Monday, November 15, 2010

கைபிகோ 302


அழிக்கும் கடவுளான சிவபெருமான் பொது தர்மத்திற்குத்தான் தன்னோட அழிவு சக்தியை பயன்படுத்தலாமே தவிர சொந்த காரண காரியங்களுக்கு பயன்படுத்தினால் அது கொலை வழக்ககாத்தான் கருதப்படும்ங்கிறது கைலேங்கிரி பீனல்கோடிலுள்ள ஷரத்து. 

அப்படியொரு கொலை வழக்கு விஷயமா கைலேங்கிரி ஹைகோர்ட் போயிட்டு அலுப்பா மலைக்கு வந்து சேர்ந்த புருசனை பார்வதியம்மா எதிர்கொண்டு என்னங்க. என்னாச்சுன்னு கேட்ட மட்டுல அவர் கையிலிருந்த திரிசூலத்தை வாங்கி மூலையில சாத்தி வச்சு கழுத்தில கிடந்த பாம்பை எடுத்து அசையில தொங்கவிட்டு ஆசுவாசப்படுத்துனா.

"உஸ்.... சும்மாயிரு. பையன்க காதுல விழுகப்போகுது அப்படீன்னார்." மூத்தவன் இல்லே இளையவன் முருகந்தான் இருக்கான் சும்மா சொல்லுங்கன்னு சொல்லிக்கிட்டிருக்கும்போதே முருகன் விறுவிறுன்னு பக்கத்திலே வந்து "என்னப்பா ஆச்சு வாய்தா. அப்படி. என்ன கேசு ஒம்மேலே' அப்படீன்னான்.

சரி பய பெரிய பிள்ளையாயிட்டான். என்னைக்கிருந்தாலும் தெரியத்தான் போகுது. நானே சொல்லிர்றேன் அப்படீன்னு ஆரம்பிச்சா பார்வதி.

"அது வந்துப்பா முருகா! முன்னாடி ஒருநா நான் குளிக்கணும்னு கொல்லைப்பக்கமா போனேன். அந்நேரம் உங்கப்பா வெளியே போயிட்டாரு. குளிக்கும் போது காவலுக்கு யாருமில்லேயேன்னு ரோசனை பண்ணுனேன்."

"காவலுக்கா அதுசரி கைலேங்கிரியிலேயே எட்டிப் பாத்துர்றானா பொம்பளை குளிக்கிறதை, அதுவும் பரமசிவர் பெண்ஜாதி குளிக்கிறதை. உலகம் விளங்கிப்போகும். சரி பிறகு?"

"பிறகென்ன உடம்புல இருக்கிற அழுக்கை திரட்டி ஒரு உருவம் செஞ்சேன்."

"க்கும் அதென்ன அவ்வளவு அழுக்கு, இங்கே உனக்கு என்ன வேலை. என்னம்மா கரிசக் காட்டுல களையெடுக்கிற பொம்பளை மாதிரி. வெடி ஆபீஸிலெ தீப்பெட்டி கம்பெனியில வேலை செய்திட்டு குளிக்கிறதுக்கே தீரலைங்கிற மாதிரி அலைஞ்சிருக்கே! அப்பவும் அழுக்கு ஒரு உருவம். செய்யுற அளவுக்கா?பாம்பு சட்டை உரிச்ச மாதிரி."

"சொல்றதை கேளுப்பா"

"இல்லே இல்லே அதுதான் உனக்கு சக்தின்னு இங்கே. எவனோ உங்கிட்டே புளுகி இருக்கான். குளிச்சா பலம் போயிரும்ன்னு பயமுறுத்திருப்பான்".

"சும்மாயிரு அம்மாவை கேலிபண்ண இதுவா நேரம். கொறக்கதையை கேளு. அப்படி அந்த உருவத்தை வாசலுக்கு வெளியே காவல் வச்சிட்டு உள்ளே குளிக்கப்போனேன்."

"யாரை? அந்த அழுக்குருண்டையை காவல் வச்சிட்டு!"

"ஆமாமா உள்ளே குளிச்சிட்டு இருந்தனா..."

இப்பொ பரமசிவனாகிய சிவபெருமாள் கதையை தொடங்குனார்.

"அப்பொ நான் லாத்தலா வெளியே போயிட்டு உள்ளே நொழஞ்சேன். திடீர்ன்னு கைய ரெண்டையும் விரிச்சி மறிச்சி உள்ளே போகக் கூடாது. அப்படீன்னு குறுக்கே நின்னான்".

"யாரு? அந்த அழுக்குருண்டையா!"

"ஆமா... டேய் நீ யார்ரா அதச்சொல்ல நா யார்ன்னு தெரியுமா அப்படீன்னு நாக்கை துருத்தி முறுக்கிக்கிட்டு போடா போன்னுட்டு ஒரு எட்டு எடுத்து வச்சேன்".

"நீ யாரா இருந்தா எனகென்ன போயா அந்தப் பக்கம் எங்க அம்மா குளிச்சிட்டு இருக்குங்கிறேன். அப்படீன்னு என்ன நெட்டி தள்ளிவிட்டான். அவ்வளதான் எனக்குக் கோபம் அண்டகடாரம் முட்டிப்போச்சி. இடுப்பிலிருந்த வாளை எடுத்து தலையை ஒரே சீவு!"

முருகன் அப்பனைப் பார்த்து இகழ்ச்சியா கையை நீட்டி நீயெல்லாம்  ஒரு மனுசன்ங்கிற மாதிரி மூஞ்சியை வச்சுக்கிட்டு சொன்னான்.

"இங்கெ பாருப்பா ஒரு பொம்பளை குளிச்சிட்டு வர்றதுக்கு எவ்வளவு நேரம் ஆயிரும். அதுவரைக்கு பொறுக்கலையா. ஒரு படுகொலையை பண்ணிட்டு போற அளவுக்கு அங்கே என்ன இருக்கு. இல்லே இதுக்கு முன்னாடி பாராததை பாக்கப்போறியா".

சிவபெருமாள் தலைய கவிழ்ந்த மட்டுல இருந்தார். அன்றைக்கிருந்த சோகம் போலவே இப்பொ இருந்து கொண்டு பார்வதி தொடர்ந்து சொன்னாள்.

"வெளியே வந்து பாக்குறேன். எம்பிள்ளை தலைவேற முண்டம் வேறயா கிடக்கான். அடப்பாவி மனுசா நீ விளங்குவியா துலங்குவியான்னு அழுதேன். நான் அழுகிறதை பார்க்கப் பொறாத இந்த மனுசன் சரி சரி நடந்தது நடந்து போச்சி. இதுக்கு வேற ஏற்பாடு பண்ணுதேம்முன்னு அந்தப் பக்கமா ஒரு யானை போயிட்டு இருந்தது. அதோட தலையை வெட்டி இந்த உடம்புல பொருத்தி உங்க அண்ணன் பிள்ளையார் பொறந்தான்."

"நல்ல வேளை அந்த நேரம் யானை தட்டுப்பட்டது. நாய்நரி வராம. இந்த லட்சணத்துல என்னைப் பாத்து நீ அம்மா வயித்துலயா பெறந்தே அப்படீன்னு கேக்கான். நான் அப்பா நெத்திக்கண்ணுல பொறந்ததை தெரிஞ்சுக்கிட்டு இவன் பிறவிக் கூறு தெரியாம. மடையன். எனக்கு முன்னாடியே சந்தேகம். இவன் எப்படி அம்மா வயித்துல பிறந்திருக்க முடியும். அப்படியே பிறந்திருந்தாலும் என்ன லட்சணத்திலே பால் குடிச்சிருப்பான்."

"சரி சரி அண்ணன்கிட்டெ அது இதெச்சொல்லி பழையபடி சண்டையைப் போடாதீங்க. விசயம் நமக்குள்ளேயே இருக்கட்டும்".

"அது கிடக்கட்டும் இப்பொ கோர்ட்டுல ஒம்மேல கொலைக்கேஸ்தானே நடக்கு".

"ரெட்டைக்கொலை. வாட்ச்மேனை கொன்னேன்னு ஒரு கேஸ். யானையை கொன்னேன்னு வனவிலங்கு பாதுகாப்பு சட்டப்படி ஒரு கேஸ்."

"அதான் ஒரு உசிரை உண்டாக்கி விட்டாச்சுல்லே. பிள்ளையாருங்கிற பேர்ல!"

"கொன்னது வாஸ்தவமா இல்லையா. ஆமா இல்லை ரெண்டுல ஒரு பதில் சொல்லுங்கிறான். சர்க்கார் வக்கீல். உற்பத்தி பண்ணுறது உன் வேலை இல்லைனுட்டான்."

"அடுத்த வாய்தா எப்பவாம்?".

"இன்னும் ஜட்ஜ்மெண்ட்தான். கலியுகத்திலே."

"அதென்ன வருசம் மாசம் கணக்கு இல்லாம யுகக்கணக்கு."

அடேய் இந்த மனுசர்களுக்கு நூறு வருசம்ன்னா நமக்கு ஒரு மணி நேரம்தான் கணக்கு. மனுசப்பதர்களுக்கு உண்டான கால அளவு நம்ம மாதிரி தேவாதி தேவர்களுக்கு கிடையாது. அதாவது இப்படிச் சொல்றேன் தெரிஞ்சுக்கோ.

"பிரம்மாவுடைய பேரன் ராவணன். பிரம்மா ஒருநாள் காலையில 'வெளிக்கி' கிளம்பிப் போனாராம். அப்பொ இடையில ஒரு ஆள் வந்து உங்களுக்கு பேரன் பிறந்திருக்கான் அப்படீன்டிருக்கார். சந்தோசம் சந்தோசம்ன்னு சிரிச்சுக்கிட்டே போயிட்டாராம்.

திரும்ப வந்து கால் கழுவ செம்புல தண்ணி மொண்டாராம். உங்க பேரன் ராவணன் செத்துப்போனான்னு தகவல் வந்திருக்குன்னு சரஸ்வதி வந்து சொன்னாளாம். தெரியும் தெரியும் இந்தா தலையில தண்ணி விடப்போறேன்னாராம்.

அதாவது பிரம்மா வெளியே இருந்துட்டு வந்து கால்கழுவும் முன்னால ராமன் - ராவணன் பிறந்து வளர்ந்து வனவாசமாகி ராம-ராவண யுத்தம் முடிஞ்சு போச்சாம். எல்லாம் கதைதானே. ஏற்கெனவே பிரம்மாவோட நாலாவது மண்டையப் பிச்சு எடுத்திட்டேன்ன ஒரு கேஸ்பெண்டிங்ல இருக்கு. இப்போ தேவர்களுக்கு ஆயுள்காலம் எவ்வளவு? 



-எஸ்.இலட்சுமணப்பெருமாள் .   நன்றி: செம்மலர்

1 comment:

  1. பின்றாரே..லட்சு..அட்டகாசமான கதை..

    ReplyDelete

Labels

Coca Cola (1) Peak Oil (1) Permaculture (1) Power of Community (1) Renewable energy (1) Solar energy (1) SOPA (1) sustainable agriculture (1) அ.குமரேசன் (6) அங்காடிதெரு (1) அணு ஆற்றல் (2) அணுமின் (1) அண்ணா (4) அண்ணா நூலகம் (1) அதிர்ச்சி (1) அத்வானி (2) அந்நிய முதலீடு (2) அபிநயா (1) அப்துல் கலாம் (1) அப்பணசாமி (2) அமெரிக்கா (20) அம்பானி (1) அம்பேத்கர் (9) அரசியல் (177) அரசியல்.நிகழ்வுகள் (6) அரசு (14) அரசு மருத்துவமனை (1) அரசு விடுதி மாணவர்கள் (1) அரவான் (1) அருந்ததியர் (1) அர்ஜெண்டினா (1) அலசல் (1) அவலம் (19) அழகு (1) அறிமுகம் (1) அனுபவம் (28) அன்னா ஹசாரே (1) அஜயன் பாலா (1) ஆ.ராசா (1) ஆணையம் (2) ஆதவன் தீட்சண்யா (3) ஆப்கானிஸ்தான் (1) ஆப்பிரிக்கா (2) ஆர்.மீனா (1) ஆர்எஸ்எஸ் (2) ஆவணப்படம் (3) ஆனந்தன் (2) இ.எம்.ஜோசப் (1) இ.பா.சிந்தன் (22) இட ஓதுக்கீடு (3) இடஒதுக்கீடு (1) இடதுசாரிகள் (4) இணையம் (2) இதழ்கள் (6) இந்தியா (69) இந்துத்துவா (8) இந்துஜா (1) இமு (2) இமு டிச11 (5) இமு நவமபர் 2011 (6) இயக்கம் (7) இயக்குனர் ஷங்கர் (1) இரா.சிந்தன் (5) இரா.செழியன் (2) இரா.நடராஜன் (3) இராம.கோபாலன் (1) இல.சண்முகசுந்தரம் (2) இலக்கியம் (38) இலங்கை (6) இலங்கைத் தமிழர் (4) இலவசக் கல்வி (1) இலவசங்கள் (1) இளவரசன் கொலை (1) இளைஞர் முழக்கம் (11) இஷ்ரத் (2) இஸ்ரேல் ஆக்கிரமிப்பு (1) இஸ்லாம் (3) ஈராக் (1) ஈரான் (2) உ.வாசுகி (1) உச்ச நீதிமன்றம் (1) உணவு நெருக்கடி (2) உதயசங்கர் (1) உத்தப்புரம் (1) உயர்கல்வி (2) உரையாடல்கள் (2) உலக சினிமா (4) உலகமயம் (5) உலகம் (46) உளவியல் (1) உள்ளாட்சி (1) உள்ளாட்சித் தேர்தல் (1) ஊடகங்கள் (14) ஊடகம் (8) ஊழல் (30) எடியூரப்பா (1) எம்.எப்.ஹூசேன் (1) எம்.சிவக்குமார் (2) எரிசக்தி (1) எல்.கே.ஜி (1) என்.ஜி.ஓ (1) என்கவுண்டர் (1) எஸ். பாலா (1) எஸ்.கண்ணன் (1) எஸ்.கருணா (3) எஸ்.பி.ராஜேந்திரன் (3) எஸ்.வி.வேணுகோபாலன் (2) ஏகாதிபத்தியம் (13) ஏமன் (1) ஒபாமா (4) ஓம்பிரகாஷ் வால்மீகி (1) ஓளிப்பதிவு (1) ஃபாக்ஸ்கான் (1) கச்சத் தீவு (1) கட்டுரை (51) கட்டுரைகள் (2) கணிணி (2) கணினி தொழில் நுட்பம் (1) கமல்ஹாசன் (1) கம்யூனிசம் (12) கருணாநிதி (11) கருத்து சுதந்திரம் (1) கருத்துரிமை (3) கலைஞர் (6) கல்வி (14) கவிதை (21) கவிதைகள் (1) கறுப்புப்பணம் (3) கனிமொழி (2) காங்கிரஸ் (10) காதல் (2) கால்பந்து (1) காவல்துறை (4) காஷ்மீர் (1) கி.பார்த்திபராஜா (1) கிங்பிஷர் (1) கியூபா (4) கிரீஸ் (1) குடும்பம் (1) குட்டி ரேவதி (1) குப்பன் சுப்பன் (1) குலாத்தி (1) குழந்தைகள் (9) குழந்தைகள் கடத்தல் (1) குஜராத் கலவரம் (1) குஜராத் படுகொலைகள் (1) கூகிள் அந்தரங்கம் (1) கூடங்குளம் (2) கே.சாமுவேல்ராஜ் (1) கே.பாலமுருகன் (1) கேள்விகள் (1) கைப்பற்றுவோம் போராட்டம் (1) கோவில் (1) ச.தமிழ்ச்செல்வன் (1) ச.மாடசாமி (1) சக்திஜோதி (1) சங்கமம் (1) சசிகலா (1) சச்சின் (1) சட்டசபை (2) சட்டம் (4) சத்யஜித் ரே (1) சந்திரகாந்தன் (1) சமச்சீர் கல்வி (4) சமவூதியம் (1) சமூக நீதி (2) சமூக வலைத்தளம் (1) சமூகப் பாதுகாப்பு (2) சமூகம் (177) சம்பு (1) சரத் பவார் (1) சர்வதேச பெண்கள் தினம் (1) சல்மான் ருஷ்டி (1) சா.கந்தசாமி (2) சா.செயக்குமார் (1) சாகித்திய அகாதமி விருது (1) சாக்லேட் (1) சாதீயம் (4) சாரா விஜி (2) சாலிம் அலி (1) சி.பி.எம் (9) சிக்கிம் (1) சிந்தனை (5) சிபி (1) சிராஜுதீன் (1) சில்லரை வர்த்தகம் (4) சிறப்பு பொருளாதார மண்டலங்கள் (1) சிறுகதை (12) சினிமா (52) சினிமா செய்திகள் (4) சினிமாச் செய்திகள் (4) சீத்தாராம் யெச்சூரி (2) சு.பொ.அகத்தியலிங்கம் (2) சு.வெங்கடேசன் (1) சுகாதாரம் (1) சுதிர் ரா (1) சுயமரியாதைத் திருமணம் (1) சுவாரசியம் (1) சுற்றுப்புறச் சூழல் (3) சூர்யா (1) செம்மலர் (4) செம்மலர் அக் 2011 (4) செய்திகள் (112) சென்னை (1) சோவியத் (1) சோஷலிசம் (1) டெல்லி (2) டேம் 999 (1) த.தமிழரசி (1) தகவல் உரிமை (1) தகவல் திருட்டு (2) தண்ணீர் (3) தமிழக மீனவர்கள் (1) தமிழகம் (66) தமிழர் (1) தமிழ்ச் சினிமா (1) தமிழ்நதி (1) தமுஎகச (4) தலித் (21) தற்கொலை (1) தனியார்மயம் (4) தனுஷ் (1) தி.க (2) திமுக (1) திரிணாமுல் (1) திருப்பூர் (2) திருமணம் (2) திரைக்குப் பின்னால் (2) திரைத்துறை (1) திரைப்பட விழா (1) திரைப்படம் (4) தினகரன் (1) தினமணி (3) தீக்கதிர் (9) தீண்டாமை (22) தீண்டாமையின் அடையாளங்கள் (1) தீபாவளி (1) தேசியச் செய்திகள் (4) தேர்தல் (4) தொண்டு நிறுவனங்கள் (1) தொலைக்காட்சி (2) தொழிலாளர் (6) ந.பெரியசாமி (1) நகர்ப்புற விவசாயம் (1) நகைச்சுவை (1) நக்கீரன் (1) நதிம் சயித் (1) நந்தலாலா (1) நந்தன் (1) நரேந்திர மோடி (6) நலத்திட்டங்கள் (2) நவம்பர் புரட்சி (1) நாடகம் (1) நாடாளுமன்றத் தேர்தல் 2014 (2) நாணய மதிப்பு (1) நாறும்பூநாதன் (1) நிகழ்வுகள் (154) நிலப்பிரபுத்துவம் (1) நிலமோசடி (1) நீதித்துறை (2) நீலவேந்தன் (2) நுகர்வுக் கலாச்சாரம் (2) நூல் அறிமுகம் (12) நூல் வெளியீடுகள் (1) நெல்சன் மண்டேலா (1) நேட்டோ (2) நையாண்டி (26) நையாண்டி் (14) ப.சிதம்பரம் (3) பசுபதி (1) படுகொலை (3) படைப்புகள் (2) பட்ஜெட் (1) பணவீக்கம் (2) பதிவர் வட்டம் (3) பதிவர்வட்டம் (1) பதிவுலகம் (1) பரிந்துரைகள் (5) பழங்குடி (1) பள்ளிக்கூடம் (1) பறவைகள் (1) பன்னாட்டுக் கம்பெனிகள் (3) பா.ஜ.க (3) பாகிஸ்தான் (2) பாடல் (5) பாதல் சர்க்கார் (1) பாதுகாப்பு (1) பாரதி (2) பாலபாரதி (1) பாலஸ்தீனம் (1) பாலியல் வன்முறை (6) பாலு மகேந்திரா (1) பால் சமத்துவம் (1) பாஜக (1) பி.சுகந்தி (1) பி.ராமமூர்த்தி (1) பிடல் காஸ்ட்ரோ (3) பிரணாப் முகர்ஜி (1) பிரபாத் பட்நாயக் (3) பிரளயன் (2) பிரிட்டன் (1) பிர்தவ்ஸ் ராஜகுமாரன் (1) பிளின் (1) பு.பெ.நவமபர் 2011 (1) புகைப்படங்கள் (1) புதிய பரிதி (2) புது விசை (12) புதுமை (1) புத்தக அறிமுகம் (2) புத்தகக் கண்காட்சிகள் (2) புத்தகம் (18) புத்தகம் பேசுது (17) புத்தகம் பேசுது நவம்பர் 2011 (8) புத்தகாலயம் (2) புத்தாண்டு (1) புபே (2) புபே டிச11 (8) புரட்சி (2) புவி (1) புவி டிச11 (5) புவி நவ 2011 (7) புனைவு (1) புஷ் (1) பெட்ரோல் (7) பெண் (11) பெண் விடுதலை (1) பெண்குழந்தை (1) பெண்ணியம் (9) பெண்ணெழுத்து (1) பெரியார் (2) பெருமுதலாளிகள் (7) பேட்டி (2) பேரா.சிவசுப்பிரமணியன் (2) பேஸ்புக் (1) பொருளாதார நெருக்கடி (2) பொருளாதாரம் (24) போக்குவரத்து (1) போராட்டம் (15) போலீஸ் தாக்குதல் (3) ப்ரிசம் (4) ப்ரிசம் - தகவல் திருட்டு (7) ப்ரியா தம்பி (1) மக்களுக்கான மருத்துவம் (1) மக்கள் நலப்பணியாளர்கள் (2) மக்கானா (1) மத அடிப்படை வாதம் (1) மதவெறி (3) மதுசூதனன் (1) மம்தா (3) மம்முட்டி (1) மரபணு (1) மலாலாய் சோயா (1) மவோயிஸ்டுகள் (1) மன்மதன் அம்பு (1) மன்மோகன்சிங் (10) மா ற்று (1) மாட்டுக்கறி (1) மாதர் சங்கம் (1) மாதவராஜ் (2) மாவோ (1) மாற்ற (1) மாற்று (223) மின்கட்டணம் (1) மின்சாரம் (1) மீள்பார்வை (2) முதலாளி (1) முதலாளித்துவம் (11) முத்தமாக மாறேன் (1) முத்துக்கண்ணன் (1) முல்லைப் பெரியாறு (7) முறைகேடுகள் (5) மெகாசீரியல் (1) மே.வங்க அரசு (1) மே.வங்கம் (1) மேதினம் (1) மேற்கு வங்கம் (1) மொக்கை (1) மொழி (2) மொழிபெயர்ப்பு (1) மோசடி (1) மோடி (3) மோனிகா (1) யுத்தம் (2) ரத யாத்திரை (1) ரமேஷ் பாபு (2) ராகுல் காந்தி (2) ராடியா (2) ராஜ பக்‌ஷே (1) ரிலையன்ஸ் (1) ருமேனியா (1) லட்சுமணப்பெருமாள் (2) லெனின் (2) லோக்பால் (5) வசந்த பாலன் (1) வண்ணக்கதிர் (1) வரலாறு (19) வலைப்பூக்கள் (1) வழக்கு விசாரணை (1) வாசிப்பு (5) வாச்சாத்தி (1) வால் ஸ்டிரிட் (3) வால்மார்ட் (1) வால்ஸ்டிரிட் போராட்டம் (2) வாழ்க்கை (4) வானியல் (2) விக்கிபீடியா (1) விக்கிலீகஸ் (1) விக்கிலீக்ஸ் (7) விஞ்ஞானம் (2) விமர்சனம் (10) விலையேற்றம் (2) விலைவாசி (11) விலைவாசி உயர்வு (2) விவாதங்கள் (1) விவாதம் (9) விளம்பரம் (1) விளையாட்டு (4) வினவு (1) விஜய் (2) விஜய் மல்லையா (1) வீட்டுவசதி வாரியம் (1) வீரமணி (2) வெண்மணி (2) வெள்ளம் (2) வெனிசுவெல்லா (1) வேலையின்மை (2) வோடாபோன் (1) ஜப்பான் நெருக்கடி (2) ஜாக்கிசான் (1) ஜாதி (1) ஜாபர் பனாகி (1) ஜூலியன் அசாங்க (1) ஜெயலலிதா (9) ஜோதிடம் (1) ஸ்டீவ் ஜாப்ஸ் (1) ஸ்பீல்பர்க் (2) ஸ்பெக்ட்ரம் (6)