Friday, November 25, 2011

பள்ளி மாணவிகளை பாதுகாப்போம்!

மங்கையராய் பிறப்பதோ பாவம் என்று நினைக்கும் அளவிற்கு பெண்கள் மீதான வன்முறைகள் நாளுக்குநாள் அதிகரித்த வண்ணமே உள்ளது. இந்த ஆணாதிக்க சமுதாயத்தில் முன்பெல்லாம் குழந்தை திருமணம், பெண்கல்வி மறுப்பு, தேவதாசி முறை, சதி, விதவை மணம் மறுப்பு, இப்படி இருந்த நிலை மாறி இன்று உள்ள நுகர்வுக் கலாச்சாரத்தில் வன்முறை வடிவங்கள் மாறிக்கொண்டே வருகிறது. மாற்றம் என்பதே விதியானதால் வன்முறையின் வடிவங்களும் மாறிவருகின்றன. காதலிக்க மறுக்கும் பெண்ணின் முகஅழகை சிதைக்க முகத்தில் அமிலம் வீசுவது, சாதி-மதம் மாறி காதலித்தால் குடும்ப கவுரவமே போய்விட்டதாக செய்யும் கவுரவக் கொலைகள், பள்ளிகளில் ஆசிரியர்களால் பாலியல் சீண்டலுக்கு உள்ளாகும் குழந்தைகள், குழந்தைகளை கடத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்துதல், இப்படி வன்முறையின் வடிவங்கள் நீண்டு கொண்டே செல்கின்றன. தமிழகத்திலுள்ள 40சதவீத பெண்கள் ஏதாவது ஒரு வகையில் தினம் தினம் வன்முறைக்கு உள்ளாகிறார்கள்.

பெண்கள் பள்ளிக்கு சென்று கல்வி கற்க வாய்ப்பே இல்லாத நிலைமாறி அனைத்துறைகளிலும் தடம் பதித்து வருகின்றனர். பெண்கள் படிக்க வறுமை தவிர வேறு தடை இல்லை. நம் வீட்டு குழந்தைகள் பள்ளிக்கு செல்லும்போதே டாக்டராக, என்ஜீனியராக, ஐ.ஏ.எஸ் அதி காரியாக வரவேண்டும் என்ற ஆயிரம் கனவுகளோடு பள்ளிக்கு அனுப்புகின்றோம். சில பள்ளிகளில் பள்ளி ஆசிரியர்கள், வாகன ஓட்டுநர்கள், பள்ளி காவலர்கள், டியூசன் ஆசிரியர்கள், இப்படி பலரது வக்கிரபுத்திகளுக்கு ஆளாகும் குழந்தைகளின் நிலைமைகள் பல வெளிவந்து கொண்டுள்ளன. மாதா, பிதாவுக்கு அடுத்து குருவை மரியாதைக்குரிய இடத்தில் நாம் வைத்துள்ளோம். ஆனால் குழந்தைகளை கொண்டாட வேண்டிய குருவே இப்படி செய்தால்?

கடந்த ஆகஸ்டு 15ல் பள்ளியில் தேசியக் கொடியை ஏற்றி விட்டு இனிப்பு வழங்கிக்கொண்டிருந்த பள்ளி தலைமைஆசிரியரை ஊர் மக்கள் முற்றுகையிட்டனர். இது விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் ஊராட்சி ஓன் றிய நடுநிலைப் பள்ளியில் நடந்த சம்பவம். 12,13 வயது சிறுமிகளை வார்த்தைகள் கூட எழுத கூசும் அளவிற்கு அந்த தலைமைஆசிரியரின் நடவடிக்கைகள் அமைந்தன. குழந்தைகளின் பெற்றோர் புகார் கொடுக்க காவல் நிலையம் சென்ற போது “வழக்கு நடந்து தீர்ப்பு வர 10 ஆண்டுகள் ஆகும். அப்போது உன் குழந்தைக்கு திருமண வயது வந்து விடும். எனவே கொடுப்பதை வாங்கிக் கொண்டு வழக்கை வாபஸ் வாங்கு” என்று காவல் துறையால் அந்த பெற்றோர்கள் மிரட்டப்பட்டனர். பாதிக்கப்பட்ட குழந்தைகள் அனைவரும் தலித் குழந்தைகள். ஒரு குழந்தையின் பெற்றோர்க்கு ரூ.15 ஆயிரம் வாங்கிக் கொடுத்து வழக்கு வாபஸ் பெறப்பட்டது. காவல்துறையின் இச்செயல் குற்றம் செய்த ஆசிரியர் செய்த செயலைவிட இழிவான செயல் அல்லவா. மாதர் சங்க போராட்டத்திற்குப்பின் தலைமை ஆசிரியர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டார்.

மதுரை மாவட்டம் பொதும்பு அரசு உயர்நிலைப்பள்ளி தலைமைஆசிரியர் ஆரோக்கியசாமியால் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட குழந்தைகள், தங்கள் பிரச்சனைகளை பள்ளி ஆசிரியர்களிடம் பகிர்ந்து கொண்ட போது, குற்றம் செய்பவர் தலைமை ஆசிரியராக இருப்பதால் சகஆசிரியர்கள், பிரச் சனையில் தலையிடவில்லை. பாலியல் வன்முறைக்கு உள்ளான குழந்தைகளிடம் மாதர் சங்கம் நடத்திய விசாரணை அனைவரது உள்ளங்களையும் குமுறச்செய்தது. நடந்ததை வெளியில் சொன்னால் பெற்றோர் படிப்பை நிறுத்திவிடுவார்கள் என்ற பயம். வீட்டில் சொன்னால் பெயில் ஆக்கிவிடுவதாக ஆசிரியர் மிரட்டியது, இன்று தலைமை ஆசிரியர் என்ன செய்ய சொல்வாரோ என்ற பயத்துடனும் ஒவ்வொரு நாளும் பொழுதை தள்ளிய மாணவிகள் பலர். மார்பகங்கள் கசக்கப்பட்டு வேதனை தாங்காமல் பல நாள் தூக்கத்தை இழந்த மாணவிகள் பலர். இதையெல்லாம் கேட்ட போது நெஞ்சம் பொறுக்க வில்லை, இந்த நிலைகெட்ட மனிதரை நினைக்கும் போது, மாதர் சங்கத்தின் 2மாத போராட்டத்தால் குற்றவாளி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

வேலூர் மாவட்டம் சோலிங்கம் பகுதியில் அரசு பள்ளியில் 13வயது சிறுமி தினமும் வகுப்பின் வருகைப்பதிவேடும், தேர்வு நோட்டுகளையும் ஆசிரியர் அறைக்கு கொண்டு சென்ற போது வகுப்பு ஆசிரியரால் பாலியல் சீண் டலுக்கு உட்பட்டார்.

தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தில் தனியார் மெட்ரிக் பள்ளியில் பயிலும் 8ம் வகுப்பு விடுதி மாணவி அந்த பள்ளியில் முதல்வரால் தொடர்ந்து வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டார். வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.

விருதுநகர் மாவட்டம் பழைய சென்னல்குளம் அரசு தொடக்கப் பள்ளியில் பள்ளிக்குச் செல்ல மறுத்த 10வயது சிறுமியை விசாரித்த போது, அவள் சொன்ன தகவல் நம்மை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஒவ்வொரு நாளும் பள்ளி இடை வேளை நேரத்தில் தலைமைஆசிரியர் ராமசாமி அக்குழந்தையை மறைவிடத்திற்கு அழைத்துச் சென்று பல்வேறு சித்ரவதைக்கு உள்ளாக்கியுள்ளார். வெளியில் சொல்ல பயந்து பலநாட்கள் வேதனைகளை தாங்கியிருந்தாள். தகவல் தெரிந்ததும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் பள்ளியை முற்றுகையிட்டு பள்ளிக் கதவுகளை இழுத்து மூடியது. பின்னர் தலைமை ஆசிரியர் ராமசாமி கைது செய்யப்பட்டார்.

கிருஷ்ணகிரியில் உண்டுஉறைவிடப் பள்ளியில் பள்ளித் தாளாளரால் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட ஆதரவற்ற குழந்தை ஒன்று தன்னை பாதுகாக்கக் கோரி மாதர் சங்கத்திடம் மனு கொடுத் துள்ளது. இப்படி அடுக்கடுக்காக வந்து கொண்டுள்ள இச்செயல்களை தடுக்க வேண்டியது நம் கடமை அல்லவா? அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் தமிழகம் முழுவதும் 100 பள்ளிகளில் மாணவிகள் பாதுகாப்பு குறித்த ஆய்வுகளை நடத்தியுள்ளது.

கிராமப்புறப்பள்ளிகள் பலவற்றில் பள்ளிக்கு அருகில் உள்ள முட்புதர்களே, கழிப்பறை தடுப்புச் சுவர்களாக நிற்கின் றன. கழிப்பறைகள் இருக்கும் பல பள்ளிகளில் தண்ணீர் வசதி இல்லை. பள்ளி மாணவிகளுக்கு இலவச நாப்கின்கள் கொடுக்கும் தமிழக அரசு, தண்ணீர் வசதியுடன் கழிப்பறைகள் கட்டிக்கொடுக்க முன் வருமா? பள்ளிகளுக்கு ஆய்விற்கு சென்ற பலர் ஆய்வுக்கு அனுமதிக்கப்பட வில்லை. பெரும்பாலும் மாணவிகளை குடியிருக்கும் பகுதிகளிலேயே சந்திக்க முடிந்தது. பல பிரச்சனைகளை சொன்ன மாணவிகளும் பெற்றோர்களும் தங்கள் பெயரைச் சென்னால் தாங்கள் பள்ளி நிர்வாகத்தால் பழிவாங்கப்படும் பயத்தையும் வெளிப்படுத்தினர்.

இப்படிப்பட்ட பிரச்சனைகள் யாருடைய செல்லக் குழந்தைகளுக்கும் வந்துவிடக் கூடாது என்று ஜனநாயக மாதர் சங்கம் சர்வதேச வன்முறை எதிர்ப்பு தினத்தன்று (நவம்பர் 25) “பள்ளி மாணவிகளை பாதுகாப்போம்” என்று முழக்கமிடுகிறது. கீழ்க்கண்ட கோரிக்கைகளை முன்வைக்கிறது.

1. பணியிடங்களில் பாலியல் வன்முறைகளை தடுக்க புகார் கமிட்டி இருப்பது போல கல்வி நிலையங்களிலும் புகார் கமிட்டியை அமைத்திட வேண்டும்.
2. வளர்இளம் பெண்களுக்கு பாலியல் விழிப்புணர்வு கல்வியை கல்வித்துறை வழங்க வேண்டும்.
3. எந்த பிரச்சனைகளையும் எழுத்துப் பூர்வமாக புகார்கள் எழுதி போட கல்வி நிலையங்கள் தோறும் புகார் பொட்டிகள் வைக்க வேண்டும்.
4.  அனைத்து பள்ளிகளிலும் இது போன்ற பிரச்சனைகளில் தலையிட தகுதியான கவுன்சிலர்களை நியமனம் செய்திட வேண்டும்.
5. அப்படி இல்லை என்றால் அப்பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும்.
6. அனைத்து பள்ளிகளிலும் மாணவிகளுக்கு தண்ணீர் வசதியுடன் தனிக்கழிப்பறைகளும் சுற்றுச்சுவர் பாதுகாப்பு வசதியும் வேண்டும்.
7. தேசிய குழந்தைகள் உரிமை ஆணையம் போல சட்ட அந்தஸ்து பெற்ற மாநில குழந்தைகள் ஆணையத்தை உருவாக்க வேண்டும்.
8. அரசு பேருந்துகளில் பள்ளிக்கு செல்லும் போது பாலியல் சீண்டல் நடந்தால் பேருந்து ஓட்டுநர், நடத்துநர்களே காவல் நிலையத்தில் தகவல் கொடுக்கும் பொறுப்பை ஏற்க வேண்டும்.
9. பாதிப்புக்குள்ளான குழந்தைகளை வீடியோ கான்பிரன்சிங்கில் விசாரிக்கவும், விசாரணையின் போது குழந்தைகள் மனநல மருத்துவரை உடன் வைத்து விசாரிக்கவும், ஆசிரியர்களுக்கும் வளர் இளம் பெண்களின் மனநிலை பற்றிய சரியான புரிதலுக்கான பயிற்சி கொடுக்கவும் வேண்டும்.

தமிழக அரசை வலியுறுத்தி அனைத்து மாவட்டங்களிலும் மாதர்களும் மாணவிகளும் போராட்டக் களம் காண்கிறார்கள். ‘பாதகம் செய்பவரை கண்டால் நீ பயம் கொள்ளல் ஆகாது பாப்பா. மோதி மிதித்துவிடு பாப்பா, அவர் முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா’ என பாப்பாவை தைரியப்படுத்தி பாதகச்செயலை எதிர்த்து பள்ளி மாணவிகளை பாதுகாப்போம்! வெற்றி கிடைக்கும் வரை போராடுவோம்!!


- பி.சுகந்தி

0 comments:

Post a Comment

Labels

Coca Cola (1) Peak Oil (1) Permaculture (1) Power of Community (1) Renewable energy (1) Solar energy (1) SOPA (1) sustainable agriculture (1) அ.குமரேசன் (6) அங்காடிதெரு (1) அணு ஆற்றல் (2) அணுமின் (1) அண்ணா (4) அண்ணா நூலகம் (1) அதிர்ச்சி (1) அத்வானி (2) அந்நிய முதலீடு (2) அபிநயா (1) அப்துல் கலாம் (1) அப்பணசாமி (2) அமெரிக்கா (20) அம்பானி (1) அம்பேத்கர் (9) அரசியல் (177) அரசியல்.நிகழ்வுகள் (6) அரசு (14) அரசு மருத்துவமனை (1) அரசு விடுதி மாணவர்கள் (1) அரவான் (1) அருந்ததியர் (1) அர்ஜெண்டினா (1) அலசல் (1) அவலம் (19) அழகு (1) அறிமுகம் (1) அனுபவம் (28) அன்னா ஹசாரே (1) அஜயன் பாலா (1) ஆ.ராசா (1) ஆணையம் (2) ஆதவன் தீட்சண்யா (3) ஆப்கானிஸ்தான் (1) ஆப்பிரிக்கா (2) ஆர்.மீனா (1) ஆர்எஸ்எஸ் (2) ஆவணப்படம் (3) ஆனந்தன் (2) இ.எம்.ஜோசப் (1) இ.பா.சிந்தன் (22) இட ஓதுக்கீடு (3) இடஒதுக்கீடு (1) இடதுசாரிகள் (4) இணையம் (2) இதழ்கள் (6) இந்தியா (69) இந்துத்துவா (8) இந்துஜா (1) இமு (2) இமு டிச11 (5) இமு நவமபர் 2011 (6) இயக்கம் (7) இயக்குனர் ஷங்கர் (1) இரா.சிந்தன் (5) இரா.செழியன் (2) இரா.நடராஜன் (3) இராம.கோபாலன் (1) இல.சண்முகசுந்தரம் (2) இலக்கியம் (38) இலங்கை (6) இலங்கைத் தமிழர் (4) இலவசக் கல்வி (1) இலவசங்கள் (1) இளவரசன் கொலை (1) இளைஞர் முழக்கம் (11) இஷ்ரத் (2) இஸ்ரேல் ஆக்கிரமிப்பு (1) இஸ்லாம் (3) ஈராக் (1) ஈரான் (2) உ.வாசுகி (1) உச்ச நீதிமன்றம் (1) உணவு நெருக்கடி (2) உதயசங்கர் (1) உத்தப்புரம் (1) உயர்கல்வி (2) உரையாடல்கள் (2) உலக சினிமா (4) உலகமயம் (5) உலகம் (46) உளவியல் (1) உள்ளாட்சி (1) உள்ளாட்சித் தேர்தல் (1) ஊடகங்கள் (14) ஊடகம் (8) ஊழல் (30) எடியூரப்பா (1) எம்.எப்.ஹூசேன் (1) எம்.சிவக்குமார் (2) எரிசக்தி (1) எல்.கே.ஜி (1) என்.ஜி.ஓ (1) என்கவுண்டர் (1) எஸ். பாலா (1) எஸ்.கண்ணன் (1) எஸ்.கருணா (3) எஸ்.பி.ராஜேந்திரன் (3) எஸ்.வி.வேணுகோபாலன் (2) ஏகாதிபத்தியம் (13) ஏமன் (1) ஒபாமா (4) ஓம்பிரகாஷ் வால்மீகி (1) ஓளிப்பதிவு (1) ஃபாக்ஸ்கான் (1) கச்சத் தீவு (1) கட்டுரை (51) கட்டுரைகள் (2) கணிணி (2) கணினி தொழில் நுட்பம் (1) கமல்ஹாசன் (1) கம்யூனிசம் (12) கருணாநிதி (11) கருத்து சுதந்திரம் (1) கருத்துரிமை (3) கலைஞர் (6) கல்வி (14) கவிதை (21) கவிதைகள் (1) கறுப்புப்பணம் (3) கனிமொழி (2) காங்கிரஸ் (10) காதல் (2) கால்பந்து (1) காவல்துறை (4) காஷ்மீர் (1) கி.பார்த்திபராஜா (1) கிங்பிஷர் (1) கியூபா (4) கிரீஸ் (1) குடும்பம் (1) குட்டி ரேவதி (1) குப்பன் சுப்பன் (1) குலாத்தி (1) குழந்தைகள் (9) குழந்தைகள் கடத்தல் (1) குஜராத் கலவரம் (1) குஜராத் படுகொலைகள் (1) கூகிள் அந்தரங்கம் (1) கூடங்குளம் (2) கே.சாமுவேல்ராஜ் (1) கே.பாலமுருகன் (1) கேள்விகள் (1) கைப்பற்றுவோம் போராட்டம் (1) கோவில் (1) ச.தமிழ்ச்செல்வன் (1) ச.மாடசாமி (1) சக்திஜோதி (1) சங்கமம் (1) சசிகலா (1) சச்சின் (1) சட்டசபை (2) சட்டம் (4) சத்யஜித் ரே (1) சந்திரகாந்தன் (1) சமச்சீர் கல்வி (4) சமவூதியம் (1) சமூக நீதி (2) சமூக வலைத்தளம் (1) சமூகப் பாதுகாப்பு (2) சமூகம் (177) சம்பு (1) சரத் பவார் (1) சர்வதேச பெண்கள் தினம் (1) சல்மான் ருஷ்டி (1) சா.கந்தசாமி (2) சா.செயக்குமார் (1) சாகித்திய அகாதமி விருது (1) சாக்லேட் (1) சாதீயம் (4) சாரா விஜி (2) சாலிம் அலி (1) சி.பி.எம் (9) சிக்கிம் (1) சிந்தனை (5) சிபி (1) சிராஜுதீன் (1) சில்லரை வர்த்தகம் (4) சிறப்பு பொருளாதார மண்டலங்கள் (1) சிறுகதை (12) சினிமா (52) சினிமா செய்திகள் (4) சினிமாச் செய்திகள் (4) சீத்தாராம் யெச்சூரி (2) சு.பொ.அகத்தியலிங்கம் (2) சு.வெங்கடேசன் (1) சுகாதாரம் (1) சுதிர் ரா (1) சுயமரியாதைத் திருமணம் (1) சுவாரசியம் (1) சுற்றுப்புறச் சூழல் (3) சூர்யா (1) செம்மலர் (4) செம்மலர் அக் 2011 (4) செய்திகள் (112) சென்னை (1) சோவியத் (1) சோஷலிசம் (1) டெல்லி (2) டேம் 999 (1) த.தமிழரசி (1) தகவல் உரிமை (1) தகவல் திருட்டு (2) தண்ணீர் (3) தமிழக மீனவர்கள் (1) தமிழகம் (66) தமிழர் (1) தமிழ்ச் சினிமா (1) தமிழ்நதி (1) தமுஎகச (4) தலித் (21) தற்கொலை (1) தனியார்மயம் (4) தனுஷ் (1) தி.க (2) திமுக (1) திரிணாமுல் (1) திருப்பூர் (2) திருமணம் (2) திரைக்குப் பின்னால் (2) திரைத்துறை (1) திரைப்பட விழா (1) திரைப்படம் (4) தினகரன் (1) தினமணி (3) தீக்கதிர் (9) தீண்டாமை (22) தீண்டாமையின் அடையாளங்கள் (1) தீபாவளி (1) தேசியச் செய்திகள் (4) தேர்தல் (4) தொண்டு நிறுவனங்கள் (1) தொலைக்காட்சி (2) தொழிலாளர் (6) ந.பெரியசாமி (1) நகர்ப்புற விவசாயம் (1) நகைச்சுவை (1) நக்கீரன் (1) நதிம் சயித் (1) நந்தலாலா (1) நந்தன் (1) நரேந்திர மோடி (6) நலத்திட்டங்கள் (2) நவம்பர் புரட்சி (1) நாடகம் (1) நாடாளுமன்றத் தேர்தல் 2014 (2) நாணய மதிப்பு (1) நாறும்பூநாதன் (1) நிகழ்வுகள் (154) நிலப்பிரபுத்துவம் (1) நிலமோசடி (1) நீதித்துறை (2) நீலவேந்தன் (2) நுகர்வுக் கலாச்சாரம் (2) நூல் அறிமுகம் (12) நூல் வெளியீடுகள் (1) நெல்சன் மண்டேலா (1) நேட்டோ (2) நையாண்டி (26) நையாண்டி் (14) ப.சிதம்பரம் (3) பசுபதி (1) படுகொலை (3) படைப்புகள் (2) பட்ஜெட் (1) பணவீக்கம் (2) பதிவர் வட்டம் (3) பதிவர்வட்டம் (1) பதிவுலகம் (1) பரிந்துரைகள் (5) பழங்குடி (1) பள்ளிக்கூடம் (1) பறவைகள் (1) பன்னாட்டுக் கம்பெனிகள் (3) பா.ஜ.க (3) பாகிஸ்தான் (2) பாடல் (5) பாதல் சர்க்கார் (1) பாதுகாப்பு (1) பாரதி (2) பாலபாரதி (1) பாலஸ்தீனம் (1) பாலியல் வன்முறை (6) பாலு மகேந்திரா (1) பால் சமத்துவம் (1) பாஜக (1) பி.சுகந்தி (1) பி.ராமமூர்த்தி (1) பிடல் காஸ்ட்ரோ (3) பிரணாப் முகர்ஜி (1) பிரபாத் பட்நாயக் (3) பிரளயன் (2) பிரிட்டன் (1) பிர்தவ்ஸ் ராஜகுமாரன் (1) பிளின் (1) பு.பெ.நவமபர் 2011 (1) புகைப்படங்கள் (1) புதிய பரிதி (2) புது விசை (12) புதுமை (1) புத்தக அறிமுகம் (2) புத்தகக் கண்காட்சிகள் (2) புத்தகம் (18) புத்தகம் பேசுது (17) புத்தகம் பேசுது நவம்பர் 2011 (8) புத்தகாலயம் (2) புத்தாண்டு (1) புபே (2) புபே டிச11 (8) புரட்சி (2) புவி (1) புவி டிச11 (5) புவி நவ 2011 (7) புனைவு (1) புஷ் (1) பெட்ரோல் (7) பெண் (11) பெண் விடுதலை (1) பெண்குழந்தை (1) பெண்ணியம் (9) பெண்ணெழுத்து (1) பெரியார் (2) பெருமுதலாளிகள் (7) பேட்டி (2) பேரா.சிவசுப்பிரமணியன் (2) பேஸ்புக் (1) பொருளாதார நெருக்கடி (2) பொருளாதாரம் (24) போக்குவரத்து (1) போராட்டம் (15) போலீஸ் தாக்குதல் (3) ப்ரிசம் (4) ப்ரிசம் - தகவல் திருட்டு (7) ப்ரியா தம்பி (1) மக்களுக்கான மருத்துவம் (1) மக்கள் நலப்பணியாளர்கள் (2) மக்கானா (1) மத அடிப்படை வாதம் (1) மதவெறி (3) மதுசூதனன் (1) மம்தா (3) மம்முட்டி (1) மரபணு (1) மலாலாய் சோயா (1) மவோயிஸ்டுகள் (1) மன்மதன் அம்பு (1) மன்மோகன்சிங் (10) மா ற்று (1) மாட்டுக்கறி (1) மாதர் சங்கம் (1) மாதவராஜ் (2) மாவோ (1) மாற்ற (1) மாற்று (223) மின்கட்டணம் (1) மின்சாரம் (1) மீள்பார்வை (2) முதலாளி (1) முதலாளித்துவம் (11) முத்தமாக மாறேன் (1) முத்துக்கண்ணன் (1) முல்லைப் பெரியாறு (7) முறைகேடுகள் (5) மெகாசீரியல் (1) மே.வங்க அரசு (1) மே.வங்கம் (1) மேதினம் (1) மேற்கு வங்கம் (1) மொக்கை (1) மொழி (2) மொழிபெயர்ப்பு (1) மோசடி (1) மோடி (3) மோனிகா (1) யுத்தம் (2) ரத யாத்திரை (1) ரமேஷ் பாபு (2) ராகுல் காந்தி (2) ராடியா (2) ராஜ பக்‌ஷே (1) ரிலையன்ஸ் (1) ருமேனியா (1) லட்சுமணப்பெருமாள் (2) லெனின் (2) லோக்பால் (5) வசந்த பாலன் (1) வண்ணக்கதிர் (1) வரலாறு (19) வலைப்பூக்கள் (1) வழக்கு விசாரணை (1) வாசிப்பு (5) வாச்சாத்தி (1) வால் ஸ்டிரிட் (3) வால்மார்ட் (1) வால்ஸ்டிரிட் போராட்டம் (2) வாழ்க்கை (4) வானியல் (2) விக்கிபீடியா (1) விக்கிலீகஸ் (1) விக்கிலீக்ஸ் (7) விஞ்ஞானம் (2) விமர்சனம் (10) விலையேற்றம் (2) விலைவாசி (11) விலைவாசி உயர்வு (2) விவாதங்கள் (1) விவாதம் (9) விளம்பரம் (1) விளையாட்டு (4) வினவு (1) விஜய் (2) விஜய் மல்லையா (1) வீட்டுவசதி வாரியம் (1) வீரமணி (2) வெண்மணி (2) வெள்ளம் (2) வெனிசுவெல்லா (1) வேலையின்மை (2) வோடாபோன் (1) ஜப்பான் நெருக்கடி (2) ஜாக்கிசான் (1) ஜாதி (1) ஜாபர் பனாகி (1) ஜூலியன் அசாங்க (1) ஜெயலலிதா (9) ஜோதிடம் (1) ஸ்டீவ் ஜாப்ஸ் (1) ஸ்பீல்பர்க் (2) ஸ்பெக்ட்ரம் (6)