“மங்கை சூதகமானால் கங்கையில் மூழ்கலாம்; கங்கையே சூதகமானால் எங்கே மூழ்குவது” என தேர்தல் ஆணையச் செயல்பாடுகளை கலைஞர் விமர்சனம் செய்திருக்கிறார். இதைப் படிக்கிறபோது தேர்தல் ஆணையம் ஏதோ நேர் மையாக செயல்படுவது போலவும் அதைக் கண்டு கலைஞர் எகிறிப் பாய்வதுபோலவும் தோன்றும். ஆனால், இது இடமாறுத் தோற்றப் பிழையே. உண்மையில் தேர்தல் ஆணையத்தினுடைய செயல்பாடுகள் சந்தேகத்திற்கு அப்பாற்பட்ட தாக இல்லை என்பதே உண்மை.
அன்றாடம் வாக்காளர்களுக்கு விநியோகிக் கக் கொண்டுசெல்லப்பட்ட பணம் மற்றும் பரிசுப் பொருள்கள் கைப்பற்றப்பட்டன என்கிற பரபரப்பான செய்திகள் வருவது ஒருபுறம். ஆனால், ஆளும் கட்சியினர் மிக நுட்பமாக திட்டமிட்டு பணத்தை வாரியிறைப்பதை கிஞ் சிற்றும் இது தடுத்திடவில்லை என்பதே உண்மை. இன்னும் சொல்லப்போனால் ‘பணப் பட்டுவாடாவின் அதிகார மையம்’ எந்தவிதமான தடையும் இல்லாமல் செயல்பட்டுக்கொண்டி ருக்கிறது என்பதே உண்மை.
சின்னக் கட்சிகள் சுவர் விளம்பரம், தட்டி போர்டு, கலைநிகழ்ச்சிகள், வீடு வீடாக பிரச்சாரம் இதை நம்பித்தான் களத்தில் நிற்கின்றன. இதற்கு ஆயிரம் கெடுபிடிகள். குறிப்பாக கட்சி சின்னம் பொறித்த பனியன், சட்டை, புடவை, தொப்பி அணியத் தடை. அதேசமயம் ஆளுங்கட்சி ஊடகம், எதிர் அணி குறித்து உண் மைக்குப் புறம்பான செய்திகளை அன்றாடம் கொட்டிக் கொண்டிருக்கிறது. இதை யார் தடுப்பது? தேர்தல் ஆணையம் பதில் சொல்லுமா?
விளம்பரங்கள் மற்றும் பிரச்சாரத்தில் தனி நபர் தாக்குதல் கூடாது; கொள்கைத் திட்டங்களைத் தான் கூறவேண்டும் என்றெல்லாம் தேர்தல் ஆணையம் கிடுக்கிப்பிடி போடுகிறது. ஆனால், ஊடகங்களை தன் கைப்பிடியில் வைத்திருக் கும் ஆளுங்கட்சி அப்படித்தான் செயல்படுகிறதா? அதை யார் கண்காணிக்கிறார்கள்? கடந்த நாடா ளுமன்றத் தேர்தலில் மேற்கு வங்கத்தில் இப்ப டிப் பலமுனை நெருக்கடிகளை உருவாக்கி இடதுசாரிகளின் பிரச்சாரத்தை தேர்தல் ஆணை யம் முடக்க முனைந்தது. ஆனால், இடதுசாரித் தொண்டர்கள் தங்கள் உடலில் கட்சி சின்னத்தை வரைந்துகொண்டு வீதி வீதியாக, வீடு வீடாகப் போய் தேர்தல் ஆணையத்தின் தந்திரத்தை முறியடித்து தங்கள் குறிக்கோளைப் பிரச்சாரம் செய்தனர். இப்போதும் கிட்டத்தட்ட அதே நிலை- அதைவிடக் கடுமையான நிலை தான் உள்ளது.
மேல்தட்டு மக்கள் கருதுவதுபோல் மக்களி டம் செல்லாமல், பேசாமல் வெறும் தொலைக் காட்சி மூலம் மட்டுமே பிரச்சாரம் என்பது பணம் படைத்த கட்சிகளுக்கு சாதகமாகும். உழைப் பாளி மக்களுக்கு சாதகமான அரசியல் நேர் எதிர்திசையிலானது. அதை இன்றைய ஊடகங் கள் முன்னிறுத்த மாட்டாது. மாறாக மக்களை நேரடியாக வீடு வீடாகச் சந்திப்பதும் - தெரு முனைக் கூட்டங்கள், பொதுக் கூட்டங்கள், ஊர்க்கூட்டங்கள், கலந்துரையாடல்கள், கலைநிகழ்ச்சிகள், வீதி நாடகங்கள், துண்டுப் பிரசுரங்கள், சுவரெழுத்து, தட்டிபோர்டு, கண்காட்சிகள் என எளிய முறை யில்தான் உழைப்பாளி மக்களின் அரசியலை பிரச்சாரம் செய்ய இயலும். இதற்கும் தேவையற்ற கெடுபிடிகளை தேர்தல் ஆணையம் உண்டாக்கு வதும் காவல்துறையின் மூலம் கெடுபிடி செய் வதும் ஜனநாயகத்தை பாதுகாக்க உதவாது. அதே நேரத்தில் ஆளுங்கட்சியின் பணபலத்தை, அடி யாள் பலத்தை தடுத்து நிறுத்த தேர்தல் ஆணை யம் உண்மையில் என்ன செய்யப்போகிறது என்பதுதான் கேள்வி.
0 comments:
Post a Comment