொடுத் துள்ளது. இப்படி அடுக்கடுக்காக வந்து கொண்டுள்ள இச்செயல்களை தடுக்க வேண்டியது நம் கடமை அல்லவா? அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் தமிழகம் முழுவதும் 100 பள்ளிகளில் மாணவிகள் பாதுகாப்பு குறித்த ஆய்வுகளை நடத்தியுள்ளது.
கிராமப்புறப்பள்ளிகள் பலவற்றில் பள்ளிக்கு அருகில் உள்ள முட்புதர்களே, கழிப்பறை தடுப்புச் சுவர்களாக நிற்கின் றன. கழிப்பறைகள் இருக்கும் பல பள்ளிகளில் தண்ணீர் வசதி இல்லை. பள்ளி மாணவிகளுக்கு இலவச நாப்கின்கள் கொடுக்கும் தமிழக அரசு, தண்ணீர் வசதியுடன் கழிப்பறைகள் கட்டிக்கொடுக்க முன் வருமா? பள்ளிகளுக்கு ஆய்விற்கு சென்ற பலர் ஆய்வுக்கு அனுமதிக்கப்பட வில்லை. பெரும்பாலும் மாணவிகளை குடியிருக்கும் பகுதிகளிலேயே சந்திக்க முடிந்தது. பல பிரச்சனைகளை சொன்ன மாணவிகளும் பெற்றோர்களும் தங்கள் பெயரைச் சென்னால் தாங்கள் பள்ளி நிர்வாகத்தால் பழிவாங்கப்படும் பயத்தையும் வெளிப்படுத்தினர்.
இப்படிப்பட்ட பிரச்சனைகள் யாருடைய செல்லக் குழந்தைகளுக்கும் வந்துவிடக் கூடாது என்று ஜனநாயக மாதர் சங்கம் சர்வதேச வன்முறை எதிர்ப்பு தினத்தன்று (நவம்பர் 25) “பள்ளி மாணவிகளை பாதுகாப்போம்” என்று முழக்கமிடுகிறது. கீழ்க்கண்ட கோரிக்கைகளை முன்வைக்கிறது.
1. பணியிடங்களில் பாலியல் வன்முறைகளை தடுக்க புகார் கமிட்டி இருப்பது போல கல்வி நிலையங்களிலும் புகார் கமிட்டியை அமைத்திட வேண்டும்.
2. வளர்இளம் பெண்களுக்கு பாலியல் விழிப்புணர்வு கல்வியை கல்வித்துறை வழங்க வேண்டும்.
3. எந்த பிரச்சனைகளையும் எழுத்துப் பூர்வமாக புகார்கள் எழுதி போட கல்வி நிலையங்கள் தோறும் புகார் பொட்டிகள் வைக்க வேண்டும்.
4. அனைத்து பள்ளிகளிலும் இது போன்ற பிரச்சனைகளில் தலையிட தகுதியான கவுன்சிலர்களை நியமனம் செய்திட வேண்டும்.
5. அப்படி இல்லை என்றால் அப்பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும்.
6. அனைத்து பள்ளிகளிலும் மாணவிகளுக்கு தண்ணீர் வசதியுடன் தனிக்கழிப்பறைகளும் சுற்றுச்சுவர் பாதுகாப்பு வசதியும் வேண்டும்.
7. தேசிய குழந்தைகள் உரிமை ஆணையம் போல சட்ட அந்தஸ்து பெற்ற மாநில குழந்தைகள் ஆணையத்தை உருவாக்க வேண்டும்.
8. அரசு பேருந்துகளில் பள்ளிக்கு செல்லும் போது பாலியல் சீண்டல் நடந்தால் பேருந்து ஓட்டுநர், நடத்துநர்களே காவல் நிலையத்தில் தகவல் கொடுக்கும் பொறுப்பை ஏற்க வேண்டும்.
9. பாதிப்புக்குள்ளான குழந்தைகளை வீடியோ கான்பிரன்சிங்கில் விசாரிக்கவும், விசாரணையின் போது குழந்தைகள் மனநல மருத்துவரை உடன் வைத்து விசாரிக்கவும், ஆசிரியர்களுக்கும் வளர் இளம் பெண்களின் மனநிலை பற்றிய சரியான புரிதலுக்கான பயிற்சி கொடுக்கவும் வேண்டும்.
தமிழக அரசை வலியுறுத்தி அனைத்து மாவட்டங்களிலும் மாதர்களும் மாணவிகளும் போராட்டக் களம் காண்கிறார்கள். ‘பாதகம் செய்பவரை கண்டால் நீ பயம் கொள்ளல் ஆகாது பாப்பா. மோதி மிதித்துவிடு பாப்பா, அவர் முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா’ என பாப்பாவை தைரியப்படுத்தி பாதகச்செயலை எதிர்த்து பள்ளி மாணவிகளை பாதுகாப்போம்! வெற்றி கிடைக்கும் வரை போராடுவோம்!!
- பி.சுகந்தி
பெண்கள் பள்ளிக்கு சென்று கல்வி கற்க வாய்ப்பே இல்லாத நிலைமாறி அனைத்துறைகளிலும் தடம் பதித்து வருகின்றனர். பெண்கள் படிக்க வறுமை தவிர வேறு தடை இல்லை. நம் வீட்டு குழந்தைகள் பள்ளிக்கு செல்லும்போதே டாக்டராக, என்ஜீனியராக, ஐ.ஏ.எஸ் அதி காரியாக வரவேண்டும் என்ற ஆயிரம் கனவுகளோடு பள்ளிக்கு அனுப்புகின்றோம். சில பள்ளிகளில் பள்ளி ஆசிரியர்கள், வாகன ஓட்டுநர்கள், பள்ளி காவலர்கள், டியூசன் ஆசிரியர்கள், இப்படி பலரது வக்கிரபுத்திகளுக்கு ஆளாகும் குழந்தைகளின் நிலைமைகள் பல வெளிவந்து கொண்டுள்ளன. மாதா, பிதாவுக்கு அடுத்து குருவை மரியாதைக்குரிய இடத்தில் நாம் வைத்துள்ளோம். ஆனால் குழந்தைகளை கொண்டாட வேண்டிய குருவே இப்படி செய்தால்?
கடந்த ஆகஸ்டு 15ல் பள்ளியில் தேசியக் கொடியை ஏற்றி விட்டு இனிப்பு வழங்கிக்கொண்டிருந்த பள்ளி தலைமைஆசிரியரை ஊர் மக்கள் முற்றுகையிட்டனர். இது விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் ஊராட்சி ஓன் றிய நடுநிலைப் பள்ளியில் நடந்த சம்பவம். 12,13 வயது சிறுமிகளை வார்த்தைகள் கூட எழுத கூசும் அளவிற்கு அந்த தலைமைஆசிரியரின் நடவடிக்கைகள் அமைந்தன. குழந்தைகளின் பெற்றோர் புகார் கொடுக்க காவல் நிலையம் சென்ற போது “வழக்கு நடந்து தீர்ப்பு வர 10 ஆண்டுகள் ஆகும். அப்போது உன் குழந்தைக்கு திருமண வயது வந்து விடும். எனவே கொடுப்பதை வாங்கிக் கொண்டு வழக்கை வாபஸ் வாங்கு” என்று காவல் துறையால் அந்த பெற்றோர்கள் மிரட்டப்பட்டனர். பாதிக்கப்பட்ட குழந்தைகள் அனைவரும் தலித் குழந்தைகள். ஒரு குழந்தையின் பெற்றோர்க்கு ரூ.15 ஆயிரம் வாங்கிக் கொடுத்து வழக்கு வாபஸ் பெறப்பட்டது. காவல்துறையின் இச்செயல் குற்றம் செய்த ஆசிரியர் செய்த செயலைவிட இழிவான செயல் அல்லவா. மாதர் சங்க போராட்டத்திற்குப்பின் தலைமை ஆசிரியர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டார்.
மதுரை மாவட்டம் பொதும்பு அரசு உயர்நிலைப்பள்ளி தலைமைஆசிரியர் ஆரோக்கியசாமியால் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட குழந்தைகள், தங்கள் பிரச்சனைகளை பள்ளி ஆசிரியர்களிடம் பகிர்ந்து கொண்ட போது, குற்றம் செய்பவர் தலைமை ஆசிரியராக இருப்பதால் சகஆசிரியர்கள், பிரச் சனையில் தலையிடவில்லை. பாலியல் வன்முறைக்கு உள்ளான குழந்தைகளிடம் மாதர் சங்கம் நடத்திய விசாரணை அனைவரது உள்ளங்களையும் குமுறச்செய்தது. நடந்ததை வெளியில் சொன்னால் பெற்றோர் படிப்பை நிறுத்திவிடுவார்கள் என்ற பயம். வீட்டில் சொன்னால் பெயில் ஆக்கிவிடுவதாக ஆசிரியர் மிரட்டியது, இன்று தலைமை ஆசிரியர் என்ன செய்ய சொல்வாரோ என்ற பயத்துடனும் ஒவ்வொரு நாளும் பொழுதை தள்ளிய மாணவிகள் பலர். மார்பகங்கள் கசக்கப்பட்டு வேதனை தாங்காமல் பல நாள் தூக்கத்தை இழந்த மாணவிகள் பலர். இதையெல்லாம் கேட்ட போது நெஞ்சம் பொறுக்க வில்லை, இந்த நிலைகெட்ட மனிதரை நினைக்கும் போது, மாதர் சங்கத்தின் 2மாத போராட்டத்தால் குற்றவாளி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
வேலூர் மாவட்டம் சோலிங்கம் பகுதியில் அரசு பள்ளியில் 13வயது சிறுமி தினமும் வகுப்பின் வருகைப்பதிவேடும், தேர்வு நோட்டுகளையும் ஆசிரியர் அறைக்கு கொண்டு சென்ற போது வகுப்பு ஆசிரியரால் பாலியல் சீண் டலுக்கு உட்பட்டார்.
தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தில் தனியார் மெட்ரிக் பள்ளியில் பயிலும் 8ம் வகுப்பு விடுதி மாணவி அந்த பள்ளியில் முதல்வரால் தொடர்ந்து வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டார். வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.
விருதுநகர் மாவட்டம் பழைய சென்னல்குளம் அரசு தொடக்கப் பள்ளியில் பள்ளிக்குச் செல்ல மறுத்த 10வயது சிறுமியை விசாரித்த போது, அவள் சொன்ன தகவல் நம்மை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஒவ்வொரு நாளும் பள்ளி இடை வேளை நேரத்தில் தலைமைஆசிரியர் ராமசாமி அக்குழந்தையை மறைவிடத்திற்கு அழைத்துச் சென்று பல்வேறு சித்ரவதைக்கு உள்ளாக்கியுள்ளார். வெளியில் சொல்ல பயந்து பலநாட்கள் வேதனைகளை தாங்கியிருந்தாள். தகவல் தெரிந்ததும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் பள்ளியை முற்றுகையிட்டு பள்ளிக் கதவுகளை இழுத்து மூடியது. பின்னர் தலைமை ஆசிரியர் ராமசாமி கைது செய்யப்பட்டார்.
கிருஷ்ணகிரியில் உண்டுஉறைவிடப் பள்ளியில் பள்ளித் தாளாளரால் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட ஆதரவற்ற குழந்தை ஒன்று தன்னை பாதுகாக்கக் கோரி மாதர் சங்கத்திடம் மனு கொடுத் துள்ளது. இப்படி அடுக்கடுக்காக வந்து கொண்டுள்ள இச்செயல்களை தடுக்க வேண்டியது நம் கடமை அல்லவா? அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் தமிழகம் முழுவதும் 100 பள்ளிகளில் மாணவிகள் பாதுகாப்பு குறித்த ஆய்வுகளை நடத்தியுள்ளது.
கிராமப்புறப்பள்ளிகள் பலவற்றில் பள்ளிக்கு அருகில் உள்ள முட்புதர்களே, கழிப்பறை தடுப்புச் சுவர்களாக நிற்கின் றன. கழிப்பறைகள் இருக்கும் பல பள்ளிகளில் தண்ணீர் வசதி இல்லை. பள்ளி மாணவிகளுக்கு இலவச நாப்கின்கள் கொடுக்கும் தமிழக அரசு, தண்ணீர் வசதியுடன் கழிப்பறைகள் கட்டிக்கொடுக்க முன் வருமா? பள்ளிகளுக்கு ஆய்விற்கு சென்ற பலர் ஆய்வுக்கு அனுமதிக்கப்பட வில்லை. பெரும்பாலும் மாணவிகளை குடியிருக்கும் பகுதிகளிலேயே சந்திக்க முடிந்தது. பல பிரச்சனைகளை சொன்ன மாணவிகளும் பெற்றோர்களும் தங்கள் பெயரைச் சென்னால் தாங்கள் பள்ளி நிர்வாகத்தால் பழிவாங்கப்படும் பயத்தையும் வெளிப்படுத்தினர்.
இப்படிப்பட்ட பிரச்சனைகள் யாருடைய செல்லக் குழந்தைகளுக்கும் வந்துவிடக் கூடாது என்று ஜனநாயக மாதர் சங்கம் சர்வதேச வன்முறை எதிர்ப்பு தினத்தன்று (நவம்பர் 25) “பள்ளி மாணவிகளை பாதுகாப்போம்” என்று முழக்கமிடுகிறது. கீழ்க்கண்ட கோரிக்கைகளை முன்வைக்கிறது.
1. பணியிடங்களில் பாலியல் வன்முறைகளை தடுக்க புகார் கமிட்டி இருப்பது போல கல்வி நிலையங்களிலும் புகார் கமிட்டியை அமைத்திட வேண்டும்.
2. வளர்இளம் பெண்களுக்கு பாலியல் விழிப்புணர்வு கல்வியை கல்வித்துறை வழங்க வேண்டும்.
3. எந்த பிரச்சனைகளையும் எழுத்துப் பூர்வமாக புகார்கள் எழுதி போட கல்வி நிலையங்கள் தோறும் புகார் பொட்டிகள் வைக்க வேண்டும்.
4. அனைத்து பள்ளிகளிலும் இது போன்ற பிரச்சனைகளில் தலையிட தகுதியான கவுன்சிலர்களை நியமனம் செய்திட வேண்டும்.
5. அப்படி இல்லை என்றால் அப்பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும்.
6. அனைத்து பள்ளிகளிலும் மாணவிகளுக்கு தண்ணீர் வசதியுடன் தனிக்கழிப்பறைகளும் சுற்றுச்சுவர் பாதுகாப்பு வசதியும் வேண்டும்.
7. தேசிய குழந்தைகள் உரிமை ஆணையம் போல சட்ட அந்தஸ்து பெற்ற மாநில குழந்தைகள் ஆணையத்தை உருவாக்க வேண்டும்.
8. அரசு பேருந்துகளில் பள்ளிக்கு செல்லும் போது பாலியல் சீண்டல் நடந்தால் பேருந்து ஓட்டுநர், நடத்துநர்களே காவல் நிலையத்தில் தகவல் கொடுக்கும் பொறுப்பை ஏற்க வேண்டும்.
9. பாதிப்புக்குள்ளான குழந்தைகளை வீடியோ கான்பிரன்சிங்கில் விசாரிக்கவும், விசாரணையின் போது குழந்தைகள் மனநல மருத்துவரை உடன் வைத்து விசாரிக்கவும், ஆசிரியர்களுக்கும் வளர் இளம் பெண்களின் மனநிலை பற்றிய சரியான புரிதலுக்கான பயிற்சி கொடுக்கவும் வேண்டும்.
தமிழக அரசை வலியுறுத்தி அனைத்து மாவட்டங்களிலும் மாதர்களும் மாணவிகளும் போராட்டக் களம் காண்கிறார்கள். ‘பாதகம் செய்பவரை கண்டால் நீ பயம் கொள்ளல் ஆகாது பாப்பா. மோதி மிதித்துவிடு பாப்பா, அவர் முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா’ என பாப்பாவை தைரியப்படுத்தி பாதகச்செயலை எதிர்த்து பள்ளி மாணவிகளை பாதுகாப்போம்! வெற்றி கிடைக்கும் வரை போராடுவோம்!!
- பி.சுகந்தி
0 comments:
Post a Comment