- ஜோ.ராஜ்மோகன்
(இந்திய மாணவர் சங்க மாநிலச்செயலாளர்)
நான்கு வயது பெண் குழந்தையை பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாக்கி கொடுமைப்படுத்திய விழுப்புரம் மாவட் டம் கள்ளக்குறிச்சி ஏ.டி.ஜே பள்ளியின் பெண் முதல்வர் லேசிபோஸ்கோ, ஆசி ரியர் போஷியோ ஆகியோரை உடனடி யாக கைது செய்யுமாறும், இவ்வளவு நாள் வரை அவர்களை கைது செய்யாமல் இருந் தது ஏன்? என்பது குறித்தும் விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், கள் ளக்குறிச்சி காவல்நிலைய ஆய்வாளர் ஆகி யோரை செப்டம்பர் 27 அன்று நீதிமன்றத் தில் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டுமெனவும், மேலும், நான்கு வாரத் திற்குள் விசாரணை அறிக்கையை தாக் கல் செய்ய வேண்டுமெனவும், சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால், நீதிபதி டி.எஸ்.சிவஞா னம் ஆகியோர் உத்தரவிட்டனர். இந்த நட வடிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் பொதும்பு அரசு உயர் நிலைப் பள்ளி தலைமையாசிரியர் ஆரோக்கியசாமி, இப்பள்ளியில் படிக்கும் மாணவிகளை பாலியல் ரீதியாக தினந் தோறும் துன்புறுத்தி சித்ரவதை செய்துள் ளார். இது குறித்து கடும் போராட்டத்திற்கு பின்னே வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஆனால் காவல்துறை இரண்டு மாதமாகி யும் குற்றவாளியான ஆரோக்கியசாமியை கைது செய்யாமல் பாதுகாத்து வந்ததோடு, போராடிய பொதும்பு கிராம மக்களை காவல்துறை ஒவ்வொரு வீடாக சென்று மிரட்டிய அராஜக நடவடிக்கைக்கு ஜனநா யக அமைப்புகள் கடுமையான எதிர்ப்பு களை தெரிவித்தன.
ஜனநாயக மாதர் சங்கம் உள்ளிட்ட ஜனநாயக அமைப்புகளின் தொடர் போராட் டத்திற்கு பின்பு நடவடிக்கை எடுக்கப்பட் டுள்ளது. நாகை மாவட்டம் வேதா ரண்யம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள் ளியில் 80க்கும் மேற்பட்ட மாணவிகளி டம் இரட்டை அர்த்தத்தில் ஆபாசமாக பேசு வது, தொடுவது, கிள்ளுவது என்று பாலியல் சீண்டல் துன்புறுத்தல் நடவடிக் கையில் ஈடுபட்ட ஆசிரியர் சுந்தரவடி வேல் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டும், இன்றுவரை கைது செய்யாமல் காவல்துறை பாதுகாத்து வருகிறது. இத்த கைய அநீதி கண்டு வெகுண்டெழுந்த பெற்றோருடன் இந்திய மாணவர் சங்க மும் இணைந்து போராடி வருகிறது.
விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் சத்யாநகர் நகராட்சி நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் தனசேகரன், 8ம் வகுப்பு பயிலும் மூன்று தலித் மாணவி கள் மீது பாலியல் வன்முறை நடவடிக்கை களை ஏவியுள்ளார். மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் பாதிக்கப்பட்ட மாணவிகள் பெற்றோர்களிடம் கதறி புலம்பியுள்ளனர். ஆகஸ்ட்-15 லிருந்து இந்திய மாணவர் சங்கம் மற்றும் மனித உரிமை அமைப்பு களும் போராடியதன்பெயரில் வழக்கு மட் டும் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இன்றுவரை கைது செய்யப்படவில்லை. இப்படி தமிழக பள்ளிகளில் நடைபெறும் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை கள் தொடர் கதையாவது வேதனையளிக்கிறது.
பாதிக்கப்பட்டவர்கள் குழந்தையாக வும் பெண்களாகவும் இருப்பதால் எதிர்கா லம், குடும்ப கௌரவம், சமூகத்தில் விலக்கி வைக்கப்படுதல் போன்ற காரணங்களால் இப்படிப்பட்ட சம்பவங்களை பெரும்பாலும் வெளிக்கொணர்வதுமில்லை. ஆனால் அரசின் புள்ளி விவரத்தை பார்க்கிறபோது அதிர்ச்சியளிக்கிறது. பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ள அடிப்படையில், இந்தியா வில் 53.22 சதவீதம் குழந்தைகள் பாலியல் ரீதியான துன்புறுத்தல்களை சந்திக்கிறார் கள். இதில் 50 சதவீதம் துன்புறுத்தல்கள், குழந்தைகளின் நம்பிக்கையைப் பெற்ற, அவர்களுடன் நெருங்கிப் பழகுபவர்க ளால் ஏற்படுகிறது என்கிறது. மேலும் சர்வதேச புள்ளி விவரம் கூறுகிறபடி, நான் கில் இரண்டு பெண்குழந்தைகளும் ஆறில் ஒரு ஆண் குழந்தையும் பாலியல் வன் முறைக்கு பலியாகின்றனர். இது குறித்து ஐ.நா.வின் குழந்தைகள் அமைப்பான யுனி செப் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், உலக அளவில் 18 வயதுக்கு உட்பட்ட 150 மில்லியன் பெண் குழந்தைகளும் 73 மில் லியன் ஆண் குழந்தைகளும் வல்லுறவு உள்ளிட்ட பாலியல் சீண்டலுக்குள் தள் ளப்படுகிறார்கள் என்று அறிக்கை தெரி விக்கிறது.
இந்தியாவில் நடைமுறையில் உள்ள சட்டத்தில் இந்திய தண்டனைச் சட்டம் பாலியல் வன்முறை என்பது சட்டப்படி குற்றமாகச் சொல்கிறது. அதன்படி பாலி யல் வன்முறை அல்லது அதற்கான முயற்சி நடந்தால் அதை இச்சட்டம் தண் டனைக்குரிய குற்றமாக்குகிறது. இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 375, 376 ஆகி யவற்றில் கூட சரியான விளக்கங்கள் இல்லை என்றும், இச்சட்டப்பிரிவுகளில் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப் புக்காக இன்னும் ஏராளமான சரத்துக்கள் இணைக்கப்பட வேண்டுமெனவும் பெண் கள் அமைப்புகள் மற்றும் சமூக ஆர்வ லர்கள் குரல் எழுப்பி வருகின்றனர்.
இப்படிப்பட்ட குழந்தைகள் மற்றும் பெண்கள் மீதான பாலியல் குற்றங்களை தடுக்கும் வகையில், தடைச்சட்டம் வலு வான முறையில் இயற்றப்பட வேண்டும். அதற்கான சட்ட முன் வரைவுகளை பெண் உரிமை அமைப்புகள், குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் மனித உரிமை அமைப் புகள் உள்ளிட்ட ஜனநாயக இயக்கங்களி டம் கருத்துக்களை பெற்று உருவாக்க வேண்டும்.
ஆனால் உடனடி நடவடிக்கையாக இப்படிப்பட்ட புகாரின் மீதான தண்ட னையை உறுதிபடுத்த ஜனநாயக அமைப்புகள் வலுவான போராட்டங்களை முன்னெடுத்துச் செல்ல வேண்டியுள்ளது.
இப்படிப்பட்ட பெரும்பாலான புகார்கள் பதிவு செய்யப்படுவதும் இல்லை. புகார் கள் பதிவு செய்யப்பட்டாலும் உரிய வழக்கு களின்படி குற்றவாளிகள் தண்டிக்கப்படு வதுமில்லை என்பதுதான் உண்மை. பாலி யல் குற்றங்களை பதிவு செய்து, குற்றங்கள் மீதான உரிய நடவடிக்கையை காவல்துறை உறுதிப்படுத்த வேண்டும். சமூகத்தின் மீது அக்கறை கொண்ட ஆசிரியர் அமைப் புகள், மாணவர் இயக்கங்கள், மக்கள் இயக்கங்கள், மனித உரிமை அமைப்புகள் இப்படிப்பட்ட கொடுமை களுக்கு எதிராக வலுவாக குரல் கொடுக்க வேண்டும்.
மேலும் பள்ளிக் குழந்தைகள் மீதான வன்முறையை தடுத்திட, தமிழக பள்ளி கள் தோறும் குழந்தைகள் பாதுகாப்பு உரி மைகள் குறித்த விழிப்புணர்வுகளை ஏற் படுத்திட, குழந்தைகள் உரிமை பாதுகாப் புக் குழுக்களை உருவாக்கிட வேண்டும். இதன் மூலம் குழந்தைகள் மீதான வன் முறைகள் தடுக்கப்படுவதோடு, கல்வி பாதுகாப்பையும் உறுதிப்படுத்த முடியும்.
(நன்றி - தீக்கதிர்)
0 comments:
Post a Comment