Tuesday, October 11, 2011

பாலியல் வன்முறைக்களமாகும் பள்ளிகள்



 - ஜோ.ராஜ்மோகன்

(இந்திய மாணவர் சங்க மாநிலச்செயலாளர்) 


நான்கு வயது பெண் குழந்தையை பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாக்கி கொடுமைப்படுத்திய விழுப்புரம் மாவட் டம் கள்ளக்குறிச்சி ஏ.டி.ஜே பள்ளியின் பெண் முதல்வர் லேசிபோஸ்கோ, ஆசி ரியர் போஷியோ ஆகியோரை உடனடி யாக கைது செய்யுமாறும், இவ்வளவு நாள் வரை அவர்களை கைது செய்யாமல் இருந் தது ஏன்? என்பது குறித்தும் விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், கள் ளக்குறிச்சி காவல்நிலைய ஆய்வாளர் ஆகி யோரை செப்டம்பர் 27 அன்று நீதிமன்றத் தில் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டுமெனவும், மேலும், நான்கு வாரத் திற்குள் விசாரணை அறிக்கையை தாக் கல் செய்ய வேண்டுமெனவும், சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால், நீதிபதி டி.எஸ்.சிவஞா னம் ஆகியோர் உத்தரவிட்டனர். இந்த நட வடிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் பொதும்பு அரசு உயர் நிலைப் பள்ளி தலைமையாசிரியர் ஆரோக்கியசாமி, இப்பள்ளியில் படிக்கும் மாணவிகளை பாலியல் ரீதியாக தினந் தோறும் துன்புறுத்தி சித்ரவதை செய்துள் ளார். இது குறித்து கடும் போராட்டத்திற்கு பின்னே வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஆனால் காவல்துறை இரண்டு மாதமாகி யும் குற்றவாளியான ஆரோக்கியசாமியை கைது செய்யாமல் பாதுகாத்து வந்ததோடு, போராடிய பொதும்பு கிராம மக்களை காவல்துறை ஒவ்வொரு வீடாக சென்று மிரட்டிய அராஜக நடவடிக்கைக்கு ஜனநா யக அமைப்புகள் கடுமையான எதிர்ப்பு களை தெரிவித்தன.

ஜனநாயக மாதர் சங்கம் உள்ளிட்ட ஜனநாயக அமைப்புகளின் தொடர் போராட் டத்திற்கு பின்பு நடவடிக்கை எடுக்கப்பட் டுள்ளது. நாகை மாவட்டம் வேதா ரண்யம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள் ளியில் 80க்கும் மேற்பட்ட மாணவிகளி டம் இரட்டை அர்த்தத்தில் ஆபாசமாக பேசு வது, தொடுவது, கிள்ளுவது என்று பாலியல் சீண்டல் துன்புறுத்தல் நடவடிக் கையில் ஈடுபட்ட ஆசிரியர் சுந்தரவடி வேல் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டும், இன்றுவரை கைது செய்யாமல் காவல்துறை பாதுகாத்து வருகிறது. இத்த கைய அநீதி கண்டு வெகுண்டெழுந்த பெற்றோருடன் இந்திய மாணவர் சங்க மும் இணைந்து போராடி வருகிறது.

விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் சத்யாநகர் நகராட்சி நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் தனசேகரன், 8ம் வகுப்பு பயிலும் மூன்று தலித் மாணவி கள் மீது பாலியல் வன்முறை நடவடிக்கை களை ஏவியுள்ளார். மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் பாதிக்கப்பட்ட மாணவிகள் பெற்றோர்களிடம் கதறி புலம்பியுள்ளனர். ஆகஸ்ட்-15 லிருந்து இந்திய மாணவர் சங்கம் மற்றும் மனித உரிமை அமைப்பு களும் போராடியதன்பெயரில் வழக்கு மட் டும் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இன்றுவரை கைது செய்யப்படவில்லை. இப்படி தமிழக பள்ளிகளில் நடைபெறும் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை கள் தொடர் கதையாவது வேதனையளிக்கிறது.

பாதிக்கப்பட்டவர்கள் குழந்தையாக வும் பெண்களாகவும் இருப்பதால் எதிர்கா லம், குடும்ப கௌரவம், சமூகத்தில் விலக்கி வைக்கப்படுதல் போன்ற காரணங்களால் இப்படிப்பட்ட சம்பவங்களை பெரும்பாலும் வெளிக்கொணர்வதுமில்லை. ஆனால் அரசின் புள்ளி விவரத்தை பார்க்கிறபோது அதிர்ச்சியளிக்கிறது. பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ள அடிப்படையில், இந்தியா வில் 53.22 சதவீதம் குழந்தைகள் பாலியல் ரீதியான துன்புறுத்தல்களை சந்திக்கிறார் கள். இதில் 50 சதவீதம் துன்புறுத்தல்கள், குழந்தைகளின் நம்பிக்கையைப் பெற்ற, அவர்களுடன் நெருங்கிப் பழகுபவர்க ளால் ஏற்படுகிறது என்கிறது. மேலும் சர்வதேச புள்ளி விவரம் கூறுகிறபடி, நான் கில் இரண்டு பெண்குழந்தைகளும் ஆறில் ஒரு ஆண் குழந்தையும் பாலியல் வன் முறைக்கு பலியாகின்றனர். இது குறித்து ஐ.நா.வின் குழந்தைகள் அமைப்பான யுனி செப் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், உலக அளவில் 18 வயதுக்கு உட்பட்ட 150 மில்லியன் பெண் குழந்தைகளும் 73 மில் லியன் ஆண் குழந்தைகளும் வல்லுறவு உள்ளிட்ட பாலியல் சீண்டலுக்குள் தள் ளப்படுகிறார்கள் என்று அறிக்கை தெரி விக்கிறது.

இந்தியாவில் நடைமுறையில் உள்ள சட்டத்தில் இந்திய தண்டனைச் சட்டம் பாலியல் வன்முறை என்பது சட்டப்படி குற்றமாகச் சொல்கிறது. அதன்படி பாலி யல் வன்முறை அல்லது அதற்கான முயற்சி நடந்தால் அதை இச்சட்டம் தண் டனைக்குரிய குற்றமாக்குகிறது. இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 375, 376 ஆகி யவற்றில் கூட சரியான விளக்கங்கள் இல்லை என்றும், இச்சட்டப்பிரிவுகளில் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப் புக்காக இன்னும் ஏராளமான சரத்துக்கள் இணைக்கப்பட வேண்டுமெனவும் பெண் கள் அமைப்புகள் மற்றும் சமூக ஆர்வ லர்கள் குரல் எழுப்பி வருகின்றனர்.

இப்படிப்பட்ட குழந்தைகள் மற்றும் பெண்கள் மீதான பாலியல் குற்றங்களை தடுக்கும் வகையில், தடைச்சட்டம் வலு வான முறையில் இயற்றப்பட வேண்டும். அதற்கான சட்ட முன் வரைவுகளை பெண் உரிமை அமைப்புகள், குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் மனித உரிமை அமைப் புகள் உள்ளிட்ட ஜனநாயக இயக்கங்களி டம் கருத்துக்களை பெற்று உருவாக்க வேண்டும்.

ஆனால் உடனடி நடவடிக்கையாக இப்படிப்பட்ட புகாரின் மீதான தண்ட னையை உறுதிபடுத்த ஜனநாயக அமைப்புகள் வலுவான போராட்டங்களை முன்னெடுத்துச் செல்ல வேண்டியுள்ளது.

இப்படிப்பட்ட பெரும்பாலான புகார்கள் பதிவு செய்யப்படுவதும் இல்லை. புகார் கள் பதிவு செய்யப்பட்டாலும் உரிய வழக்கு களின்படி குற்றவாளிகள் தண்டிக்கப்படு வதுமில்லை என்பதுதான் உண்மை. பாலி யல் குற்றங்களை பதிவு செய்து, குற்றங்கள் மீதான உரிய நடவடிக்கையை காவல்துறை உறுதிப்படுத்த வேண்டும். சமூகத்தின் மீது அக்கறை கொண்ட ஆசிரியர் அமைப் புகள், மாணவர் இயக்கங்கள், மக்கள் இயக்கங்கள், மனித உரிமை அமைப்புகள் இப்படிப்பட்ட கொடுமை களுக்கு எதிராக வலுவாக குரல் கொடுக்க வேண்டும்.

மேலும் பள்ளிக் குழந்தைகள் மீதான வன்முறையை தடுத்திட, தமிழக பள்ளி கள் தோறும் குழந்தைகள் பாதுகாப்பு உரி மைகள் குறித்த விழிப்புணர்வுகளை ஏற் படுத்திட, குழந்தைகள் உரிமை பாதுகாப் புக் குழுக்களை உருவாக்கிட வேண்டும். இதன் மூலம் குழந்தைகள் மீதான வன் முறைகள் தடுக்கப்படுவதோடு, கல்வி பாதுகாப்பையும் உறுதிப்படுத்த முடியும். 

(நன்றி - தீக்கதிர்)

0 comments:

Post a Comment

Labels

Coca Cola (1) Peak Oil (1) Permaculture (1) Power of Community (1) Renewable energy (1) Solar energy (1) SOPA (1) sustainable agriculture (1) அ.குமரேசன் (6) அங்காடிதெரு (1) அணு ஆற்றல் (2) அணுமின் (1) அண்ணா (4) அண்ணா நூலகம் (1) அதிர்ச்சி (1) அத்வானி (2) அந்நிய முதலீடு (2) அபிநயா (1) அப்துல் கலாம் (1) அப்பணசாமி (2) அமெரிக்கா (20) அம்பானி (1) அம்பேத்கர் (9) அரசியல் (177) அரசியல்.நிகழ்வுகள் (6) அரசு (14) அரசு மருத்துவமனை (1) அரசு விடுதி மாணவர்கள் (1) அரவான் (1) அருந்ததியர் (1) அர்ஜெண்டினா (1) அலசல் (1) அவலம் (19) அழகு (1) அறிமுகம் (1) அனுபவம் (28) அன்னா ஹசாரே (1) அஜயன் பாலா (1) ஆ.ராசா (1) ஆணையம் (2) ஆதவன் தீட்சண்யா (3) ஆப்கானிஸ்தான் (1) ஆப்பிரிக்கா (2) ஆர்.மீனா (1) ஆர்எஸ்எஸ் (2) ஆவணப்படம் (3) ஆனந்தன் (2) இ.எம்.ஜோசப் (1) இ.பா.சிந்தன் (22) இட ஓதுக்கீடு (3) இடஒதுக்கீடு (1) இடதுசாரிகள் (4) இணையம் (2) இதழ்கள் (6) இந்தியா (69) இந்துத்துவா (8) இந்துஜா (1) இமு (2) இமு டிச11 (5) இமு நவமபர் 2011 (6) இயக்கம் (7) இயக்குனர் ஷங்கர் (1) இரா.சிந்தன் (5) இரா.செழியன் (2) இரா.நடராஜன் (3) இராம.கோபாலன் (1) இல.சண்முகசுந்தரம் (2) இலக்கியம் (38) இலங்கை (6) இலங்கைத் தமிழர் (4) இலவசக் கல்வி (1) இலவசங்கள் (1) இளவரசன் கொலை (1) இளைஞர் முழக்கம் (11) இஷ்ரத் (2) இஸ்ரேல் ஆக்கிரமிப்பு (1) இஸ்லாம் (3) ஈராக் (1) ஈரான் (2) உ.வாசுகி (1) உச்ச நீதிமன்றம் (1) உணவு நெருக்கடி (2) உதயசங்கர் (1) உத்தப்புரம் (1) உயர்கல்வி (2) உரையாடல்கள் (2) உலக சினிமா (4) உலகமயம் (5) உலகம் (46) உளவியல் (1) உள்ளாட்சி (1) உள்ளாட்சித் தேர்தல் (1) ஊடகங்கள் (14) ஊடகம் (8) ஊழல் (30) எடியூரப்பா (1) எம்.எப்.ஹூசேன் (1) எம்.சிவக்குமார் (2) எரிசக்தி (1) எல்.கே.ஜி (1) என்.ஜி.ஓ (1) என்கவுண்டர் (1) எஸ். பாலா (1) எஸ்.கண்ணன் (1) எஸ்.கருணா (3) எஸ்.பி.ராஜேந்திரன் (3) எஸ்.வி.வேணுகோபாலன் (2) ஏகாதிபத்தியம் (13) ஏமன் (1) ஒபாமா (4) ஓம்பிரகாஷ் வால்மீகி (1) ஓளிப்பதிவு (1) ஃபாக்ஸ்கான் (1) கச்சத் தீவு (1) கட்டுரை (51) கட்டுரைகள் (2) கணிணி (2) கணினி தொழில் நுட்பம் (1) கமல்ஹாசன் (1) கம்யூனிசம் (12) கருணாநிதி (11) கருத்து சுதந்திரம் (1) கருத்துரிமை (3) கலைஞர் (6) கல்வி (14) கவிதை (21) கவிதைகள் (1) கறுப்புப்பணம் (3) கனிமொழி (2) காங்கிரஸ் (10) காதல் (2) கால்பந்து (1) காவல்துறை (4) காஷ்மீர் (1) கி.பார்த்திபராஜா (1) கிங்பிஷர் (1) கியூபா (4) கிரீஸ் (1) குடும்பம் (1) குட்டி ரேவதி (1) குப்பன் சுப்பன் (1) குலாத்தி (1) குழந்தைகள் (9) குழந்தைகள் கடத்தல் (1) குஜராத் கலவரம் (1) குஜராத் படுகொலைகள் (1) கூகிள் அந்தரங்கம் (1) கூடங்குளம் (2) கே.சாமுவேல்ராஜ் (1) கே.பாலமுருகன் (1) கேள்விகள் (1) கைப்பற்றுவோம் போராட்டம் (1) கோவில் (1) ச.தமிழ்ச்செல்வன் (1) ச.மாடசாமி (1) சக்திஜோதி (1) சங்கமம் (1) சசிகலா (1) சச்சின் (1) சட்டசபை (2) சட்டம் (4) சத்யஜித் ரே (1) சந்திரகாந்தன் (1) சமச்சீர் கல்வி (4) சமவூதியம் (1) சமூக நீதி (2) சமூக வலைத்தளம் (1) சமூகப் பாதுகாப்பு (2) சமூகம் (177) சம்பு (1) சரத் பவார் (1) சர்வதேச பெண்கள் தினம் (1) சல்மான் ருஷ்டி (1) சா.கந்தசாமி (2) சா.செயக்குமார் (1) சாகித்திய அகாதமி விருது (1) சாக்லேட் (1) சாதீயம் (4) சாரா விஜி (2) சாலிம் அலி (1) சி.பி.எம் (9) சிக்கிம் (1) சிந்தனை (5) சிபி (1) சிராஜுதீன் (1) சில்லரை வர்த்தகம் (4) சிறப்பு பொருளாதார மண்டலங்கள் (1) சிறுகதை (12) சினிமா (52) சினிமா செய்திகள் (4) சினிமாச் செய்திகள் (4) சீத்தாராம் யெச்சூரி (2) சு.பொ.அகத்தியலிங்கம் (2) சு.வெங்கடேசன் (1) சுகாதாரம் (1) சுதிர் ரா (1) சுயமரியாதைத் திருமணம் (1) சுவாரசியம் (1) சுற்றுப்புறச் சூழல் (3) சூர்யா (1) செம்மலர் (4) செம்மலர் அக் 2011 (4) செய்திகள் (112) சென்னை (1) சோவியத் (1) சோஷலிசம் (1) டெல்லி (2) டேம் 999 (1) த.தமிழரசி (1) தகவல் உரிமை (1) தகவல் திருட்டு (2) தண்ணீர் (3) தமிழக மீனவர்கள் (1) தமிழகம் (66) தமிழர் (1) தமிழ்ச் சினிமா (1) தமிழ்நதி (1) தமுஎகச (4) தலித் (21) தற்கொலை (1) தனியார்மயம் (4) தனுஷ் (1) தி.க (2) திமுக (1) திரிணாமுல் (1) திருப்பூர் (2) திருமணம் (2) திரைக்குப் பின்னால் (2) திரைத்துறை (1) திரைப்பட விழா (1) திரைப்படம் (4) தினகரன் (1) தினமணி (3) தீக்கதிர் (9) தீண்டாமை (22) தீண்டாமையின் அடையாளங்கள் (1) தீபாவளி (1) தேசியச் செய்திகள் (4) தேர்தல் (4) தொண்டு நிறுவனங்கள் (1) தொலைக்காட்சி (2) தொழிலாளர் (6) ந.பெரியசாமி (1) நகர்ப்புற விவசாயம் (1) நகைச்சுவை (1) நக்கீரன் (1) நதிம் சயித் (1) நந்தலாலா (1) நந்தன் (1) நரேந்திர மோடி (6) நலத்திட்டங்கள் (2) நவம்பர் புரட்சி (1) நாடகம் (1) நாடாளுமன்றத் தேர்தல் 2014 (2) நாணய மதிப்பு (1) நாறும்பூநாதன் (1) நிகழ்வுகள் (154) நிலப்பிரபுத்துவம் (1) நிலமோசடி (1) நீதித்துறை (2) நீலவேந்தன் (2) நுகர்வுக் கலாச்சாரம் (2) நூல் அறிமுகம் (12) நூல் வெளியீடுகள் (1) நெல்சன் மண்டேலா (1) நேட்டோ (2) நையாண்டி (26) நையாண்டி் (14) ப.சிதம்பரம் (3) பசுபதி (1) படுகொலை (3) படைப்புகள் (2) பட்ஜெட் (1) பணவீக்கம் (2) பதிவர் வட்டம் (3) பதிவர்வட்டம் (1) பதிவுலகம் (1) பரிந்துரைகள் (5) பழங்குடி (1) பள்ளிக்கூடம் (1) பறவைகள் (1) பன்னாட்டுக் கம்பெனிகள் (3) பா.ஜ.க (3) பாகிஸ்தான் (2) பாடல் (5) பாதல் சர்க்கார் (1) பாதுகாப்பு (1) பாரதி (2) பாலபாரதி (1) பாலஸ்தீனம் (1) பாலியல் வன்முறை (6) பாலு மகேந்திரா (1) பால் சமத்துவம் (1) பாஜக (1) பி.சுகந்தி (1) பி.ராமமூர்த்தி (1) பிடல் காஸ்ட்ரோ (3) பிரணாப் முகர்ஜி (1) பிரபாத் பட்நாயக் (3) பிரளயன் (2) பிரிட்டன் (1) பிர்தவ்ஸ் ராஜகுமாரன் (1) பிளின் (1) பு.பெ.நவமபர் 2011 (1) புகைப்படங்கள் (1) புதிய பரிதி (2) புது விசை (12) புதுமை (1) புத்தக அறிமுகம் (2) புத்தகக் கண்காட்சிகள் (2) புத்தகம் (18) புத்தகம் பேசுது (17) புத்தகம் பேசுது நவம்பர் 2011 (8) புத்தகாலயம் (2) புத்தாண்டு (1) புபே (2) புபே டிச11 (8) புரட்சி (2) புவி (1) புவி டிச11 (5) புவி நவ 2011 (7) புனைவு (1) புஷ் (1) பெட்ரோல் (7) பெண் (11) பெண் விடுதலை (1) பெண்குழந்தை (1) பெண்ணியம் (9) பெண்ணெழுத்து (1) பெரியார் (2) பெருமுதலாளிகள் (7) பேட்டி (2) பேரா.சிவசுப்பிரமணியன் (2) பேஸ்புக் (1) பொருளாதார நெருக்கடி (2) பொருளாதாரம் (24) போக்குவரத்து (1) போராட்டம் (15) போலீஸ் தாக்குதல் (3) ப்ரிசம் (4) ப்ரிசம் - தகவல் திருட்டு (7) ப்ரியா தம்பி (1) மக்களுக்கான மருத்துவம் (1) மக்கள் நலப்பணியாளர்கள் (2) மக்கானா (1) மத அடிப்படை வாதம் (1) மதவெறி (3) மதுசூதனன் (1) மம்தா (3) மம்முட்டி (1) மரபணு (1) மலாலாய் சோயா (1) மவோயிஸ்டுகள் (1) மன்மதன் அம்பு (1) மன்மோகன்சிங் (10) மா ற்று (1) மாட்டுக்கறி (1) மாதர் சங்கம் (1) மாதவராஜ் (2) மாவோ (1) மாற்ற (1) மாற்று (223) மின்கட்டணம் (1) மின்சாரம் (1) மீள்பார்வை (2) முதலாளி (1) முதலாளித்துவம் (11) முத்தமாக மாறேன் (1) முத்துக்கண்ணன் (1) முல்லைப் பெரியாறு (7) முறைகேடுகள் (5) மெகாசீரியல் (1) மே.வங்க அரசு (1) மே.வங்கம் (1) மேதினம் (1) மேற்கு வங்கம் (1) மொக்கை (1) மொழி (2) மொழிபெயர்ப்பு (1) மோசடி (1) மோடி (3) மோனிகா (1) யுத்தம் (2) ரத யாத்திரை (1) ரமேஷ் பாபு (2) ராகுல் காந்தி (2) ராடியா (2) ராஜ பக்‌ஷே (1) ரிலையன்ஸ் (1) ருமேனியா (1) லட்சுமணப்பெருமாள் (2) லெனின் (2) லோக்பால் (5) வசந்த பாலன் (1) வண்ணக்கதிர் (1) வரலாறு (19) வலைப்பூக்கள் (1) வழக்கு விசாரணை (1) வாசிப்பு (5) வாச்சாத்தி (1) வால் ஸ்டிரிட் (3) வால்மார்ட் (1) வால்ஸ்டிரிட் போராட்டம் (2) வாழ்க்கை (4) வானியல் (2) விக்கிபீடியா (1) விக்கிலீகஸ் (1) விக்கிலீக்ஸ் (7) விஞ்ஞானம் (2) விமர்சனம் (10) விலையேற்றம் (2) விலைவாசி (11) விலைவாசி உயர்வு (2) விவாதங்கள் (1) விவாதம் (9) விளம்பரம் (1) விளையாட்டு (4) வினவு (1) விஜய் (2) விஜய் மல்லையா (1) வீட்டுவசதி வாரியம் (1) வீரமணி (2) வெண்மணி (2) வெள்ளம் (2) வெனிசுவெல்லா (1) வேலையின்மை (2) வோடாபோன் (1) ஜப்பான் நெருக்கடி (2) ஜாக்கிசான் (1) ஜாதி (1) ஜாபர் பனாகி (1) ஜூலியன் அசாங்க (1) ஜெயலலிதா (9) ஜோதிடம் (1) ஸ்டீவ் ஜாப்ஸ் (1) ஸ்பீல்பர்க் (2) ஸ்பெக்ட்ரம் (6)